மேலும் அறிய

Crime: 'அடங்காத சாதிவெறி'.. அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடியதற்காக இளைஞர் படுகொலை - பகீர் பின்னணி..!

மகாராஷ்ட்ராவில் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடியதற்காக இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் சாதிய பாகுபாடு மற்றும் சாதிய கொடுமைகள் மிக அதிகளவில் உள்ளது என்பதை உணர்த்தும் விதமாக பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

அம்பேத்கர் பிறந்தநாள்:

மகாராஷ்ட்ராவில் அமைந்துள்ளது போந்தர் ஹவேலி கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வந்தவர் அக்‌ஷய் பலேராவ். அவருக்கு வயது 24. இவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை அவர் வசிக்கும் பகுதியில் கொண்டாடியுள்ளார். அம்பேத்கரின் பிறந்தநாளை அக்‌ஷய் கொண்டாடியது அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் வியாழக்கிழமை அக்‌ஷய் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடியதை பிடிக்காத சமூகத்தைச் சேர்ந்த தரப்பினரின் திருமண விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, அந்த வழியாக அக்‌ஷய் சென்று கொண்டிருந்தார். அவரை கண்ட அந்த சமூகத்தைச் சேர்ந்த சிலர் கும்பலாக வாள் உள்பட ஆயுதங்களுடன் சென்று அக்‌ஷயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இளைஞர் கொலை:

அப்போது, அக்‌ஷயுடன் உடனிருந்த அவரது சகோதரர் ஆகாஷ் அவர்களை சமாதனப்படுத்தி அவரது தம்பியை அழைத்து வர முயற்சித்துள்ளார். ஆனாலும், அந்த கும்பல் ஆகாஷ் மற்றும் அக்‌ஷய் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளது. மேலும், அந்த கும்பல் தங்களிடம் இருந்த கத்தியால் அக்‌ஷயை குத்தியுள்ளனர். அவர்கள் தாக்கியதில் அக்‌ஷய் ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். படுகாயமடைந்த அக்‌ஷயை அவரது சகோதரர் ஆகாஷ் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அக்‌ஷய் பலேராவ் வரும் வழியிலே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கு, கொலை முயற்சி, கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ள அக்‌ஷயின் சகோதரர் ஆகாஷ், தாக்கிய கும்பலில் இருந்த ஒருவர் “ இந்த கிராமத்தில் இவர்கள் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடியதற்காகவே இவர்களை கொலை செய்ய வேண்டும்” என்று ஆத்திரத்துடன் கூறியதாக கூறியுள்ளார்.

அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாடியதற்காக 24 வயது இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய அம்பேத்கரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது பிறந்த நாளை கொண்டாடியதற்காக இளைஞர் படுகொலை செய்யப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க: Odisha Train Accident: 275 பேர் உயிரை பறித்த கோர விபத்து..51 மணி நேர போராட்டம்.. பாலசோர் பகுதியில் மீண்டும் ரயில் சேவை தொடக்கம்

மேலும் படிக்க: Virender Sehwag: ஒடிஷா கோர ரயில் விபத்து- உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாக அறிவித்த சேவாக்..

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் போராட்டம் தீவிரம்.. தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்? முழு விவரம்!
நீட் தேர்வு விவகாரம்: டெல்லியில் போராட்டம் தீவிரம்.. தேசிய பாதுகாப்பு சட்டம் அமல்? முழு விவரம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு
உயில் மூலம் சொத்து மாற்றும்போது தகராறு ஏற்பட்டால் ப்ரோபேட் பெறுவது எப்படி? விபரம் இதோ..
உயில் மூலம் சொத்து மாற்றும்போது தகராறு ஏற்பட்டால் ப்ரோபேட் பெறுவது எப்படி? விபரம் இதோ..

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tuticorin Prisoner: தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி ”கைதி அருணாச்சலம் மரணம் லாக்-அப் டெத் அல்ல, நடந்தது என்ன?” - காவல்துறை விளக்கம்
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
5 ஸ்டார் ரேட்டிங்.. மாருதி டிசையர், விக்டோரிஸ், இன்விக்டோ வரிசையில் இணைந்த புது எஸ்யுவி!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
நாடு எக்கேடு கெட்டா என்ன?.. ஜனநாயகன் தானே முக்கியம்.. தவெகவை வெளுத்து வாங்கிய இபிஎஸ்!
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
டாப் மைலேஜ் பைக்.. ஹீரோ நிறுவனம் 7 ஆயிரம் அதிரடி விலை குறைப்பு; இப்போ ரூ.59,998-தான்- என்ன மாடல்?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
1 பைக் கூட விற்காத நிறுவனம்...இன்று உலகுக்கே ராஜா! இந்திய EV மார்கெட்டையே புரட்டிப்போட்ட பிராண்ட் எது தெரியுமா?
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Embed widget