மேலும் அறிய

Bangladesh India Border: இந்திய - வங்கதேச எல்லை, 4,096 கிமீ தூரத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு, வீரர்களுக்கான விடுமுறை ரத்து

Bangladesh India Border: வங்கதேசத்தில் வன்முறையால் ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, அந்நாட்டை ஒட்டிய இந்திய எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Bangladesh India Border: சட்டவிரோத ஊடுருவல்களை தவிர்க்கும் நோக்கில்,  இந்திய - வங்கதேச எல்லையில் பாதுகாப்பு  பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய - வங்கதேச எல்லையில் உச்சகட்ட பாதுகாப்பு:

இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக வெடித்த வன்முறையால், வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து அங்கு தற்போது ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இந்த சூழலில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவலாம் என அஞ்சப்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கில், இந்திய - வங்கதேச எல்லையில் 4 ஆயிரத்து 96 கிலோ மீட்டர் தூரத்தை கண்காணிக்கும், எல்லைப் பாதுகாப்புப் படை உள்ள அனைத்து அமைப்புகளுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கூடுதல் படையினரை குவிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, எல்லை பாதுகாப்பு படையின் டைரக்டர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி, கூடுதல் டைரக்டர் ஜெனரல் (கிழக்கு கட்டளை) ரவி காந்தி மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (தெற்கு வங்கம்) மணீந்தர் பிரதாப் சிங் ஆகியோர் எல்லைப் பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பாதுகாப்பு படையினரின் விடுமுறை ரத்து:

எல்லை பாதுகாப்பு படையின் செய்திதொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து களத் தளபதிகளும் தரையில் இருக்குமாறும், அனைத்துப் பணியாளர்களையும் உடனடியாக எல்லைப் பணியில் ஈடுபடுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எல்லை பாதுகாப்பு படையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சரியான ஆவணங்கள் இல்லாமல் யாரையும் நுழைய அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

வங்கதேசத்துடன் எல்லையை பகிரும் இந்திய மாநிலங்கள்:

வங்கதேசம் மாநிலத்துடன் மேற்குவங்க மாநிலம் மொத்தமாக 2 ஆயிரத்து 217 கிலோ மீட்டர் தூரத்திற்கு தனது எல்லையை பகிர்ந்து கொள்கிறது. அதுபோக, திரிபுரா மாநிலம் 856 கிலோ மீட்டர் தூரத்திற்கும், மேகாலயா 443 கிலோ மீட்டர் தூரத்திற்கும், அசாம் 262 கிலோ மீட்டர் தூரத்திற்கும் மற்றும் மிசோரம் 318 கிலோ மீட்டர் தூரத்திற்கும் தங்களது எல்லைகளை, வங்கதேசத்துடன் பகிர்ந்துகொள்கின்றன. இந்த எல்லை பகுதிகள் தற்போது உச்சகட்ட கண்காணிப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதற்கிடையில், மேகாலயா அரசாங்கம் வங்கதேசத்துடன் பகிரும் 445 கிமீ நீளமுள்ள எல்லை பகுதிகளில், மாநில மற்றும் தேசத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சி நடவடிக்கையாக இரவு ஊரடங்கு உத்தரவை  அமல்படுத்தியுள்ளது..

அமித் ஷா உறுதி:

இந்த சூழலில், திரிபுரா எல்லை வழியாக ஊடுருவலை அனுமதிக்கமாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக, திப்ரா மோதா தலைவர் பிரத்யோத் கிஷோர் மாணிக்யா தெப்பர்மா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், "உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் தொலைபேசியில் பேசினேன். இந்தியா எல்லைகள்  சிறந்த வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஒருவரை கூட ஊடுருவ அனுமதிக்கமாட்டோம். சூழ்நிலையை கண்காணித்து வருவதாகவும், எல்லையில் படைகள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்" என்று திப்ரா மோதா தலைவர் தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget