மேலும் அறிய

Polluted Capital: 4-வது ஆண்டாக டெல்லி முதலிடம் - உலகில் மோசமாக காற்று மாசடைந்த தலைநகரங்களின் பட்டியல்

Polluted Capitals: உலகில் மோசமாக மாசடைந்த தலைநகரங்களின் பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக டெல்லி முதலிடம் பிடித்துள்ளது.

Polluted Capitals: உலகில் மோசமாக மாசடைந்த தலைநகரங்களின் பட்டியலை, உலக காற்று தர அறிக்கை அமைப்பு வெளியிட்டுள்ளது.

காற்று மாசுபாட்டில் டெல்லி முதலிடம்:

சுவிட்சர்லாந்தச் சேர்ந்த காற்று தரக்குறியீடு அமைப்பான, IQAir உலக காற்று தர அறிக்கை 2023 அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி,  டெல்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. உலக நாடுகளின் தலைநகரங்களில் மிகவும் மோசமான, காற்றின் தரத்தை கொண்டுள்ள தலைநகரமாக டெல்லி தொடர்ந்து நான்காவது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.   டெல்லியின் PM2.5 அளவுகள் 2022 இல் ஒரு கன மீட்டருக்கு 89.1 மைக்ரோகிராமில் இருந்து 2023 இல் 92.7 மைக்ரோகிராமாக மோசமடைந்துள்ளது.

காற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்:

அதே நேரத்தில் பீகாரின் பெகுசராய் உலகின் மிகவும் மாசுபட்ட பெருநகரப் பகுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டிற்கான பட்டியலில் கூட இல்லாத இந்த நகரம், 2023ம் ஆண்டு பட்டியலில் நேரடியாக முதலிடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி, 2023 ஆம் ஆண்டில் 134 நாடுகளில் நடந்த ஆய்வில்  இந்தியா மூன்றாவது மோசமான காற்றின் தரத்தைக கொண்டிருந்துள்ளது. இந்த பட்டியலில் வங்காளதேசம் மற்றும்  பாகிஸ்தான் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. அதேநேரம், 2022 ஆம் ஆண்டில், இந்தியா ஒரு கன மீட்டருக்கு சராசரியாக 53.3 மைக்ரோகிராம் PM2.5 செறிவுடன், மிக மோசமான காற்றின் தரத்தை கொண்ட நாடுகளின்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் காற்றின் நிலை:

உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள காற்றில் இருக்க வேண்டிய நுண்துகள்களின் எண்ணிக்கையை காட்டிலும், இந்தியாவில் 7 மடங்கு அதிகமாக உள்ளது. இதனை 133 கோடி மக்கள் சுவாசிப்பதாக, அதாவது இந்திய மக்கள் தொகையில் 96 சதவிகிதம் பேர் மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 66 சதவிகிதத்திற்கும் அதிகமான நகரங்கள் ஆண்டு சராசரியாக, ஒரு கன மீட்டருக்கு 35 மைக்ரோகிராம்களை விட அதிகமான நுண் துகள்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகளுக்கு ஆபத்து:

PM2.5 காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு ஆஸ்துமா, புற்றுநோய், பக்கவாதம் மற்றும் நுரையீரல் நோய் போன்ற பல சுகாதார பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே இருக்கும் நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் மேலும் சிக்கலாகலாம். உயர்ந்த அளவிலான நுண்ணிய துகள்கள் காற்றில் இருப்பது, குழந்தைகளுக்கு அறிவாற்றல் வளர்ச்சியைப் பாதிக்கலாம், மனநலப் பிரசினைகளுக்கு வழிவகுக்கும். உலகளவில் ஒன்பது பேர் பலியானால் அதில் ஒன்று காற்று மாசுபாட்டால் நிகழ்கிறது. இது மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 70 லட்சம் பேரின் மரணத்திற்கு காற்று மாசுபாடு காரணமாக உள்ளது.

ஆய்வு செய்யப்பட்டது எப்படி?

30,000 க்கும் மேற்பட்ட காற்றின் தர கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் உலகளாவிய குறைந்த விலை காற்றின் தர சென்சாரக்ளின் தரவுகளில் இருந்து இந்த ஆய்வு முடிவுகள் ஒருங்கிணக்கப்பட்டதாக IQAir தெரிவித்துள்ளது. இந்த நிலையங்கள் மற்றும் சென்சார்கள் ஆனது ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், கல்வி வசதிகள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன.

 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget