மேலும் அறிய

Reservation: சமூக நீதியில் புதிய உச்சம்; இட ஒதுக்கீட்டின் வரம்பை உயர்த்த சத்தீஸ்கர் அரசு...! சட்டசபையில் மசோதா தாக்கல்..

உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீட்டின் சதவிகித்தை மாநில அரசுகள் உயர்த்தி வருகிறது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்திருந்தது. இது, அரசியலமைப்புக்கு எதிரானது என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், மற்ற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

இட ஒதுக்கீடு:

குறிப்பாக, 50 சதவிகித வரம்புக்கு அதிகமாக இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என இந்திரா சாஹ்னி வழக்கில் உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை அதே உச்ச நீதிமன்றமே மீறி இருப்பதாக மூத்த தலைவர்கள் வாதம் முன்வைக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீட்டின் சதவிகித்தை மாநில அரசுகள் உயர்த்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, மாநில அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டின் சதவிகிதத்தை ஜார்கண்ட் அரசு உயர்த்தி இருந்தது. அதாவது, மாநிலத்தில் சமூக ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் நலிவடைந்த பிரிவினருக்கு மாநில அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டின் அளவை 60% லிருந்து 77% ஆக உயர்த்தும் மசோதா ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

சத்தீஸ்கர்:

இந்நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மாநிலத்தின் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டை 76 சதவீதமாக உயர்த்துவதற்கான இரண்டு மசோதாக்கள் சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி அவை சட்டங்களாகும் பட்சத்தில், பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு (எஸ்டி) 32 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியோர்:

பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கான (எஸ்சி) இட ஒதுக்கீடு 13 சதவீதமாகவும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். மற்ற இட ஒதுக்கீட்டின் கீழ் பலன் பெறாத பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 4 சதவீதம் வழங்கப்பட உள்ளது.

இந்த இரண்டு மசோதாக்களையும் நிறைவேற்றுவதற்காகத்தான் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டது. முன்னதாக, 2012 ஆம் ஆண்டு அப்போதைய பாஜக அரசின் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், பழங்குடியினரின் இடஒதுக்கீடு 20 சதவீதமாகக் குறைந்தது. 

தேர்தல்:

இதைத்தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பழங்குடியினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, பாஜக அரசின் அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததில் இருந்து, கல்வி நிலையங்களில் சேர்க்கையையும் அரசு பணிகளுக்கு ஆட்கள் எடுப்பதையும் அம்மாநில அரசு நிறுத்தியது.

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல, மாநில அரசு கொண்டு வந்துள்ள இட ஒதுக்கீடு தொடர்பான புதிய சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்யாதவாறு அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் இந்த இடஒதுக்கீட்டைப் பட்டியலிடுமாறு மத்திய பாஜக அரசை மாநில அரசு வலியுறுத்த வாய்ப்புள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: “தமிழ்நாடு காங்கிரஸில் ஊழல்“, பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல், அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி - 11 மணி செய்திகள்
“தமிழ்நாடு காங்கிரஸில் ஊழல்“, பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல், அமெரிக்காவிற்கு ஈரான் பதிலடி - 11 மணி செய்திகள்
DK Shivakumar: சவால்களை வென்ற சாணக்கியர்: 'கிங் மேக்கர்' டூ முதலமைச்சர்... டி.கே.சிவக்குமாரின் அசுரப்பயணம்!
DK Shivakumar: சவால்களை வென்ற சாணக்கியர்: 'கிங் மேக்கர்' டூ முதலமைச்சர்... டி.கே.சிவக்குமாரின் அசுரப்பயணம்!
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
’’நானே பொறுப்பு; சிபிஎஸ்இ ஆன்ஸ்கிரீன் மதிப்பீட்டில் பிழைகள் சரிசெய்யப்படும்’’ உறுதியளித்த கல்வி அமைச்சர்
Siddaramaiah:
Siddaramaiah: "எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை..தலைமை சொன்னதால் ராஜினாமா" கண்ணீருடன் விடைபெற்ற சித்தராமையா
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget