மேலும் அறிய

Reservation: சமூக நீதியில் புதிய உச்சம்; இட ஒதுக்கீட்டின் வரம்பை உயர்த்த சத்தீஸ்கர் அரசு...! சட்டசபையில் மசோதா தாக்கல்..

உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீட்டின் சதவிகித்தை மாநில அரசுகள் உயர்த்தி வருகிறது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உறுதி செய்திருந்தது. இது, அரசியலமைப்புக்கு எதிரானது என திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், மற்ற ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

இட ஒதுக்கீடு:

குறிப்பாக, 50 சதவிகித வரம்புக்கு அதிகமாக இட ஒதுக்கீடு வழங்கப்படக் கூடாது என இந்திரா சாஹ்னி வழக்கில் உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை அதே உச்ச நீதிமன்றமே மீறி இருப்பதாக மூத்த தலைவர்கள் வாதம் முன்வைக்கின்றனர். உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீட்டின் சதவிகித்தை மாநில அரசுகள் உயர்த்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, மாநில அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டின் சதவிகிதத்தை ஜார்கண்ட் அரசு உயர்த்தி இருந்தது. அதாவது, மாநிலத்தில் சமூக ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் நலிவடைந்த பிரிவினருக்கு மாநில அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டின் அளவை 60% லிருந்து 77% ஆக உயர்த்தும் மசோதா ஜார்கண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

சத்தீஸ்கர்:

இந்நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மாநிலத்தின் ஒட்டுமொத்த இடஒதுக்கீட்டை 76 சதவீதமாக உயர்த்துவதற்கான இரண்டு மசோதாக்கள் சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி அவை சட்டங்களாகும் பட்சத்தில், பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு (எஸ்டி) 32 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியோர்:

பட்டியலிடப்பட்ட சாதிகளுக்கான (எஸ்சி) இட ஒதுக்கீடு 13 சதவீதமாகவும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும். மற்ற இட ஒதுக்கீட்டின் கீழ் பலன் பெறாத பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 4 சதவீதம் வழங்கப்பட உள்ளது.

இந்த இரண்டு மசோதாக்களையும் நிறைவேற்றுவதற்காகத்தான் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டது. முன்னதாக, 2012 ஆம் ஆண்டு அப்போதைய பாஜக அரசின் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனால், பழங்குடியினரின் இடஒதுக்கீடு 20 சதவீதமாகக் குறைந்தது. 

தேர்தல்:

இதைத்தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பழங்குடியினர் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, பாஜக அரசின் அரசாணையை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததில் இருந்து, கல்வி நிலையங்களில் சேர்க்கையையும் அரசு பணிகளுக்கு ஆட்கள் எடுப்பதையும் அம்மாநில அரசு நிறுத்தியது.

தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல, மாநில அரசு கொண்டு வந்துள்ள இட ஒதுக்கீடு தொடர்பான புதிய சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்யாதவாறு அரசியலமைப்பின் ஒன்பதாவது அட்டவணையில் இந்த இடஒதுக்கீட்டைப் பட்டியலிடுமாறு மத்திய பாஜக அரசை மாநில அரசு வலியுறுத்த வாய்ப்புள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget