மேலும் அறிய

Polluted Capital: 4-வது ஆண்டாக டெல்லி முதலிடம் - உலகில் மோசமாக காற்று மாசடைந்த தலைநகரங்களின் பட்டியல்

Polluted Capitals: உலகில் மோசமாக மாசடைந்த தலைநகரங்களின் பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக டெல்லி முதலிடம் பிடித்துள்ளது.

Polluted Capitals: உலகில் மோசமாக மாசடைந்த தலைநகரங்களின் பட்டியலை, உலக காற்று தர அறிக்கை அமைப்பு வெளியிட்டுள்ளது.

காற்று மாசுபாட்டில் டெல்லி முதலிடம்:

சுவிட்சர்லாந்தச் சேர்ந்த காற்று தரக்குறியீடு அமைப்பான, IQAir உலக காற்று தர அறிக்கை 2023 அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி,  டெல்லியில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. உலக நாடுகளின் தலைநகரங்களில் மிகவும் மோசமான, காற்றின் தரத்தை கொண்டுள்ள தலைநகரமாக டெல்லி தொடர்ந்து நான்காவது ஆண்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.   டெல்லியின் PM2.5 அளவுகள் 2022 இல் ஒரு கன மீட்டருக்கு 89.1 மைக்ரோகிராமில் இருந்து 2023 இல் 92.7 மைக்ரோகிராமாக மோசமடைந்துள்ளது.

காற்று மாசுபாட்டில் இந்தியா முதலிடம்:

அதே நேரத்தில் பீகாரின் பெகுசராய் உலகின் மிகவும் மாசுபட்ட பெருநகரப் பகுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டிற்கான பட்டியலில் கூட இல்லாத இந்த நகரம், 2023ம் ஆண்டு பட்டியலில் நேரடியாக முதலிடத்தை பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி, 2023 ஆம் ஆண்டில் 134 நாடுகளில் நடந்த ஆய்வில்  இந்தியா மூன்றாவது மோசமான காற்றின் தரத்தைக கொண்டிருந்துள்ளது. இந்த பட்டியலில் வங்காளதேசம் மற்றும்  பாகிஸ்தான் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. அதேநேரம், 2022 ஆம் ஆண்டில், இந்தியா ஒரு கன மீட்டருக்கு சராசரியாக 53.3 மைக்ரோகிராம் PM2.5 செறிவுடன், மிக மோசமான காற்றின் தரத்தை கொண்ட நாடுகளின்பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் காற்றின் நிலை:

உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள காற்றில் இருக்க வேண்டிய நுண்துகள்களின் எண்ணிக்கையை காட்டிலும், இந்தியாவில் 7 மடங்கு அதிகமாக உள்ளது. இதனை 133 கோடி மக்கள் சுவாசிப்பதாக, அதாவது இந்திய மக்கள் தொகையில் 96 சதவிகிதம் பேர் மாசடைந்த காற்றை சுவாசிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 66 சதவிகிதத்திற்கும் அதிகமான நகரங்கள் ஆண்டு சராசரியாக, ஒரு கன மீட்டருக்கு 35 மைக்ரோகிராம்களை விட அதிகமான நுண் துகள்களை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழந்தைகளுக்கு ஆபத்து:

PM2.5 காற்று மாசுபாட்டின் வெளிப்பாடு ஆஸ்துமா, புற்றுநோய், பக்கவாதம் மற்றும் நுரையீரல் நோய் போன்ற பல சுகாதார பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே இருக்கும் நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் மேலும் சிக்கலாகலாம். உயர்ந்த அளவிலான நுண்ணிய துகள்கள் காற்றில் இருப்பது, குழந்தைகளுக்கு அறிவாற்றல் வளர்ச்சியைப் பாதிக்கலாம், மனநலப் பிரசினைகளுக்கு வழிவகுக்கும். உலகளவில் ஒன்பது பேர் பலியானால் அதில் ஒன்று காற்று மாசுபாட்டால் நிகழ்கிறது. இது மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 70 லட்சம் பேரின் மரணத்திற்கு காற்று மாசுபாடு காரணமாக உள்ளது.

ஆய்வு செய்யப்பட்டது எப்படி?

30,000 க்கும் மேற்பட்ட காற்றின் தர கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் உலகளாவிய குறைந்த விலை காற்றின் தர சென்சாரக்ளின் தரவுகளில் இருந்து இந்த ஆய்வு முடிவுகள் ஒருங்கிணக்கப்பட்டதாக IQAir தெரிவித்துள்ளது. இந்த நிலையங்கள் மற்றும் சென்சார்கள் ஆனது ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசு அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், கல்வி வசதிகள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன.

 

 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
Embed widget