மேலும் அறிய

மனைவியின் சொத்தினை அவரின் அனுமதியின்றி கணவரே கூட எடுக்கமுடியாது.. உயர்நீதிமன்றம் அதிரடி...!

"மனைவி பெற்ற நகைகள் அவரது தனிப்பட்ட சொத்து. இதுபோன்ற சூழ்நிலையில், கணவரே அதை எடுத்துச் சென்றாலும் அவருக்குத் தெரியாமல் எடுத்துச் செல்வது அநியாயமான செயல்"

டெல்லியில் கே.என். கட்ஜு மார்க் காவல் நிலையத்தில் பெண் ஒருவர், தனது கணவருக்கு எதிராக திருட்டு புகார் அளித்து உள்ளார். அதில், தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றிருந்த போது, ​​வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கணவர் திருடிச் சென்றதாக மனைவி புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, முன் ஜாமீன் கோரி கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கின் விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அமித் மஹாஜன், மனைவிக்குத் தெரியாமல் அவரது நகைகள் மற்றும் பிற தனிப்பட்ட உடைமைகள் உள்ளிட்ட சொத்துக்களை கணவன் எடுக்க முடியாது என தெரிவித்தார்.

ஆனால், மனைவி தனது சொந்த விருப்பத்தின் பேரில் சென்றுவிட்டதாகவும், வாடகை வீட்டை விட்டு வெளியேறியதால் உடமைகளை அகற்ற நேரிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்ட கணவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இருப்பினும், கணவருக்கு முன்ஜாமீன் அளிக்க மறுத்த உயர் நீதிமன்றம், "மனைவி பெற்ற நகைகள் அவரது தனிப்பட்ட சொத்து. இதுபோன்ற சூழ்நிலையில், கணவரே அதை எடுத்துச் சென்றாலும் அவருக்குத் தெரியாமல் எடுத்துச் செல்வது அநியாயமான செயல்" என தெரிவித்தது.

மேலும், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி விண்ணப்பித்தவர் புகார்தாரரின் கணவராக இருந்தாலும், மனைவிக்கு தெரிவிக்காமல் நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை அவர் இவ்வாறு எடுத்துச் செல்ல சட்டம் அனுமதிக்கவில்லை என நீதிமன்றம் தெரிவித்தது.

தங்களுக்கு இடையில் தகராறு இருப்பதாகக் கூறி சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்த நீதிமன்றம், இதன் அடிப்படையில், கணவன் மனைவியை திருமண வீட்டில் இருந்து வெளியேற்றவோ, திருடப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லவோ அனுமதிக்க முடியாது என்றும் கூறியது.

வழக்கின் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்ட கணவர் இன்னும் விசாரிக்கப்படவில்லை என்றும், நகைகள் இன்னும் மீட்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

"குற்றம் சாட்டப்பட்ட கணவர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும் கூற முடியாது. இத்தகைய சூழ்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட கணவரை கைது செய்வது, முன் ஜாமீன் வழங்குவதற்கான அடிப்படை அல்ல. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என நீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த வழக்கில் கைது செய்ய தடை விதிக்க கோரி மனுதாரர் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பெண் உரிமைகளை நிலைநாட்டும் விதமாக பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget