மேலும் அறிய

Bangladesh India Border: இந்திய - வங்கதேச எல்லை, 4,096 கிமீ தூரத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு, வீரர்களுக்கான விடுமுறை ரத்து

Bangladesh India Border: வங்கதேசத்தில் வன்முறையால் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, அந்நாட்டை ஒட்டிய இந்திய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Bangladesh India Border: சட்டவிரோத ஊடுருவல்களை தவிர்க்கும் நோக்கில்,  இந்திய - வங்கதேச எல்லையில் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய - வங்கதேச எல்லையில் உச்சகட்ட பாதுகாப்பு:

இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக வெடித்த வன்முறையால், வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து அங்கு தற்போது ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இந்த சூழலில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவலாம் என அஞ்சப்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கில், இந்திய - வங்கதேச எல்லையில் 4 ஆயிரத்து 96 கிலோ மீட்டர் தூரத்தை கண்காணிக்கும், எல்லைப் பாதுகாப்புப் படை உள்ள அனைத்து அமைப்புகளுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கூடுதல் படையினரை குவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, எல்லை பாதுகாப்பு படையின் டைரக்டர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி, கூடுதல் டைரக்டர் ஜெனரல் (கிழக்கு கட்டளை) ரவி காந்தி மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (தெற்கு வங்கம்) மணீந்தர் பிரதாப் சிங் ஆகியோர் எல்லைப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பாதுகாப்பு படையினரின் விடுமுறை ரத்து:

எல்லை பாதுகாப்பு படையின் செய்திதொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து களத் தளபதிகளும் தரையில் இருக்குமாறும், அனைத்துப் பணியாளர்களையும் உடனடியாக எல்லைப் பணியில் ஈடுபடுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எல்லை பாதுகாப்பு படையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சரியான ஆவணங்கள் இல்லாமல் யாரையும் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வங்கதேசத்துடன் எல்லையை பகிரும் இந்திய மாநிலங்கள்:

வங்கதேசம் மாநிலத்துடன் மேற்குவங்க மாநிலம் மொத்தமாக 2 ஆயிரத்து 217 கிலோ மீட்டர் தூரத்திற்கு தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அதுபோக, திரிபுரா மாநிலம் 856 கிலோ மீட்டர் தூரத்திற்கும், மேகாலயா 443 கிலோ மீட்டர் தூரத்திற்கும், அசாம் 262 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மற்றும் மிசோரம் 318 கிலோ மீட்டர் தூரத்திற்கும் தங்களது எல்லைகளை, வங்கதேசத்துடன் பகிர்ந்துகொள்கின்றன. இந்த எல்லை பகுதிகள் தற்போது உச்சகட்ட கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கிடையில், மேகாலயா அரசாங்கம் வங்கதேசத்துடன் பகிரும் 445 கிமீ நீளமுள்ள எல்லை பகுதிகளில், மாநில மற்றும் தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சி நடவடிக்கையாக இரவு ஊரடங்கு உத்தரவை  அமல்படுத்தியுள்ளது..

அமித் ஷா உறுதி:

இந்த சூழலில், திரிபுரா எல்லை வழியாக ஊடுருவலை அனுமதிக்கமாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக, திப்ரா மோதா தலைவர் பிரத்யோத் கிஷோர் மாணிக்யா தெப்பர்மா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், "உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் தொலைபேசியில் பேசினேன். இந்தியா எல்லைகள்  சிறந்த வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஒருவரை கூட ஊடுருவ அனுமதிக்கமாட்டோம். சூழ்நிலையை கண்காணித்து வருவதாகவும், எல்லையில் படைகள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்" என்று திப்ரா மோதா தலைவர் தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
மதுரை மேயராகும் அழகிரியின் மகள் கயல்விழி? மிஷன் தென் மண்டலம் - தவெக ஸ்கெட்ச்..
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
Annamalai: அண்ணாமலையும் போயிட்டா அதோகதிதான்! தமிழ்நாட்டில் பாஜக-வின் நிலைமை அவ்ளோதானா?
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
பள்ளி மாணவிகளுக்கு 3 நாள் பீரியட்ஸ் லீவ்: கண்ணியம் காக்குமா? காற்றில் பறக்குமா? தொடர் விவாதம்!
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Annamalai: டெல்லியிலிருந்து அண்ணாமலை போட்ட ட்வீட்..! CM விஜய்க்கு கேள்வி - திமுக மீதும் அட்டாக்
Assembly Secretary Srinivasan : சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.!! இது தான் காரணமா.?
சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.!! இது தான் காரணமா.?
EPS Statement: ஆட்சி நடத்துவது எப்படி.? நீங்க 6 மாத Course முடிப்பதற்குள் மக்கள் மடியனுமா.? விஜய்யை வெளுத்து வாங்கிய இபிஎஸ்
இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே இருக்காதீங்க.! மாய உலகில் இருந்து வெளியே வாங்க விஜய் - இபிஎஸ் அதிரடி
TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
Embed widget