மேலும் அறிய

Congress President Election: கட்சியின் அடுத்த தலைவர் யார்..? வேட்புமனுதாக்கல் தேதியை வெளியிட்ட காங்கிரஸ்..!

அக்டோபர் 17 ம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது

அக்டோபர் 17 ம் தேதி நடைபெறவுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 24 ம் தேதி முதல் 30 ம் தேதி வரை நடைபெறும் என்றும், அக்டோபர் 17 ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது. 

ராகுல் காந்தியை மீண்டும் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கை அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியில் மீண்டும் எழ தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட், கட்சியின் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசியுள்ளார். 

தலைவர் பதவிக்கான தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடுவார் என தகவல் வெளியாகி வரும் நிலையில், தேர்தலுக்கான தனது வியூகம் குறித்து சோனியாவுடன் கெலாட் ஆலோசனை மேற்கொண்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இச்சூழலில், தனது முதலமைச்சர் பதவியில் இருந்து விலக கெலாட் தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

சோனியாவுடனான சந்திப்பின்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கலந்து கொண்டுள்ளார். கூட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பேசியுள்ள வேணுகோபால், தேர்தலை நடுநிலையாக நடத்த வேண்டும் என்றும், எந்த வேட்பாளருக்கும் ஆதரவு அளிக்கப்பட மாட்டாது என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி குறித்த கேள்விக்கு, அது யார் போட்டியிடுகிறார் என்பதைப் பொறுத்தது என பதில் அளித்தார்.

தலைவராக தேர்வு செய்யும் பட்சத்தில், ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியை, அவரது போட்டியாளராக கருதப்படும் சச்சின் பைலட்டுக்கு தர கெலாட் மறுத்து வருவதாகவும் காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதுகுறித்து விவரித்த கெலாட், "ஒருவர் அமைச்சராகவும் இருக்க முடியும் காங்கிரஸ் தலைவராகவும் இருக்க முடியும். ஒரு பதவியில் இல்லை, மூன்று பதவிகளை என்னால் எளிதாக கையாள முடியும்" என்றார்.

ஏற்கனவே, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான போட்டியில் கட்சியின் மூத்த தலைவரான சசி தரூர் குதித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகலவ் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இதில் மற்றொரு ட்விஸ்ட்டாக மத்தியப் பிரதேச முதலமைச்சர் திக் விஜய் சிங் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாக உள்ளன.

தனியார் தொலைக்காட்சியான என்டிடிவிக்கு திக் விஜய சிங் அளித்த பேட்டியில், தானும் போட்டியிட வாய்ப்பிருப்பதாக மறைமுகமாக தெரிவித்துள்ளார். மேலும், தலைவர் பதவியை கெலாட் ஏற்றால், முதலமைச்சர் பதவியிலிருந்து அவர் கண்டிப்பாக விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

சசி தரூரா அல்லது கெலாட்டா என தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த திக் விஜய சிங், "பார்க்கலாம். நானும் என்னை போட்டியிலிருந்து விலக்கவில்லை. ஏன் என்னை போட்டியிலிருந்து வெளியே வைக்க விரும்புகிறீர்கள்?. போட்டியிட அனைவருக்கும் உரிமை உண்டு. இதற்கான விடையை 30ஆம் தேதி மாலை (வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்) தெரிந்து கொள்ளலாம்.

காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் போட்டியில் இல்லாமல் இருப்பது கவலை ஏதவும் இல்லை. யார் போட்டியிட விரும்புகிறாரோ அவருக்கு போட்டியிட உரிமை உள்ளது. மேலும் ஒருவர் போட்டியிட விரும்பவில்லை என்றால், அவர்களை கட்டாயப்படுத்தி போட்டியிட முடியாது. அவ்வளவுதான்" என்றார்

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget