மேலும் அறிய

Mamata Banerjee | "நான் ஒன்றும் காலடி நாயில்லை” : மம்தா பானர்ஜியை கொல்ல சதி.. பேராசிரியர் மீது வழக்கு

”நான் இன்னும் அவரை கொல்ல விரும்புகிறேன். நான் ஒன்றும் அவர்களின் காலடி நாய் இல்லை. படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நான் எதிரானவன்”...

மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியைக் கொன்றுவிடுவதாக சமூக வலைதளங்களில் மிரட்டல் விடுத்ததாக கொல்கத்தா பல்கலைக்கழக பேராசிரியர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

போலீசில் புகார் அளித்த முனைவர்:

தமல் தத்தா என்ற முனைவர் அளித்த புகாரின் அடிப்படையில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை பேராசிரியராக பணிபுரியும் அரிந்தம் பட்டாச்சார்யா மீது ஹேர் ஸ்ட்ரீட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மூத்த காவல் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

தமல் தத்தா அளித்த புகாரின் அடிப்படையில் விலங்கியல் பேராசிரியர் அரிந்தம் பட்டாச்சார்யா மீது பொது மக்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் நடந்துகொள்வது, கொலை அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்துவேன் என மிரட்டுவது, குற்றச்செயலுக்கு சதித்திட்டம் தீட்டுவதும் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக குற்றப்பிரிவு காவல்துறை இணை ஆணையர் முரளிதர் சர்மா கூறி உள்ளார்.

பேராசிரியரியரை காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டம்:

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக பேராசிரியர் அரிந்தம் பட்டாச்சாரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவரை இன்னும் காவலில் எடுத்து விசாரணை நடத்த இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Mamata Banerjee |

அப்படி என்ன பேசினார் பேராசிரியர் அரிந்தம் பட்டாச்சார்யா?

பேஸ்புக் மெசஞ்சரில் அரிந்தம் பட்டாச்சாரியாவிடம் அவரது நண்பர் ”மேற்கு வங்கத் தேர்தலுக்கு முன் முதலமைச்சர் கொலை செய்வேன் என்று நீங்கள் வாட்ஸ் அப் குழுவில் சொன்னீர்கள். ஆனால், இப்போது உங்களை காப்பாற்றிக்கொள்ள திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் வீட்டிற்கு சென்றுள்ளீர்கள்” எனக் கேள்வி எழுப்பி உள்ளார். இதற்கு பதில் அளித்த பட்டாச்சார்யா “நான் இன்னும் கூட அவரை கொல்ல விரும்புகிறேன். நான் ஒன்றும் அவர்களின் காலடி நாய் இல்லை. படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நான் எதிரானவன்” என பதிலளித்து உள்ளார்.

கொலை மிரட்டல் புகாருக்கு பேராசிரியர் மறுப்பு:

இதுகுறித்து விளக்கம் அளித்து உள்ள பேராசிரியர் அரிந்தம் பட்டாச்சார்யா, தன் மீது சுமத்தப்பட்டு உள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து உள்ளார். ​​"இது எனக்கும், என் நண்பருக்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடல். நான் பொதுவெளியில் தெளிவாக கொலை மிரட்டல் விடுக்கவில்லை. முதலமைச்சருக்கு எதிராக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. புகார் கொடுத்த முனைவர் தமல் தத்தா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர். என் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்கிறேன். அதன் பிறகுதான் நான் இது குறித்து சட்ட ஆலோசனை பெற இருக்கிறேன்.” என்றார்.

பட்டாச்சார்யாவின் பேராசிரியர் பணிக்கு ஆபத்து:

மம்தா பானர்ஜிக்கு பேராசிரியர் அரிந்தம் பட்டாச்சார்யா கொலை மிரட்டல் விடுத்ததற்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற மேற்கு வங்க கல்லூரி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது. 17 ஆண்டுகளாக விலங்கியல் பிரிவு பேராசிரியராக பணிபுரிந்து வரும் அரிந்தம் பட்டாச்சார்யாவின் பணியும் தற்போது கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த ஏப்ரல் 2012-ம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியர் அம்பிகேஷ் மஹாபத்ரா, மேற்கு வங்க முதல்வரை விளக்குகிறார் என்று கார்ட்டூன் அனுப்பியதாக கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget