மேலும் அறிய

Covid 19 Update: தடுப்பூசி இடைவெளிகளில் தெரிவிக்கப்படும் முரண்.. IMA எச்சரிப்பது என்ன?

கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலைக்கு எதிராக மக்களைப் பாதுகாப்பதற்கு தடுப்பூசி இயக்கத்தை அதிகரிக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் தடுப்பூசி  செலுத்திக்கொள்ள ஆறு மாதங்கள் காத்திருப்பது என்பது அவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு வைரசினை மீண்டும் வெளிப்படுத்தக்கூடும் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது. கொரோனாவின் 2 அலை அளப்பரிய பாதிப்பினை நாடு முழுவதும் ஏற்படுத்திவருகிறது. பெருந்தொற்றினால் முதன் முறையாக  ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையினை சமாளிப்பதற்காக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என தொடர்ச்சியாக மக்களுக்கு அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால் தற்போது தடுப்பூசிக்கான தட்டுப்பாடு அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இது ஒருபுறம் இருந்தாலும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் எப்பொழுது தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுவருகிறது. ஏற்கனவே நோய்த்தடுப்பு தொடர்பான தேசிய தொழில் நுட்ப ஆலோசனைக்குழு ( (NTAGI)  கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளுக்கு 6 முதல் 9 மாத கால இடைவெளி விட்டுத்தான் தடுப்பூசிபோட வேண்டும் என அரசிற்கு பரிந்துரைத்துள்ளது. ஆனால் அரசாங்க குழு பரிந்துரைத்த அறிவிப்புக்கு பின்னர் இந்திய மருத்துவ சங்கம் அதற்கு எதிர்மறையான தகவல் ஒன்றினை தற்போது வெளியிட்டுள்ளது.

அதாவது கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகள் 6 மாதத்திற்கு பிறகு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் அது அவர்களை அச்சுறுத்தும் வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் ஜெயலால் தெரிவிக்கையில், கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக ஆறு மாத காலங்கள்  காத்திருக்க வைப்பது  என்பது அவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதோடு, வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் வாய்ப்புகள் ஏற்படலாம் என கூறியுள்ளார். எனவே அரசாங்கம் அதனை விஞ்ஞான ஆதாரங்களுடன் மறுபரிசீலனை செய்து நாட்டில் அனைவரும்  தடுப்பூசி  செலுத்திக்கொள்வதற்கான நடவடிக்கைக்கு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே இந்தியாவை எதிர்காலத்தில் கொரோனா இல்லாத நாடாக நம்மால் பெற முடியும் எனவும் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா பெருந்தொற்றின் மூன்றாவது அலைக்கு எதிராக மக்களைப் பாதுகாப்பதற்கு தடுப்பூசி இயக்கத்தை அதிகரிக்க வேண்டும் எனவும் அரசிற்கு இந்திய மருத்துவ கவுன்சில் சங்க தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். தடுப்பூசி போடும் செயல்முறைகளை இந்தியாவில் விரைவுபடுத்தி சில மாதங்களுக்குள் 60-70 சதவீத தடுப்பூசி செலுத்தும் இலக்கை பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள அவர், அதிகரித்துவரும் கொரோனா தொற்றினை சமாளிப்பதற்கு தடுப்பூசி மட்டுமே சிறந்த வழி எனவும் கூறியுள்ளார். இதோடு இந்தியாவில் கொரோனா 3-வது அலையினை எதிர்கொள்வது என்பது பாதுகாப்பானது இல்லை என எச்சரித்துள்ளார். எனவே மத்திய அரசு அதிக அளவிலான தடுப்பூசிகளை வாங்குவதோடு அதனை வீடு வீடாக சென்று மக்களுக்கு செலுத்த முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
Embed widget