Breaking Tamil LIVE : பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கும் குடியரசுத் தலைவர்
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
சித்திரைத் திருவிழாவின் 11-வது நாளான இன்று மாசி வீதிகளில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் 8 ஆம் நாள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்யும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து 9வது நாளின் இரவு திக் விஜயம் நடந்தது. 10 ஆம் நாளான நேற்று மீனாட்சியம்மன் - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வைபவம் வெகுவிமரிசையாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மேடையில் மங்கல வாத்தியங்கள் முழுங்க திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து இரவில் யானை வாகனத்தில் சுந்தரேஸ்வரரும், ஆனந்த ராயர் பூப்பலக்கில் மீனாட்சியம்மனும் எழுந்தருளினர்.
சித்திரை பெருவிழாவின் முற்பகுதியில் நடைபெறும் மீனாட்சி கோயில் விழாக்களின் உச்ச விழாவும், இறுதி விழாவுமான தேரோட்டம் இன்று காலை 6:30 மணிக்கு துவங்கி கோலகலமாக நடைபெற்று வருகிறது. திருத்தேரோட்ட நிகழ்வை காண மதுரை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மதுரையில் வருகை தந்துள்ளனர். முன்னதாக கீழ மாசி வீதிக்கு மீனாட்சி - சுந்தரேஸ்வரர் பல்லக்கில் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து “ஹரஹர மகாதேவா.. நமச்சிவாயம் வாழ்க” என்ற கோஷம் விண்ணதிர பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி நீதிமன்ற காவல் இன்று முடிவடைகிறது. இதன் காரணமாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்படுகிறார். அவரது காவல் நீடிக்கப்படுமா அல்லது மாறுபட்ட தீர்ப்பு வருமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வர, இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் பணிகள் கட்சிகள் தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு மாநிலங்களில் இந்தியா கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் 28 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்காக பொதுக்கூட்ட மேடையில் இரண்டு இருக்கைகள் காலியாக விடப்பட்டிருந்தன. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் நாட்டில் நடக்கும் பல்வேறு முக்கிய விஷயங்களை உடனுக்குடன் காணலாம்.
பத்ம விருதுகளை வழங்கி கவுரவிக்கும் குடியரசுத் தலைவர்
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கி வருகிறார்.
திருவண்ணாமலைக்கு சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு, 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி கிரிவலம் நடைபெறுவதால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து செல்வதுற்கு 2500 சிறப்பு பேருந்துகள் 5326 நடைகள் இயக்கபடவுள்ளது.
Breaking Tamil LIVE : வைகையில் இறங்க 2400 பேருக்கு அனுமதி..!
கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வில் 2400 பேர் மட்டுமே ஆற்றில் இறங்க அனுமதி; அழகருக்கு பீய்ச்சி அடிக்கும் நீரில் ரசாயனம் ஏதும் கலக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
Breaking Tamil LIVE : அடுத்த 3 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!
அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, திருவாரூர், தஞ்சாவூர், திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, சிவகங்கை, ராமநாதபுரம், குமரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Madurai Chithirai Thiruvizha : மதுரை: சித்திரைத் திருவிழாவில் பக்தர்களுக்கு ரோஸ்மில்க் வழங்கும் இஸ்லாமியர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets