மதத்தின் அடிப்படையில் தீவிரவாதம் – இந்தியா கொடுக்கப்போகும் பதிலடி! அண்ணாமலை காட்டம்!
பல்ஹாம் தாக்குதலுக்கு நிச்சயம் இந்தியா பதிலடி கொடுக்கும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பல்ஹாம் தாக்குதலுக்கு நிச்சயம் இந்தியா பதிலடி கொடுக்கும் என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகல் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால், உளவுத்துறை அதிகாரி மணீஷ் ரஞ்சன் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அரசியல் பேசுபவர்கள் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள். பிரதமர் மூன்றாவது முறையாக பதவியேற்றபோது அன்றைக்கே காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. பாகிஸ்தான் இந்தியாவில் அமைதியை கெடுக்க நினைக்கிறது. அச்சுறுத்தலை ஏற்படுத்த நினைக்கிறது. இதனால் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறார்கள்.
இந்த நேரத்தில் நான் இது பேச வேண்டிய தலைப்பு இல்லை. இருந்தாலும் பேசுறேன். மொத்தமாக பார்த்தால் காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இந்த துர்திஷ்டமான நிகழ்வில் இந்தியர்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்கான பதிலடியை கொடுப்பாங்க.
இதில் நம் தலைவர்கள் எல்லோரும் அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள். கணவரை இழந்த சகோதரி சொல்கிறார். அவர் அந்த தீவிரவாதியிடம் என் கணவரை கொன்னுட்ட, என்னையும் என் குழந்தையும் கொன்று விடுங்கள் என முறையிட்டுள்ளார். அதற்கு அந்த தீவிரவாதி மோடியிடம் போய் சொல் என சொன்னதாக கூறுகிறார். அதேபோல் குரான் பற்றி சொல்லவில்லை என்றால் சுடுகிறார்களாம்.
இந்த நேரத்தில் நான் சொல்லவருவது என்னெவென்றால் அங்கு பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வந்தவர்களும் அங்கிருக்கும் இஸ்லாமியர்கள்தான். நமக்குள் இந்து – முஸ்லீம் சமம் தான். நமக்குள் வேற்றுமை இல்லை என்பதை சொன்னாலும் கூட தீவிரவாதிகளின் மனநிலையை சொல்கிறேன். அவன் மதத்தின் அடிப்படையில் தான் தீவிரவாதம் செய்கிறார். அதைத்தான் சொல்கிறேன்.
நிச்சயமாக தீவிரவாதத்தை தீவிரவாதமாகத்தான் பார்க்கிறோம். அரசு இயந்திரங்கள் நிச்சயமாக இதற்கு பதிலடி கொடுக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

