Theatre : ஜிலேபியும், தந்தூரி சிக்கனும் கொண்டுவந்தா..? திரையங்கங்கள் எவற்றையெல்லாம் முடிவு செய்யலாம்? உச்சநீதிமன்றம் அதிரடி
திரையரங்குகள் வழங்கும் வசதிகள் பார்வையாளர்களைப் பொறுத்து மாறுபடும் என்பதால், ஒரே மாதிரியான டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்குமாறு திரையரங்கு உரிமையாளர்களைக் கேட்க முடியாது..
திரையரங்குகளின் உரிமையாளர்கள் திரைப்பட பார்வையாளர்கள் வெளி உணவு கொண்டு வருவதைத் தடை செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. திரையரங்குகளுக்குச் செல்லும் நபர்களின் நுழைவு உரிமையில் இதுபோன்ற 'விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை' விதிக்க உரிமையாளர்களுக்கு முழு உரிமை உண்டு, ஏனெனில் திரையரங்கம் அவர்களுடைய சொத்து என நீதிமன்றம் கூறியுள்ளது.
திரையரங்குகள் வழங்கும் வசதிகள் பார்வையாளர்களைப் பொறுத்து மாறுபடும் என்பதால், ஒரே மாதிரியான டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்குமாறு திரையரங்கு உரிமையாளர்களைக் கேட்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தனஞ்சய சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அண்மையில் தான் காஷ்மீரில் முதன்முறையாக மல்டிப்ளக்ஸ் திரையரங்கம் பல ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கோவா திரைப்பட விழாவில் காஷ்மீரைத் தழுவி எடுக்கப்பட்ட ‘காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், இந்த திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் இது வெறுப்புணர்வை தூண்டும் திரைப்படம் என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய படம் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இப்படம், காஷ்மீரில் இருந்து 1990ஆம் ஆண்டு பண்டிதர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் இன்றளவும் கடும் விமர்சனங்களைப் பெற்றது.
இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மிகைப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்றும், இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்தன.
அதே சமயம் இப்படம் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜகவினர் பலரது பாராட்டுகளைப் பெற்றது. மேலும், பாஜக ஆளும் சில மாநிலங்களில் இப்படத்துக்க்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு வெளியான பாலிவுட் படங்கள் பெரும்பாலும் படுதோல்வியை சந்தித்த நிலையில், சர்ச்சைகளைத் தாண்டி இப்படம் நாடு முழுவதும் 340 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவா திரைப்பட விழாவில் ‘காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் திரையிடப்பட்ட நிலையில், இந்த திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் இது வெறுப்புணர்வை தூண்டும் திரைப்படம் என தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
சுமார் 9 நாட்கள் நடைபெற்ற கோவா திரைப்பட விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280 படங்கள் திரையிடப்பட்டது. இந்த விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படமும் திரையிடப்பட்டு, விருதுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
இந்த சூழலில், திரைப்பட விழாவின் நேற்று கடைசி நாளான்று இந்த திரைப்பட விழாவின் தேர்வுக்குழு தலைவர் நாடவ் லேபிட் பேசினார். அப்போது பேசிய அவர், ”தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் திரைப்படம். இது திரைப்பட விழாவுக்கு ஏற்ற திரைப்படம் இல்லை. இந்த படத்தை பார்த்த நாங்கள் அனைவரும் கலக்கமடைந்தோம், அதிர்ச்சியடைந்தோம். இந்த விழாவில் நாங்கள் உணர்ந்த உணர்வு கலைக்கும், வாழ்க்கைக்கும் இன்றியமையாத ஒரு விமர்சன விவாதத்தையும் உண்மையாக ஏற்றுக்கொள்ளும் என்பதால், இந்த திரைப்படம் திரையிடப்பட்டதற்கு நாங்கள் வெளிப்படையாகவே அதிருப்தியை தெரிவித்து கொள்கிறோம்.” என்றார்.
காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் தனது அடுத்த படத்திற்கு ‘தி வேக்சின் வார்’ எனப் பெயர் வைத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets