மேலும் அறிய

மதிய உணவை சாப்பிட, தனியாக உட்காரவைக்கப்பட்ட பட்டியலின மாணவர்கள்.. தலைமையாசிரியை சஸ்பெண்ட்..

ஆசிரியை பள்ளிக்குச் சரியான நேரத்திற்கு வருவதில்லை எனவும், இவரின் உத்தரவின் பேரில் தான், மதிய உணவு வழங்கும் போது தலித் மாணவர்கள் தனித்தனி வரிசையில் உட்காரவைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் மதிய உணவு வேளையின் போது தலித் மாணவர்களை தனித்தனி வரிசையில் உட்கார வைத்த விவகாரத்தில் தலைமையாசிரியை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

சாதிகளை வேரோடு அழித்துவிட வேண்டும் என்று நினைத்தாலும் எப்படியாவது துளிர்விடத்தான் செய்கிறது. பள்ளிகளில் தொடங்கி பணிபுரியும் இடம் வரை சாதியப் பாகுபாடுகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகின்றன. “சாதிகள் இல்லையடி பாப்பா“ என பாரதி கூறினாலும் சாதிகள் உள்ளதடி பாப்பா, நீ தப்பித்து எழுந்து வா பாப்பா என்று தான் சொல்லும் அளவிற்கு சாதியக் கொடுமைகள் அரங்கேறிவருகிறது. 

மதிய உணவை சாப்பிட, தனியாக உட்காரவைக்கப்பட்ட பட்டியலின மாணவர்கள்.. தலைமையாசிரியை சஸ்பெண்ட்..

அப்படி ஒரு சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் உள்ள கிராமப்பள்ளி ஒன்றில் நிகழ்ந்துள்ளது. இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட பல மாணவர்கள் பயின்றுவருகின்றனர். ஒவ்வொரு நாளும் மாணவர்கள் மதிய உணவு சாப்பிடும்போது தலித் சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் மட்டும் தனி வரிசையில் அமரவைப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இப்பள்ளியின் தலைமையாசிரியர் எப்போதும் தாமதமாகத்தான் பள்ளிக்கு வருவார் எனவும், தனியாக வரிசையில் உட்காரவில்லை என்றால் மாணவர்களை அடிப்பார் என பெற்றோர்கள் மற்றும் அப்பள்ளியில் பயிலும் குழந்தைகள் குற்றம் சாட்டுகின்றனர். 

இப்படி பல நாள்களாக நடந்துவந்த இச்சம்பவம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் புகாரினையடுத்து இக்கிராமத்தின் தலைவர் வினய் குமார் ஜெய்ஸ்வால் சம்பந்தப்பட்டப் பள்ளிக்கு நேரில் சென்றுள்ளார். அங்கு ஆசிரியர் சரியான நேரத்திற்கு வருவதில்லை எனவும், மாணவர்களுக்கு முறையாக பாடம் எடுப்பதில்லை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் இதனையடுத்து அரசுப்பள்ளியில் தலித் மாணவர்கள் படும் துயரங்கள் குறித்து பெற்றோர்கள் மற்றும் சமூக நல அமைப்பின் மூலம் காவல்நிலையத்தில் அளித்துள்ளனர்.

மதிய உணவை சாப்பிட, தனியாக உட்காரவைக்கப்பட்ட பட்டியலின மாணவர்கள்.. தலைமையாசிரியை சஸ்பெண்ட்..

இதனையடுத்து புகார் அளித்த மாணவர்களின் உறவினர்கள் மீது தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இதன் பின்னர் தான் இப்பிரச்சனை மாவட்ட நிர்வாகத்திடம் கொண்டு  செல்லப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், அமேதி மாவட்ட கல்வி அதிகாரி பிரச்சனைக்குரிய பள்ளிக்குச் சென்று நேரிடையாக ஆய்வு நடத்தியுள்ளார். அதில் தலைமையாசிரியை பள்ளிக்குச் சரியான நேரத்திற்கு வருவதில்லை எனவும், இவரின் உத்தரவின் பேரில்தான், மதிய உணவு வழங்கும்போது பட்டியலின மாணவர்கள் தனித்தனி வரிசையில் உட்காரவைக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இப்பிரச்சனைக்கு காரணமாக பள்ளி தலைமையாசிரியை குசும் சோனி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் பட்டியலின மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget