மேலும் அறிய

1 மணி நேரம்.. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள்.. உலக சாதனை படைத்த ராணுவ வீரர்கள்!

இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, எல்லைப் பாதுகாப்புப் படை என பல தரப்பட்ட வீரர்கள் சேர்ந்து உலக சாதனை படைத்துள்ளனர். 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஒரு மணி நேரத்தில் நட்டுள்ளனர்.

ஒரு மணி நேரத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு இந்திய ராணுவ வீரர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர். இதற்காக, மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் பாராட்டு தெரிவித்துள்ளார். சாதனை படைத்து அசத்திய 128 காலாட்படை பட்டாலியன் மற்றும் பிராந்திய ராணுவத்தின் சுற்றுச்சூழல் பணிக்குழுவை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பாராட்டியுள்ளார்.

இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, எல்லைப் பாதுகாப்புப் படை, ஜெய்சால்மர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் எல்லைப் பிரிவு ஊர்க்காவல் படை உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் மத்திய அமைச்சர்  தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

உலக சாதனை படைத்த ராணுவம்:

சமூக ஊடக ‘எக்ஸ்’ தளத்தில் மத்திய அமைச்சர், இதுகுறித்து பதிவிட்டிருப்பதாவது, "ஜெய்சால்மரில் "சிறப்பு மரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் 11 மணி முதல் 12 மணி வரை 5,19,130 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.

128 காலாட்படை பட்டாலியன் (பிராந்திய ராணுவம்) ராஜபுதன ரைபிள்ஸின் சுற்றுச்சூழல் பணிக்குழு பிரதமரின் இயக்கமான "தாயின் பெயரில் ஒரு மரம்", பிராந்திய ராணுவத்தின் மக்கள் தொடர்பு திட்டம் "பங்கேற்பு மற்றும் பொறுப்பு" ஆகியவற்றின் கீழ் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய ராணுவம், இந்திய விமானப்படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் ஜெய்சால்மர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் எல்லை பிரிவு ஊர்க்காவல் படையினர் உட்பட பலர் பங்கேற்றனர்.

இத்தனை ரெக்கார்ட்ஸா?

பிராந்திய ராணுவ பிரிவு, "மரங்களைப் பாதுகாப்பவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்" என்ற குறிக்கோளுடனும், "மரங்களைப் பாதுகாப்போம்" என்ற முழக்கத்துடனும் பல உலக சாதனைகள் படைக்கப்பட்டன. அவை லண்டனின் வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்பட்டன.

 

ஒரு குழுவால் ஒரு மணி நேரத்தில் நடவு செய்யப்பட்ட அதிகபட்ச மரக்கன்றுகள், ஒரே மணி நேரத்தில் அதிக  எண்ணிக்கையிலான பெண்கள் நட்ட அதிகபட்ச மரக்கன்றுகள், ஒரே இடத்தில்  ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகள், அதிக எண்ணிக்கையிலானவர்களால்  நடப்பட்டது ஆகிய சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"6 மணிக்கு விளக்கு ஏத்துங்க.. தோஷம் போயிடும்" பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்!
"கிடைச்ச இடத்துல சாப்பிட்டேன்.. கிடைச்ச இடத்துல தூங்குனேன்" அமெரிக்காவில் பிரதமர் மோடி உருக்கம்!
Breaking News LIVE: “என்னைப் பொறுத்தவரை AI என்றால் American - Indian” -நியூயார்க் நகரில் பிரதமர் மோடி பேச்சு
Breaking News LIVE: “என்னைப் பொறுத்தவரை AI என்றால் American - Indian” -நியூயார்க் நகரில் பிரதமர் மோடி பேச்சு
Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?
Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna on deputy cm : ”உதய் துணை முதல்வரா? திருமா-வ போடுங்க” கொளுத்திப்போட்ட ஆதவ் அர்ஜூனாAtishi CM oath : கெஜ்ரிவாலுக்கு காலி CHAIR! பரதன் பாணியில் அதிஷிRowdy Seizing Raja | PISTOL டீலிங்கில் பில்லா..CEASE செய்வதில் கில்லாடி! யார் இந்த சீசிங் ராஜா!Rowdy Seizing Raja | ஆட்டம் காட்டிய சீசிங் ராஜா! ரவுடியை அடக்கிய அருண் IPS..அடுதடுத்த ENCOUNTER..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"6 மணிக்கு விளக்கு ஏத்துங்க.. தோஷம் போயிடும்" பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்!
"கிடைச்ச இடத்துல சாப்பிட்டேன்.. கிடைச்ச இடத்துல தூங்குனேன்" அமெரிக்காவில் பிரதமர் மோடி உருக்கம்!
Breaking News LIVE: “என்னைப் பொறுத்தவரை AI என்றால் American - Indian” -நியூயார்க் நகரில் பிரதமர் மோடி பேச்சு
Breaking News LIVE: “என்னைப் பொறுத்தவரை AI என்றால் American - Indian” -நியூயார்க் நகரில் பிரதமர் மோடி பேச்சு
Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?
Anura Kumara Dissanayake: இலங்கை அதிபரானார் அனுரா குமார திசநாயகே - அதானிக்கு எதிர்ப்பு, இந்தியா உடனான உறவு எப்படி?
Supreme Court: உச்சநீதிமன்றம் அதிரடி - ”சிறார் ஆபாச படங்கள் அல்ல சிறார் பாலியல் துஷ்பிரயோகம்” போக்சோவில் திருத்தம்
Supreme Court: உச்சநீதிமன்றம் அதிரடி - ”சிறார் ஆபாச படங்கள் அல்ல சிறார் பாலியல் துஷ்பிரயோகம்” போக்சோவில் திருத்தம்
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
Oscar: செம்ம! மகாராஜா முதல் வாழை வரை! ஆஸ்கருக்கு அனுப்பப்படும் 6 தமிழ் படங்கள் இதுதான்!
S P Balasubramaniam : எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர் என தெருவின் பெயரை மாற்ற வேண்டும்..முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் எஸ்.பி.பி மகன் கோரிக்கை
S P Balasubramaniam : எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர் என தெருவின் பெயரை மாற்ற வேண்டும்..முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் எஸ்.பி.பி மகன் கோரிக்கை
RatioN Card KYC: நெருங்கும் டெட்லைன் - ரேஷன் அட்டை முடங்கும் அபாயம், இ-KYC ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
RatioN Card KYC: நெருங்கும் டெட்லைன் - ரேஷன் அட்டை முடங்கும் அபாயம், இ-KYC ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
Embed widget