மேலும் அறிய

Rahul Gandhi on Modi: ”மணிப்பூர் மட்டுமல்ல.. ஹரியானா, பஞ்சாப்பையும் பாஜக விற்றுவிடும்” - ராகுல் காந்தி சாடல்

நாட்டை பிளவுபடுத்துவது தான் பாஜக - ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்துவது தான் பாஜக- ஆர்எஸ்எஸ்-ன் நோக்கம் என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

”நாட்டை பிளவுபடுத்தும் பாஜக - ஆர்எஸ்எஸ்”

இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக சாடினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்ஒரு பக்கம் நீங்கள் நாட்டின் மீது அன்பு கொண்டு இருக்கிறீர்கள். நாடு புண்படும்போதோ, குடிமக்கள் பாதிக்கப்படும்போதெல்லாம், நீங்களும் பாதிக்கப்படுவீர்கள், வருத்தப்படுவீர்கள். ஆனால், அவர்கள் மனதில் அப்படியொரு உணர்வு இல்லை. ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க.வினருக்கு எந்த வலியும் இல்லை. ஏனென்றால், அவர்கள் நாட்டைப் பிரிக்கும் வேலையைச் செய்கிறார்கள்.

”மணிப்பூரை எரிப்பார்கள்”

பாஜக- ஆர்எஸ்எஸ்க்கு அதிகாரம் மட்டுமே வேண்டும். அதிகாரத்தைப் பெற எதையும் செய்வார்கள். அதிகாரத்திற்காக மணிப்பூரை எரிப்பார்கள். முழு நாட்டையும் எரிப்பார்கள். நாட்டின் துயரம் மற்றும் வலியைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. அது ஹரியானா, பஞ்சாப் அல்லது உத்தரபிரதேசமாக இருந்தாலும், அவர்கள் அதிகாரத்தை மட்டுமே விரும்புவதால் அவர்கள் முழு நாட்டையும் விற்றுவிடுவார்கள்.  தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கருத்தியல் போர் நடைபெற்று வருகிறது. 

அதிகாரத்தை விரும்பும் பாஜக:

காங்கிரஸ் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது, நாட்டை ஒன்றிணைத்து, இந்தியாவின் சமத்துவமற்ற சமூக அமைப்புக்கு எதிராகப் போராடுகிறது. அதேசமயம், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலரே இந்த நாட்டை இயக்கி அனைத்து செல்வங்களையும் சொந்தமாக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ்-பாஜக விரும்புகிறது. அவர்களுக்கு நீதித்துறை, ராணுவம், தேர்தல் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் வேண்டும். விசாரணை அமைப்புகள் மற்றும் பள்ளிகள், அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

”சிலருக்கான பிரதமர்”

பிரதமர் நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே சேவை செய்கிறார், மணிப்பூருடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை. மணிப்பூரில் நடந்ததை நீங்கள் பார்த்தீர்கள். மணிப்பூரைப் பற்றி பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசாததை கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இந்தியாவில் ஒரு மாநிலம் எரிகிறது என்றால், இந்தியப் பிரதமர் குறைந்தபட்சம் எதிர்வினையாற்றியிருப்பார் என்று நீங்கள் நினைத்திருக்க வேண்டும். இந்தியப் பிரதமர் இம்பாலுக்கு மக்களுடன் பேசச் சென்றிருப்பார் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள், ஆனால் அது எதுவும் நடக்கவில்லை.  மணிப்பூரைப் பற்றி மோடி மௌனமாக இருப்பதற்குக் காரணம், அவர் "தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் பிரதமராக" இருப்பது தான்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரதமர்:

மோடி ஆர்.எஸ்.எஸ்-ன் பிரதமர். மணிப்பூருடன் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. மணிப்பூரில் அவரது சித்தாந்தம் வன்முறைக்கு வழிவகுத்தது என்பது அவருக்குத் தெரியும். ஆனால், களத்தில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வலியால் அவர் பாதிக்கப்படவில்லை" எனவும் ராகுல் காந்தி சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget