மேலும் அறிய

Arvind Kejriwal: சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜரான அரவிந்த் கெஜ்ரிவால்..! ஆம் ஆத்மி போராட்டம்..! டெல்லியில் பதற்றம்..!

புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லி  மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,  சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். 

புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லி  மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்,  சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். 

முன்னதாக இந்த வழக்கில் ஆஜராக கூறி இரு தினங்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இன்றைய தினம் அவர் ஆஜராவதற்கு முன்பு ராஜ்காட்டில் உள்ள  மகாத்மா காந்தி சமாதியில் அஞ்சலி செலுத்தினார். இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்படுவதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். 

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சில தேச விரோத சக்திகள் இந்தியா வளர்ச்சியடைவதை விரும்பவில்லை. நாடு தொடர்ந்து முன்னேறும் என்பதை இந்த சக்திகளுக்கு நான் சொல்ல விரும்புகிறேன் என கூறினார். மேலும் மதுபான கொள்கை தொடர்பாக எங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில், விசாரணை அமைப்புகள் பொய் கூறுகிறது. பாஜக உத்தரவுப்படி சிபிஐ செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். 

நான் ஊழல்வாதி என்று நீங்கள் (பாஜக) சொல்கிறீர்கள். நான் வருமான வரித்துறையில் கமிஷனராக இருந்த போது வேண்டுமானால் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கலாம். அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் செய்தார் என்று சொன்னால் இந்த உலகில் நேர்மையானவர்கள் யாரும் இல்லை என்பது போன்றது எனவும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ அலுவலகம் செல்வதற்கு முன்பு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அவரது இல்லத்திற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

புதிய மதுபான கொள்கை வழக்கு 

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. இதனிடையே கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் மாநில அரசு  புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. 

இதற்கு பல தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில்,  2021ஆம் ஆண்டு ஜூலையில் புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. ஆனால் மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, முன்னாள் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது. 

பின்னர் கடந்தாண்டு ஆகஸ்டில்  மணிஷ் சிசோடியா வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள்  சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ அதிகாரிகள்  மணிஷ் சிசோடியாவை  கைது செய்தனர். அவர் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Kavin Murder : 'பட்டியலினத்தவர் என்றால் கொலை செய்வீர்களா?’ கவினின் உறவினர்கள் ஆவேசம்..!
'காதலித்தால் எங்களை கொல்வீர்களா?’ கவினின் பெற்றோர் கதறல்..!
EPS-PM Modi : ’பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
’பிரதமருடன் EPS சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
Ponmudi : ’தொகுதி மாறும் பொன்முடி?’ தோல்வி பயம் காரணமா..? அதிருப்தியில் திமுக எம்.எல்.ஏ..!
’தொகுதி மாறும் பொன்முடி?’ தோல்வி பயம் காரணமா..?
Jobs: வேலைவாய்ப்பு; அதிர்ச்சி அளித்த TCS; மகிழ்ச்சி அளித்த Apple - என்ன விஷயம்னு தெரியுமா.?
வேலைவாய்ப்பு; அதிர்ச்சி அளித்த TCS; மகிழ்ச்சி அளித்த Apple - என்ன விஷயம்னு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Panneerselvam vs EPS | OPS- ஐ கழற்றி விட்ட BJP
Madhampatty Rangaraj |  2வது மனைவியுடனும் சண்டை? PHOTOS-ஐ லீக் செய்த ஜாய் சிக்கலில் மாதம்பட்டி ரங்கராஜ்
MK Stalin Discharge | காலை வெடிகுண்டு மிரட்டல்?மாலை முதல்வர் Discharge! Alert mode- ல் போலீஸ்
பொண்டாட்டி இருக்கும்போதே மாதம்பட்டி 2 வது திருமணம் கல்யாணத்துக்கு முன்பே கர்பம்.. | Joy Crizildaa | Shruti Rangaraj
ஹன்சிகாவுக்கு விவாகரத்து?உண்மையை உடைத்த கணவர் இதுதான் காரணம்? | Sohael Khaturiya | Hansika Motwani Marriage | Tamil Cinema

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kavin Murder : 'பட்டியலினத்தவர் என்றால் கொலை செய்வீர்களா?’ கவினின் உறவினர்கள் ஆவேசம்..!
'காதலித்தால் எங்களை கொல்வீர்களா?’ கவினின் பெற்றோர் கதறல்..!
EPS-PM Modi : ’பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
’பிரதமருடன் EPS சீக்ரெட் பேச்சு’ 10 நிமிடம் தொலைபேசி மூலம் உரையாடல்..!
Ponmudi : ’தொகுதி மாறும் பொன்முடி?’ தோல்வி பயம் காரணமா..? அதிருப்தியில் திமுக எம்.எல்.ஏ..!
’தொகுதி மாறும் பொன்முடி?’ தோல்வி பயம் காரணமா..?
Jobs: வேலைவாய்ப்பு; அதிர்ச்சி அளித்த TCS; மகிழ்ச்சி அளித்த Apple - என்ன விஷயம்னு தெரியுமா.?
வேலைவாய்ப்பு; அதிர்ச்சி அளித்த TCS; மகிழ்ச்சி அளித்த Apple - என்ன விஷயம்னு தெரியுமா.?
Seeman Vijay: ”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு
Seeman Vijay: ”ஒன்னுமே இல்லாத விஜய்க்கு X,Y எதுக்கு? சொந்த சாதிக்காரங்களே என்ன கண்டுக்கல” சீமான் பேச்சு
America on Aug.,1 Tariffs: போச்சு.!! 1-ம் தேதில இருந்து எல்லாரும் கப்பம் கட்டித்தான் ஆகணும்; உறுதி செய்த அமெரிக்கா - ஆனா...
போச்சு.!! 1-ம் தேதில இருந்து எல்லாரும் கப்பம் கட்டித்தான் ஆகணும்; உறுதி செய்த அமெரிக்கா - ஆனா...
Safest Cars: சேஃப்டிக்காக நிரம்பி வழியும் கேஜட்ஸ்..! நம்மூரில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்கள் - நாலா பக்கமும் பாதுகாப்பு
Safest Cars: சேஃப்டிக்காக நிரம்பி வழியும் கேஜட்ஸ்..! நம்மூரில் 5 ஸ்டார் ரேட்டிங் கார்கள் - நாலா பக்கமும் பாதுகாப்பு
Parliament Op Sindoor: இன்னைக்கு இருக்கு.. எதிர்க்கட்சிகளின் மும்முனை தாக்குதல்? சமாளிக்குமா பாஜக? திருப்பி விடுமா?
Parliament Op Sindoor: இன்னைக்கு இருக்கு.. எதிர்க்கட்சிகளின் மும்முனை தாக்குதல்? சமாளிக்குமா பாஜக? திருப்பி விடுமா?
Embed widget