மேலும் அறிய

குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி.. தன்னை தானே சுட்டு கொண்டதால் பரபரப்பு!

பட்லாபூர் சம்பவத்தின் குற்றவாளியான அக்சய் ஷிண்டே போலீஸ் அதிகாரியின் ரிவால்வரை பறித்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே பட்லாபூரில் பள்ளி குழந்தைகள் இரண்டு பேரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி, தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டுள்ளார். போலீஸ் கஸ்டடியில் இருக்கும்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

குற்றவாளியான அக்சய் ஷிண்டே போலீஸ் அதிகாரியின் ரிவால்வரை பறித்து தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னை தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரியையும் அக்சய் ஷிண்டே  துப்பாக்கியால் சுட்டுள்ளார். இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

பட்லாபூர் கொடூரம்: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தாண்டு கொல்கத்தா மருத்துவர் சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, மும்பை அருகே தானேவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது. நர்சரி பள்ளி ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வந்த நபர், அதே பள்ளியில் படிக்கும் இரண்டு பெண் குழந்தைகளை பள்ளி கழிவறை உள்ளே வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

சம்பவம் நடந்து ஐந்து நாட்களுக்குப் பிறகே தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தை பெற்றோரிடம் குழந்தைகள் தெரிவித்தனர். இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

வீதிகளில் இறங்கிய மக்கள்: கொல்கத்தா சம்பவத்தில் நடந்தது போன்று நீதி கேட்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆயிரக்கணக்கானோர் ரயில் பாதைகளை பல மணி நேரம் மறித்தனர். காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கை தானே முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டது மும்பை உயர் நீதிமன்றம். இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணை செய்த விதத்தை கடுமையாக சாடியது. "சட்டத்தின் விதிகளை பட்லாபூர் போலீசார் பின்பற்றவில்லை.

பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தை காவல் நிலையத்தில் வைத்து பெற காவல்துறை அதிகாரிகள் முயன்றனர். இது, விதிக்கு முற்றிலும் புறம்பானது. பாதிக்கப்பட்ட சிறுமியையும் அவரது பெற்றோரையும் காவல் நிலையத்திற்கு வரவைத்து வாக்குமூலம் பெற செய்ய முயற்சி செய்தது முற்றிலும் சட்டத்திற்கு எதிரானது" என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்த்தி சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) மகாராஷ்டிரா அரசு பின்னர் அமைத்தது. 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget