மேலும் அறிய

Chandrababu Naidu: என்னை கொல்ல முயற்சி நடக்கிறது; சி.பி.ஐ. விசாரணை தேவை - சந்திரபாபு நாயுடு பரபரப்பு புகார்!

Chandrababu Naidu: என்னை கொல்ல பல முறை முயற்சி நடந்துள்ளது. ஆனால், என் மீதே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது என சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் ஆந்திர முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு சித்தூர் தாக்குதல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 விஜயநகரம் பகுதியில் செய்தியாளர்களை சந்த்தித்த சந்திரபாபு நாயுடு, “என்னை கொல்ல பல முறை முயற்சி நடந்துள்ளது. ஆனால், என் மீதே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது. எனது பாதுகாவலர்கள், மீடியா மற்றும் பொதுமக்களே இதற்கு சாட்சி. என் மீதான கொலை முயற்சிகளை நான் அறிவேன். எனவே இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்துவது அவசியம்.” என்று தெரிவித்து சித்தூர் மாவட்டத்தில் நடந்த பேரணியின் வீடியோவை செய்தியாளர்களிடம் காண்பித்தார். 

” எங்கள் கட்சியினர் மீது பொய்யான வழக்குகளைப் பதிவு செய்து தேர்தல் சமயத்தில் அதை அவர்களுக்கு சாதகமாக மாற்றுவதற்கு பார்க்கிறார்கள். நான் மக்களிடையே செல்ல கூடாது என்பதற்காகவே என் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். என் மீது கல்வீசி தாக்குதல் நடந்தாலும், அங்கு வெறும் பார்வையாளர்களை போல காவல் துறையினர் இருக்கின்றனர்.  ஒரு எதிர் கட்சி தலைவர் வரும்போது, அங்கு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் கூட்டமாக வரவேண்டிய அவசியம் என்ன? என்று ஜெகன் மோகன் ரெட்டி மீது குற்றாசாட்டுகளை முன்வைத்தார். 

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க தவறிட்டதாகக் கூறி அணைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ள பகுதிகளுக்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இவர் கடந்த வாரம் சித்தூர் மாவட்டம் புங்கனூரில்  சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக ரோட் ஷோ-வில் பங்கேற்றார். அப்போது அன்னமய மாவட்டம் தம்பல்லப்பள்ளி தொகுதிக்குட்பட்ட அங்கல்லுவில் சந்திரபாபு பேசி கொண்டுருந்தபோது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் சிலர் அங்கு வந்தனர். தெலுங்கு தேசம் கட்சியினரை தூண்டிவிட்டு சந்திரபாபு பேசியதாகவும் இதனால் ஏற்பட்ட வன்முறையை தடுக்க சென்ற காவல்துறையினரை அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதோடு,காவல் துறை வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. 

சில நாட்களுக்கு முன்பு அன்னமயா மாவட்டம் புரபாலகோட்டா பகுதிக்கு சென்றபோது ஆளும் கட்சிக்கும், தெலுங்கு தேசம் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியது. இதில் காவல் துறையினர் உள்பட 50 பேர் படுகாயம்டைந்தனர். மேலும், காவல் துறை வாகனங்கள், ஏராளமான கடைகள் சேதப்படுத்தப்பட்டன.

அதுபோல சித்தூர் மாவட்ட புங்கனூர் பகுதியிலும் கலவரம் ஏற்பட்டது. அங்கு தெலுங்கு தேசம் கட்சியைச் சேந்த 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அங்கல்லு கிராமத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக உமாபதி ரெட்டி என்பவா் அளித்த புகாரில், முடிவீடு பகுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனையியல் சட்டத்தின் 120 பி, 147, 153, 307, 115, 109, 323, 324, 506 ஆகிய பிரிவுகளின்கீழ் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சந்திரபாபு நாயுடு பெயா் சோ்க்கப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கங்காதர ராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவா்கள் தேவினேனி உமா, அமரநாத ரெட்டி, ராம்கோபால் ரெட்டி உள்ளிட்டோா் பெயா்களும் இடம்பெற்றுள்ளதாக அவா் தெரிவித்தாா்.


 

Freelancer Jhansi Rani. MA
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
அடுத்த இடி.. காஸ்ட்லியாகும் ரயில் பயணம்- ஜூன் 1 முதல் உணவு, குளிர்பானங்கள் விலை உயர்வு
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் ED ரெய்டு..
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீடுகளில் ED ரெய்டு..
Top 10 Headlines: இந்தியாவில் எபோலா தொற்று? .. உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 Headlines: இந்தியாவில் எபோலா தொற்று? .. உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. 11 மணி வரை நடந்தது என்ன?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Modi Meeting: ‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
‘எங்களின் உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்’ - பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் பேசியது என்ன? வெளியான பரபரப்புத் தகவல்கள்
Vijay Modi Meeting: டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
டெல்லி சந்திப்பு; விஜய்யிடம் பிரதமர் மோடி பேசிய முதல் வார்த்தை.! முதலமைச்சரின் ரியாக்ஷன் என்ன.?
EPS Vs CV Shanmugam: தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
தனித்து விடப்பட்ட சிவி சண்முகம்; சமாதானமாகாமல் ஆவேசம்; ராஜினாமா செய்கிறாரா.? அடுத்து என்ன.?
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
வெளியேறப்போவது யார்? இன்னும் சற்று நேரத்தில் எலிமினேட்டர்! குஜராத்துடன் மல்லுகட்டப்போவது சன்ரைசர்ஸா? ராஜஸ்தானா?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
'என்னை ஏன் பேசவிடல?' - தவெக எம்எல்ஏவை ரவுண்ட் கட்டிய திமுகவினர்; பாதியிலேயே கிளம்பினார் - என்ன நடந்தது?
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
EPS: மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்! அதிகாரத்தை இன்னும் பலமாக்க ஸ்கெட்ச் போடும் எடப்பாடி பழனிசாமி!
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
தவெக ஆட்சியில் அண்ணாசாலை - சைதாப்பேட்டை மேம்பால பணிகளில் தொய்வா? உண்மை என்ன?
SP Velumani: “நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
“நாங்கள் ஒன்றுபட்டுவிட்டோம்.. இனி No Problem“-சபாநாயகரை சந்தித்தபின் SP வேலுமணி உற்சாக பேட்டி
Embed widget