மேலும் அறிய

Delhi High Court : `புன்னகையோடு சொன்னால் குற்றம் இல்லை’- வெறுப்பு பேச்சு பற்றி டெல்லி உயர் நீதிமன்றம் சர்ச்சை கருத்து!

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சந்திர தாரி சிங், ஒருவர் புன்னகையோடு எதையேனும் சொன்னால் அதில் குற்றம் இல்லை எனவும், மூர்க்கமாக சொன்னால் அதில் குற்றம் இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு, டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் முஸ்லிம்கள் மீதான கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சே காரணம் என தொடுக்கப்பட்ட வழக்கில், நேற்று டெல்லி உயர் நீதிமன்றம் தேர்தல் நேரத்தின் போது மேடைகளில் பேசுவதும் மற்ற நேரங்களில் பேசுவதும் வேறானவை எனவும், சில நேரங்களில் எந்த நோக்கமும் இல்லாமல் ஒரு சூழலை உருவாக்குவதற்காக ஏதேனும் சொல்லப்படும் எனவும் கூறியுள்ளது. 

கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய பிறகு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைதிவழியிலான போராட்டங்கள் நடைபெற்று வந்தன. குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்துவதன் மூலமாக, நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், மக்களை மத ரீதியாக அரசு அணுகுவதாக எழுந்த எதிர்ப்புகளால் நாடு முழுவதும் முஸ்லிம்களும், ஜனநாயக அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. 

Delhi High Court : `புன்னகையோடு சொன்னால் குற்றம் இல்லை’- வெறுப்பு பேச்சு பற்றி டெல்லி உயர் நீதிமன்றம் சர்ச்சை கருத்து!

நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்திருந்த நிலையில், பல்வேறு பாஜக தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வெறுப்புப் பேச்சுகளில் ஈடுபட்டதோடு, சிலர் அவர்களின் மீது வன்முறை மேற்கொள்ளவும் பகிரங்கமாக அறிவித்திருந்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 23 அன்று பாஜக தலைவர் கபில் மிஷ்ரா வன்முறையோடு போராட்டக்காரர்களை அகற்ற மேடையில் அழைப்பு விடுத்ததையடுத்து, பாஜக ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். 

இந்தக் கலவரத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறை விசாரணையில் ஒருபக்க சாய்வு, ஆதாரங்கள் இல்லாமல் இருப்பது முதலான பிரச்னைகள் இருப்பதாக மனித உரிமைகள் ஆணையங்கள் தெரிவித்திருந்தன. 

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சந்திர தாரி சிங், ஒருவர் புன்னகையோடு எதையேனும் சொன்னால் அதில் குற்றம் இல்லை எனவும், மூர்க்கமாக சொன்னால் அதில் குற்றம் இருக்கலாம் எனவும் கூறியுள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு பேசியதாக பாஜக அமைச்சர் அனுராஜ் தாக்கூர், நாடாளுமன்ற உறுப்பினர் பர்வேஷ் வர்மா ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதியுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தாக்கல் செய்திருந்த மனுவை சிறிய நீதிமன்றம் ஒன்றில் தள்ளுபடி செய்யப்பட்டது.  அதனையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிருந்தா காரத் மேல்முறையீடு செய்திருந்த வழக்கில் நீதிபதி சந்திர தாரி சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Delhi High Court : `புன்னகையோடு சொன்னால் குற்றம் இல்லை’- வெறுப்பு பேச்சு பற்றி டெல்லி உயர் நீதிமன்றம் சர்ச்சை கருத்து!
கபில் மிஷ்ரா

`அவர் பேசியது தேர்தல் நேரத்திலா, மற்ற நேரத்திலா? தேர்தலில் பேசப்படும் பேச்சுகள் வித்தியாசமானவை. மற்ற நேரங்களில் பேசியிருந்தார் அதில் ஏதேனும் குற்றம் இருக்கலாம்.. புன்னகையோடு ஏதேனும் கூறப்படும் போது, அதில் குற்றம் இருக்காது.. மூர்க்கமாக எதையேனும் சொன்னால், அது குற்றம்’ என்று கூறியுள்ள டெல்லி உயர் நீதிமன்றம் தொடர்ந்து, `நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம்.. கருத்து சுதந்திரத்திற்கான உரிமையும் இருக்கிறது’ எனவும் கூறியுள்ளது. 

மேலும், இந்த வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளிப்பதை ஒத்தி வைத்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
SETC Special Buses: வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
வார இறுதில ஊருக்கு போறீங்களா.? இந்தாங்க சிறப்பு பேருந்துகள் லிஸ்ட்; பாத்துட்டு பிளான் பண்ணுங்க
Sundar Pichai: ‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
‘அப்படி சொல்லுங்க சார்‘; அமெரிக்காவின் வளர்ச்சியில் புலம்பெயர்ந்தோர் பங்கு ‘மகத்தானது‘ - சுந்தர் பிச்சை
Pakistan Vs India: 'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
'இந்தியாவுடன் போர் ஏற்படுவதை நிராகரிக்க முடியாது'; அலெர்ட்டா இருக்கோம் - பாக். அமைச்சர் எச்சரிக்கை
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
Embed widget