மேலும் அறிய

Parliament Special Session: ‘எதிர்க்கட்சி வலுவானால் ரெய்டு மூலம் பலவீனப்படுத்த முயற்சி’ - மத்திய அரசு மீது கார்கே குற்றச்சாட்டு..!

வலுவான எதிர்கட்சிகளை சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் பலவீனப்படுத்த அரசு முயற்சிக்கிறது என நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டியுள்ளார். 

வலுவான எதிர்கட்சிகளை சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் பலவீனப்படுத்த அரசு முயற்சிக்கிறது என நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டியுள்ளார். 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே மத்திய அரசு அறிவித்திருந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று (செப்டம்பர் 18) தொடங்கியது. வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரின் முதல் நாள் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 4 நாட்களும் சமீபத்தில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற அவையில் நடைபெற உள்ளது. 

இன்றைய நாளில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது பழைய நாடாளுமன்றம் குறித்து பல நெகிழ்ச்சியான தகவல்களை பகிர்ந்து கொண்டார். மேலும், வரலாற்று சிறப்புமிக்க பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்கு நாம் விடை கொடுக்க உள்ளோம்.பழைய நாடாளுமன்ற கட்டடம் வருங்கால தலைமுறையினருக்கு உத்வேகம் அளிப்பதாக திகழ்கிறது என அவர் தெரிவித்தார். 

மல்லிகார்ஜுன கார்கே உரை

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், “இந்திய ஜனநாயகத்திற்கு அடிக்கல் நாட்டியவர் நேரு. அஸ்திவாரத்தில் உள்ள கற்கள் யாருக்கும் தெரிவதில்லை. வலுவான எதிர்க்கட்சி இல்லை என்றால் குறைபாடுகள் இருக்கும் என்பதை நேருஜி நம்பினார். வலுவான எதிர்க்கட்சி இல்லை என்றால் அது சரி இல்லை. இப்போது வலுவான எதிர்க்கட்சி இருப்பதால் சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் பலவீனப்படுத்த அரசு முயற்சிக்கிறது. இன்று என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம். பிரதமர் அரிதாகவே நாடாளுமன்றத்திற்கு வருவார். அதை ஒரு நிகழ்வு போல மாற்றிவிட்டு சென்று விடுவார்” எனக்குறிப்பிட்டார்.  

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உரை

பின்னர் காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசுகையில், “சந்திரயான் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்தன. 1946 இல் ஜவஹர்லால் நேரு தலைமையில் அணு ஆராய்ச்சிக் குழு அமைக்கப்பட்டது என்று நான் கூற விரும்புகிறேன். அங்கிருந்து, 1964ல் முன்னேறி இஸ்ரோவை உருவாக்கினோம். ஆனால் இன்று இஸ்ரோ என்று எதை அழைப்போம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இல்லையென்றால் என்ன? இந்த பாரதம், இந்தியா பிரச்சினை எங்கிருந்து எழுப்பப்பட்டது?..." என கேள்வி எழுப்பினார்.

மேலும் “இந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலிருந்து இன்று நாம் அனைவரும் வெளியேறுவது உண்மையிலேயே ஒரு உணர்ச்சிகரமான தருணம். நம்முடைய பழைய கட்டிடத்திற்கு விடைபெற நாம் அனைவரும் இங்கு வந்துள்ளோம். நாடாளுமன்ற ஜனநாயகம் பல நற்பண்புகளைக் எடுத்துக்கூறுகிறது. அதற்குத் திறன், வேலையில் அர்ப்பணிப்பு, சுய ஒழுக்கம் தேவை என்று நேரு கூறியிருந்தார். அவர் நாடாளுமன்றத்தில் பெரும் பெரும்பான்மையை அனுபவித்தாலும், எதிர்க்கட்சிகளின் குரலைக் கேட்பதில் சலிப்பில்லாமல் இருந்தார். கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது கேலியோ, திசைதிருப்பவோ இல்லை. ஜவஹர்லால் நேருவுக்கு அவர் நேரத்தை மீறும் போது சபாநாயகர் மணி கூட ஒலிக்கும். இதுதான் இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு நேருவின் பங்களிப்பு” என குறிப்பிட்டார்.

தலைப்பு செய்திகள்

Independence day 2026: 80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
80-வது சுதந்திர தினத்தில் மாஸ் காட்டப்போகும் Gen-Z ... முதல்முறையாக எதிரொலிக்கும் 'வந்தே மாதரம்'!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
Khudiram Bose: பகத் சிங் தெரியும்; குதிராம் போஸ் தெரியுமா? 18 வயதிலேயே நாட்டுக்காக தூக்கு மேடை ஏறிய தியாகி!
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget