மேலும் அறிய

Rahul Gandhi On BRS: ”நான்கு டயர்களும் பஞ்சரான வண்டி தான் பாஜக” - ராகுல் காந்தியின் பேச்சுக்கு குவியும் எதிர்வினைகள்

பிரதமர் மோடி மற்றும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோரை விமர்சித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, பாஜகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.

பிரதமர் மோடி மற்றும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோரை விமர்சித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக, பாஜகவினர் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். ஒரே தேர்தலில் வென்று விட்டு காங்கிரஸ் அதிகப்படியாக பேசி வருவதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

தெலங்கானா தேர்தல்:

நடப்பாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில், தென்னிந்தியாவை சேர்ந்த தெலங்கானாவும் ஒன்று. சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் ஆட்சி அங்கு நடைபெற்று வருகிறது. பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்த சந்திரசேகர் ராவ் கடந்த சில நாட்களாக அக்கட்சியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதனால், எதிர்வரும் தேர்தல்களில் சந்திரசேகர் ராவ் பாஜக உடன் கூட்டணி அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி பேசியது என்ன?

இந்நிலையில் தான் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் எனும் பகுதியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திசந்திரசேகர ராவ் பாரதிய ஜனதா கட்சியின் 'பி' கட்சியாக செயல்பட்டு வருகிறார். அந்த கட்சியை பாஜக ரெஷ்தேதார் (உறவு) சமிதி என்று அழைக்கலாம். சந்திரசேகர ராவ் மற்றும் அவரது கட்சியில் உள்ளவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டு, அவரை பாஜகவிற்கு அடிபணியச் செய்துள்ளது. சந்திரசேகர ராவ் உடன் ஒருபோதும் கூட்டணி கிடையாது. அவர் இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் காங்கிரஸ் இருக்காது என்பதை எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் வலியுறுத்துகிறேன்.

ரிமோட் கன்ட்ரோல் யாரிடம் உள்ளது?

சந்திரசேகர ராவ் மோடியிடம் உள்ள ரிமோட் கன்ட்ரோலால் இயக்கப்படுகிறார். சந்திரசேகர ராவ் தன்னை மன்னராகவும், தெலுங்கானா அவருடை ராஜ்ஜியம் என்றும் நினைக்கிறார். கர்நாடகாவில் ஊழல், மக்கள் எதிர்ப்பு அரசுக்கு எதிராக போராடி ஏழை மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களால் பாஜகவை தோற்கடித்தோம். அதுதான் தெலுங்கானாவிலும் நடக்கப்போகிறது. ஒரு பக்கம் அரசின் பணக்காரர்களும், அதிகாரம் படைத்தவர்களும் இருப்பார்கள். இன்னொரு பக்கம் ஏழைகள், பழங்குடியினர், சிறுபான்மையினர், விவசாயிகள் மற்றும் சிறு கடைக்காரர்கள் எங்களுடன் இருப்பார்கள். கர்நாடகாவில் என்ன நடந்ததோ அப்படியே தெலுங்கானாவில் நடக்கும். தெலுங்கானாவில் பாஜக இல்லை. அவர்களுடைய நான்கு டயர்களும் பஞ்சராகிவிட்டன. தற்போது காங்கிரஸ் கட்சிக்கும்- பாஜகவின் 'பி' அணிக்கும் இடையில்தான் போட்டிஎன பேசினார். அதோடு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.4000 ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளையும் வெளியிட்டார்.

குவியும் கணடங்கள்:

இதுதொடர்பாக பேசியுள்ள பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி “முந்தைய காலத்தில் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியுடன் சமரசம் செய்து கொண்டு காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டது. ஆனால், பாஜக அவர்களுடன் கூட்டணி அமைக்காது. கர்நாடகாவில் ஒரு தேர்தலில் வெற்றி பெற்றதால் ராகுல் காந்தி எல்லை மீறி பேசுகிறார் ” என தெரிவித்தார். 

பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் மூத்த தலைவரான தசோஜு ஸ்ரவன் “சந்திரசேகர் ராவ் தொடர்பாக ராகுல் காந்தி பேசியது அடிப்படை ஆதாரமற்றது. அவர் கூறியது அனைத்தும் பொய்களின் மூட்டை. தெலங்கானாவில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் தயாரித்த  திரைக்கதையின் அடிப்படையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் தெரித்துள்ளார். இது மிகவும் துரதிருஷ்டவசமானது” என சாடினார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Embed widget