மேலும் அறிய

100 மணிநேர போராட்டம்...ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு...எப்படி நடந்தது? திக் திக் நிமிடங்கள்

ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை, மாவட்ட நிர்வாகம் ஆகியவை கூட்டாக மீட்பு பணிகளை மேற்கொண்டன.

சத்திஸ்கர் ஜான்ஜ்கிர் சம்பா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் 80 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 11 வயது குழந்தை ஒன்று, 104 மணி நேர போராட்டத்திற்கு பிறகு செவ்வாய்கிழமை இரவு வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.  இதை அலுவலர்கள் உறுதி செய்துள்ளனர். 

தேசிய பேரிடர் மீட்பு படையினர், இந்திய ராணுவத்தினர், உள்ளூர் காவல்துறையினர், மாவட்ட நிர்வாகத்தினர் என 500க்கும் மேற்பட்டவர்கள், கடந்த வெள்ளி (ஜூன் 10) முதல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதுகுறித்து சத்திஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ட்விட்டர் பக்கத்தில், "அனைவரின் பிரார்த்தனையாலும், மீட்புக் குழுவினரின் இடைவிடாத அர்ப்பணிப்பு முயற்சியாலும், ராகுல் சாஹு ஆழ்துளை கிணற்றிலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

 

மீட்கப்பட்ட பிறகு, பிலாஸ்பூர் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் ராகுல் சாஹுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ராகுலின் உடல்நிலை குறித்து விளக்கியுள்ள பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர சுக்லா, "அவரது உடல்நிலை சீராக உள்ளது. 

விரைவில் குணமடைவார். அவர் சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் ஆம்புலன்சில் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், இதற்காக சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திற்கு பசுமை வழிச்சாலை உருவாக்கப்பட்டது. நாங்கள் வெற்றி அடைந்துள்ளோம்.

எங்கள் குழு வெற்றி அடைந்துள்ளது. இது ஒரு சவாலான சூழல். நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன. முதலமைச்சர் பூபேஷ் பாகேல் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வந்தார். ராகுலை நேரடியாக பிலாஸ்பூரில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம்" என்றார். 

பிஹ்ரிட் கிராமத்தில் உள்ள மல்கரோடா வளர்ச்சித் பிளாக்கை சேர்ந்த ராகுல், வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி அளவில் வீட்டின் பின்னே அமைந்துள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்ததாக காவல் கண்காணிப்பாளர் விஜய் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையின் சத்தத்தை கேட்டு குடும்பத்தினர் கிராமவாசிகளுக்கு தகவல் கொடுத்தனர்.  பின்னர், மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறை அலுவலர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது. 

இதுகுறித்து காவல்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "அந்த 80 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணறு அவரது வீட்டு முற்றத்தில் உள்ள காய்கறி தோட்டத்தில் முன்பு தோண்டபட்டு தண்ணீர் கிடைக்காததால், அது பயன்படுத்தப்படாமல், மூடப்படாமல் கிடந்ததாக குழந்தையின் தந்தை கூறினார்" என்றார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Trump's New Tariff: ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Indigo Flights: ரூ.827 கோடி..கடுப்பான மத்திய அரசு - இண்டிகோ விமான நிறுவனத்திற்கு ஆப்பு? முடியாத குழப்பம்
Trump's New Tariff: ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
ஆஹா.. மறுபடியும் தொடங்கிட்டாருயா.! விவசாய பொருட்கள் மீது வரி; ட்ரம்ப்பின் அடுத்த பிளான்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Embed widget