மேலும் அறிய

புதுச்சேரிக்கு 2 ஆயிரம் கோடி ரூபாயை கூடுதல் நிதியாக வழங்க வேண்டும் - அமித்ஷாவிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை

மத்திய நிதியுதவி திட்டங்களுக்கு மற்ற யூனியன் பிரதேசங்களைப்போல் புதுச்சேரிக்கும் 100 சதவீத நிதியுதவி வழங்க கோரிக்கை

புதுச்சேரிக்கு ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்று அமித்ஷாவிடம்  முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தினார். புதுவை நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா  டெல்லி புறப்பட்டார். விமான நிலையத்தில் அவரிடம், முதலமைச்சர் ரங்கசாமி ஒரு கடிதம் வழங்கினார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. மாநில அந்தஸ்து இல்லாததால் எந்தவித அதிகாரமுமின்றி புதிதாக வேலைவாய்ப்பு, புதிய தொழிற்சாலைகள், சுற்றுலாவுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்க முடியவில்லை. இந்த நிதியாண்டில் புதுவை மாநிலத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் நிதியுதவி வழங்கவேண்டும். கடந்த நிதியாண்டில் ரூ.1,874 கோடி மத்திய நிதியுதவி வழங்கப்பட்ட நிலையில், இந்த நிதியாண்டில் ரூ.1,724 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.150 கோடி குறைவாகும்.


புதுச்சேரிக்கு 2 ஆயிரம் கோடி ரூபாயை கூடுதல் நிதியாக வழங்க வேண்டும் - அமித்ஷாவிடம் முதல்வர் ரங்கசாமி கோரிக்கை

மத்திய நிதியுதவி திட்டங்களுக்கு மற்ற யூனியன் பிரதேசங்களைப்போல் புதுச்சேரிக்கும் 100 சதவீத நிதியுதவி வழங்கவேண்டும். விமான நிலைய விரிவாக்கத்துக்கு 395 ஏக்கர் நிலம் தமிழக பகுதியிலும், 30 ஏக்கர் நிலம் புதுச்சேரி பகுதியிலும் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இதற்கு தேவையான நிதி ரூ.425 கோடியை வழங்கவேண்டும். புதுவை சட்டமன்றம் முற்றிலும் பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ரூ.300 கோடியில் புதிதாக சட்டமன்ற கட்டிடம் கட்ட திட்டமிட்டுள்ளோம். அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்ய வேண்டும். சுகாதாரத்துறையில் ஆஸ்பத்திரிகள், மருத்துவ கல்லூரிகள், பல் மருத்துவ கல்லூரிகளை மேம்படுத்த ரூ.500 கோடி சிறப்பு நிதி வழங்கவேண்டும்.

புதுவையில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் நலிவடைந்துள்ளன. கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஸ்பின்னிங் மில் மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த ரூ.500 கோடி சிறப்பு நிதி வழங்கவேண்டும். புதுவை அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் நிலுவைத்தொகைகளை வழங்க ரூ.186.50 கோடியை வழங்கவேண்டும். வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிக அளவில் பெய்ததால் நகரம் மற்றும் கிராமப்புற சாலைகள் மிகவும் மோசமாக காட்சியளிக்கின்றன. அவற்றை சரிசெய்ய மாநில அரசிடம் போதிய நிதி இல்லை. எனவே மத்திய அரசு சிறப்பு நிதியுதவியாக ரூ.150 கோடி வழங்கவேண்டும். ஒட்டுமொத்தமாக ரூ.2 ஆயிரம் கோடியாவது கூடுதல் நிதியாக பட்ஜெட் சமர்ப்பிப்பதற்கு முன் வழங்கவேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
Ditwah Cyclone: மிரட்டும் டிட்வா புயல்... புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
DMDK: தேமுதிக யாருடன் கூட்டணி? தேதியை அறிவித்த பிரேமலதா விஜயகாந்த்
EPS:
EPS: "விவசாயிகளுக்கு பச்சைத் துரோகி நானா?" ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
EV Scooter Sales: ஓலா, பஜாஜை தூக்கி சாப்பிட்ட டிவிஸ்.. நடுங்க வைத்த நவம்பர் விற்பனை.. நம்பர் 1 EV ஸ்கூட்டர் எது?
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
ஆப்படிக்க போகும் AI.. 2035-க்குள் 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது.. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்
Embed widget