மேலும் அறிய

Congress President Election: மல்லிகார்ஜுன கார்கே vs சசி தரூர்...மீண்டெழ உதவுமா காங்கிரஸ் தலைவர் தேர்தல்..?

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும், நாடு முழுவதும் உள்ள 65 வாக்குச் சாவடிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

கிட்டத்தட்ட 22 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 

மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் 9,000க்கும் மேற்பட்டோர் ரகசிய வாக்குச்சீட்டு முறைப்படி புதிய தலைவரை தேர்வு செய்வார்கள். உள்கட்சி தேர்தலின் மூலம் இந்த மாநில நிர்வாகிகள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுவார்கள்.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்திலும், நாடு முழுவதும் உள்ள 65 வாக்குச் சாவடிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

கர்நாடகாவில் நடைபெற்று வரும் இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றுள்ள முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட யாத்திரிகர்கள் வாக்களிப்பதற்காக சிறப்பு சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தலைவர் தேர்தலில் போட்டியிடும் கார்கே மற்றும் தரூர் ஆகியோர் அவர்களின் சொந்த மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவில் வாக்களித்துள்ளனர்.

"அனைத்து மாநில நிர்வாகிகளும் அந்தந்த வாக்குச் சாவடிகளில் தாங்கள் ஆதரிக்கும் வேட்பாளருக்கு 'டிக்' அடையாளத்துடன் வாக்களிப்பார்கள். சுமூகமான வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி தெரிவித்திருந்தார்.

வாக்குப்பதிவு முடிந்ததும், சீல் வைக்கப்பட்ட பெட்டிகள் செவ்வாய்கிழமை நாளை கொண்டு செல்லப்பட்டு, டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் உள்ள கண்ட்ரோல் அறையில் வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதன்கிழமை அன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன் அனைத்து மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் வாக்குச் சீட்டுகள் கலக்கப்பட்டு பின்னரே, வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.

தலைவர் தேர்தலில் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள், வேட்பாளர்கள் யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலைமையுடன் இருப்பார்கள் என கார்கேவும், தரூரும் திரும்ப திரும்ப சொன்ன போதிலும், கார்கேதான் காந்தி குடும்பத்தின் ஆதரவு பெற்றவர் என்பது கட்சி வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.

மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளிடம் ஆதரவு கேட்டு கார்கே சென்றபோது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இதற்கு சான்றாக அமைந்துள்ளது. ஆனால், அதற்கு நேர்மாறாக, மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்களுக்கு சசி தரூர் சென்றபோது, ஒன்று இரண்டு பேரை தவிர வேறு எந்த நிர்வாகியும் அவரை பார்ப்பதற்காக செல்லவில்லை.

தன்னை அணுகப்படும் முறையில் வேறுபாடு காட்டப்படுவதாகவும் ஒரு சார்புடன் நடந்து கொள்வதாகவும் சமமற்ற முறையில் போட்டி நடைபெறுவதாக சசி தரூர் வெளிப்படையாகவே குற்றம்சாட்டி இருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் பெரும்பாலான நேரங்களில் காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஒருமனதாக தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், 1937, 1950, 1997 மற்றும் 2000 ஆண்டுகளில் மட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இருந்ததால் தேர்தல் நடத்தப்பட்டது.

 

தலைப்பு செய்திகள்

Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
ஓணம் சிறப்பு ரயில்: சென்னை-கொல்லம் பயணிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்கள்!விபரம் இதோ.
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ
மோகன்லால் 'அதிமனோகரம்' படத்திற்குத் தடை: சபரிமலை வனத்துறை அதிரடி!விபரம் இதோ

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Holiday Special Bus : 2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
2 நாள் லீவு வந்தாச்சு! ஊருக்கு செல்ல திட்டமா.? சிறப்பு பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
School Student : மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
மாணவர்களுக்கு குஷியோ குஷி.! எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு வந்தாச்சு- வெளியான தேதி
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Embed widget