மேலும் அறிய

Coronavirus: ஒரே நாளில் 3,824 பேருக்கு கொரோனா..! 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்த பாதிப்பு..!

Coronavirus Updates: ஒரே நாளில் இந்தியாவில் 3,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆறு மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதிகரிக்கும் கொரோனா:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 3,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 18,389 ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு அக்டோபருக்கு பின்னர் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் 2000-ஐ தாண்டியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.இந்த சூழல்  கொரோனா அலையின் தொடக்கமா என்ற அச்சத்தையும் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.


Coronavirus: ஒரே நாளில் 3,824 பேருக்கு கொரோனா..! 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்த பாதிப்பு..!

கொரோனா நிலவரம்:

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 73 ஆயிரத்து 335 ஆக உள்ளதாகவும், இதுவரை கொரோனா தொற்றிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 881 ஆக உள்ளதாகவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 4.47 கோடி மக்கள் கொரோனா தொற்றிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் - மாநில நிலவரம்

கடந்த 24 மணி நேரத்தில், புது டெல்லி, ஹரியானா,கேரளா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்றிற்கு தலா ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா குணமடைந்தோர் விகிதம்

கொரோனா தொற்றால் குணமடைந்தோர் விகிதம் 98.77 சதவீதமாக உள்ளதாக  மத்திய சுகாதார 

கொரோனா தடுப்பூசி 

நாட்டில் இதுவரை 220.66 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றும் தடுக்கும் வழிமுறைகளும்  

உலக அளவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்தது. இப்போது, கொரோனா மீண்டும் அச்சத்தை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. கொரோனாவால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. சுகாதார ரீதியாக மட்டுமின்றி,  பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியது. இதை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்த நிலையில், விஞ்ஞான உலகின் தொடர் ஆராய்ச்சிகள், தடுப்பூசிகள் காரணமாக பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அதேபோல, பருவகால காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே, பரவலை கட்டுப்படுத்த இந்தியாவில் மத்திய அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* அடிக்கடி கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். சானிட்டைஸர் வைத்திருபது கட்டாயமாகும். 

*  அனைவரும் தனி மனித இடைவெளியைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். 

* சுவாச வழிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும். 

* வளாகங்கள் மற்றும் பேருந்துகளை முறையாகச் சுத்தப்படுத்தி, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். 

* திறந்த இடங்களில் எச்சில் துப்புதல் தடை செய்யப்பட வேண்டும். 

* முகக் கவசங்கள், பிற உறைகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். 

* கோடைக்காலம் என்பதால் வெப்ப அதிக்கரித்துள்ளது. அதோடு, பருவ கால தொற்று நோய்களும் அதிகம் உள்ளதால் தேவையின்றி வெளியே வருவதை தவிர்க்கவும்.

* உடற்பயிற்சி, சுவாச பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். 

இரண்டு ஆண்டுகால பெருந்தொற்று காலத்திற்கு பிறகு, கொரோனா தொற்றுடன் வாழ பழகிக்கொண்ட பாடங்களும் நமக்குண்டு. அதற்கேற்றவாறு கொரோனா வழிமுறை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு பிறகு, மக்கள் பொதுஇடங்களில் முக கவசம் அணிந்து செல்வதையும் காண முடிகிறது.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
ஃப்ரீலான்சிங் வருமானத்திற்கு வரி உண்டா? கிக் தொழிலாளர்கள் கவனிக்க வேண்டியவை!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
இன்று முதல் அமலில் புதிய மாற்றங்கள்! LPG, PF, ITR, தட்கல் டிக்கெட் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள்!
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி சிலிண்டர்: மானியம் முதல் KYC வரை அதிரடி மாற்றங்கள்!விபரம் இதோ..
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
Trump on Iran: ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
ஈரானை அழிக்க மாபெரும் பிளான்.! அமெரிக்க ராணுவத்திற்கு என்ன உத்தரவிட்டுள்ளார் ட்ரம்ப்.? பரபரப்பு தகவல்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
ஒரே சார்ஜில் 187 கி.மீட்டர் மைலேஜ்... வாங்கலாமா VIDA VX2 Plus இ ஸ்கூட்டர்! என்ன வசதி இருக்குது?
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Embed widget