மேலும் அறிய

Rahul Gandhi on Modi: ”மணிப்பூர் மட்டுமல்ல.. ஹரியானா, பஞ்சாப்பையும் பாஜக விற்றுவிடும்” - ராகுல் காந்தி சாடல்

நாட்டை பிளவுபடுத்துவது தான் பாஜக - ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்துவது தான் பாஜக- ஆர்எஸ்எஸ்-ன் நோக்கம் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

”நாட்டை பிளவுபடுத்தும் பாஜக - ஆர்எஸ்எஸ்”

இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக சாடினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்ஒரு பக்கம் நீங்கள் நாட்டின் மீது அன்பு கொண்டு இருக்கிறீர்கள். நாடு புண்படும்போதோ, குடிமக்கள் பாதிக்கப்படும்போதெல்லாம், நீங்களும் பாதிக்கப்படுவீர்கள், வருத்தப்படுவீர்கள். ஆனால், அவர்கள் மனதில் அப்படியொரு உணர்வு இல்லை. ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வினருக்கு எந்த வலியும் இல்லை. ஏனென்றால், அவர்கள் நாட்டைப் பிரிக்கும் வேலையைச் செய்கிறார்கள்.

”மணிப்பூரை எரிப்பார்கள்”

பாஜக- ஆர்எஸ்எஸ்க்கு அதிகாரம் மட்டுமே வேண்டும். அதிகாரத்தைப் பெற எதையும் செய்வார்கள். அதிகாரத்திற்காக மணிப்பூரை எரிப்பார்கள். முழு நாட்டையும் எரிப்பார்கள். நாட்டின் துயரம் மற்றும் வலியைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அது ஹரியானா, பஞ்சாப் அல்லது உத்தரபிரதேசமாக இருந்தாலும், அவர்கள் அதிகாரத்தை மட்டுமே விரும்புவதால் அவர்கள் முழு நாட்டையும் விற்றுவிடுவார்கள்.  தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்தியல் போர் நடைபெற்று வருகிறது. 

அதிகாரத்தை விரும்பும் பாஜக:

காங்கிரஸ் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது, நாட்டை ஒன்றிணைத்து, இந்தியாவின் சமத்துவமற்ற சமூக அமைப்புக்கு எதிராகப் போராடுகிறது. அதேசமயம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலரே இந்த நாட்டை இயக்கி அனைத்து செல்வங்களையும் சொந்தமாக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்-பாஜக விரும்புகிறது. அவர்களுக்கு நீதித்துறை, ராணுவம், தேர்தல் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் வேண்டும். விசாரணை அமைப்புகள் மற்றும் பள்ளிகள், அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

”சிலருக்கான பிரதமர்”

பிரதமர் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே சேவை செய்கிறார், மணிப்பூருடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. மணிப்பூரில் நடந்ததை நீங்கள் பார்த்தீர்கள். மணிப்பூரைப் பற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசாததை கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இந்தியாவில் ஒரு மாநிலம் எரிகிறது என்றால், இந்தியப் பிரதமர் குறைந்தபட்சம் எதிர்வினையாற்றியிருப்பார் என்று நீங்கள் நினைத்திருக்க வேண்டும். இந்தியப் பிரதமர் இம்பாலுக்கு மக்களுடன் பேசச் சென்றிருப்பார் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள், ஆனால் அது எதுவும் நடக்கவில்லை.  மணிப்பூரைப் பற்றி மோடி மௌனமாக இருப்பதற்குக் காரணம், அவர் "தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் பிரதமராக" இருப்பது தான்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரதமர்:

மோடி ஆர்.எஸ்.எஸ்-ன் பிரதமர். மணிப்பூருடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. மணிப்பூரில் அவரது சித்தாந்தம் வன்முறைக்கு வழிவகுத்தது என்பது அவருக்குத் தெரியும். ஆனால், களத்தில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வலியால் அவர் பாதிக்கப்படவில்லை" எனவும் ராகுல் காந்தி சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
குடிநீர், மழைநீர், போக்குவரத்து..! சென்னையின் வளர்ச்சி & மேம்பாட்டிற்கான பட்ஜெட் அறிவிப்புகள்
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
மகளீருக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்புகள்.! என்னென்ன தெரியுமா.? லிஸ்ட் இதோ..
Embed widget