மேலும் அறிய

Reservation: சமூக நீதியில் புதிய உச்சம்; இட ஒதுக்கீட்டின் வரம்பை உயர்த்த சத்தீஸ்கர் அரசு...! சட்டசபையில் மசோதா தாக்கல்..

உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீட்டின் சதவிகித்தை மாநில அரசுகள் உயர்த்தி வருகிறது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்திருந்தது. இது, அரசியலமைப்புக்கு எதிரானது என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், மற்ற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

இட ஒதுக்கீடு:

குறிப்பாக, 50 சதவிகித வரம்புக்கு அதிகமாக இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என இந்திரா சாஹ்னி வழக்கில் உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை அதே உச்ச நீதிமன்றமே மீறி இருப்பதாக மூத்த தலைவர்கள் வாதம் முன்வைக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீட்டின் சதவிகித்தை மாநில அரசுகள் உயர்த்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, மாநில அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டின் சதவிகிதத்தை ஜார்கண்ட் அரசு உயர்த்தி இருந்தது. அதாவது, மாநிலத்தில் சமூக ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் நலிவடைந்த பிரிவினருக்கு மாநில அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டின் அளவை 60% லிருந்து 77% ஆக உயர்த்தும் மசோதா ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

சத்தீஸ்கர்:

இந்நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மாநிலத்தின் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டை 76 சதவீதமாக உயர்த்துவதற்கான இரண்டு மசோதாக்கள் சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி அவை சட்டங்களாகும் பட்சத்தில், பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு (எஸ்டி) 32 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியோர்:

பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கான (எஸ்சி) இட ஒதுக்கீடு 13 சதவீதமாகவும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். மற்ற இட ஒதுக்கீட்டின் கீழ் பலன் பெறாத பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 4 சதவீதம் வழங்கப்பட உள்ளது.

இந்த இரண்டு மசோதாக்களையும் நிறைவேற்றுவதற்காகத்தான் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டது. முன்னதாக, 2012 ஆம் ஆண்டு அப்போதைய பாஜக அரசின் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், பழங்குடியினரின் இடஒதுக்கீடு 20 சதவீதமாகக் குறைந்தது. 

தேர்தல்:

இதைத்தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பழங்குடியினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, பாஜக அரசின் அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததில் இருந்து, கல்வி நிலையங்களில் சேர்க்கையையும் அரசு பணிகளுக்கு ஆட்கள் எடுப்பதையும் அம்மாநில அரசு நிறுத்தியது.

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல, மாநில அரசு கொண்டு வந்துள்ள இட ஒதுக்கீடு தொடர்பான புதிய சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்யாதவாறு அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் இந்த இடஒதுக்கீட்டைப் பட்டியலிடுமாறு மத்திய பாஜக அரசை மாநில அரசு வலியுறுத்த வாய்ப்புள்ளது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget