மேலும் அறிய

Aryan Khan : போதைப்பொருள் வழக்கு.. ஆர்யன்கான் நிரபராதி ஆனது எப்படி? 5 முக்கிய காரணங்கள் இவைதான்!

வழக்கின் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஆர்யன்கான் நிரபராதி என விடுவிக்க முக்கிய காரணம் என்ன? 

போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் நிரபராதி என Narcotics Control Bureau தெரிவித்துள்ளது. வழக்கின் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஆர்யன்கான் நிரபராதி என விடுவிக்க முக்கிய காரணம் என்ன? 

போதைப்பொருள்..

பிரபல பாலிவுட் நடிகர்  ஷாருக் கான் மகன் ஆர்யன் கானும், அவரின் நண்பர்களும் கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். ஆர்யன் கான் ஒரு மாதம் சிறையில் இருந்த பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை Narcotics Control Bureau விசாரித்து வந்தது. இந்நிலையில், ஆர்யன் கானனை  நிரபராதி என்று அவரின் பெயரை சார்ஜ் சீட்டில் இருந்து நீக்கியுள்ளது. தேசிய போதைப்பொருள் தடுப்புப் அமைப்பு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ஆர்யன் கான் குற்றாவாளி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. 


Aryan Khan : போதைப்பொருள் வழக்கு.. ஆர்யன்கான் நிரபராதி ஆனது எப்படி? 5 முக்கிய காரணங்கள் இவைதான்!

விசாரணை..

போதைப்பொருள் வழக்கில் பிரபலத்தின் மகன் என்றதுமே இந்த வழக்கை இந்தியாவே கவனித்தது. தீவிரமாக விசாரணை தொடங்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 6000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 14 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் ஷாருக்கான் மகனின் பெயர் இடம்பெறவில்லை. 

என்ன காரணம்? 

  • சொகுசுக்கப்பலில் சோதனை நடந்தபோது அது வீடியோபதிவாக எடுக்கப்படவில்லை. 
  • போதைப்பொருள் வழக்கில் ஆர்யன்கான் சேர்க்கப்பட்டாலும் சோதனையின் போது அவரிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை என்பதையே தொடக்கம் முதல் ஆர்யன்கான் தரப்பு கூறி வந்தது.
  • போதைப்பொருளை ஆர்யன்கான் எடுத்துக்கொண்டிருந்தாரா என்பதை நிரூபிக்கும் வகையில் அவரிடம் மருத்துவ பரிசோதனை எதுவுமே செய்யப்படவும் இல்லை.


Aryan Khan : போதைப்பொருள் வழக்கு.. ஆர்யன்கான் நிரபராதி ஆனது எப்படி? 5 முக்கிய காரணங்கள் இவைதான்!

  • ஆர்யன்கானின் செல்போன் பறிக்கப்பட்டு வாட்ஸ் அப் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட போதும், அதனை மட்டுமே அடிப்படையாக கொண்ட குற்றச்சாட்டு குறித்து தொடர்ந்து வாதங்கள் முன் வைக்கப்பட்டன. அதனை முழுமையாக ஏற்க arcotics Control Bureau யோசித்தது.
  • ஆர்யன்கானுக்கு எதிராக சாட்சி சொன்னவர்கள். பின்னர் பிறழ் சாட்சியாக மாறினர். சோதனை நடந்தபோது அந்த இடத்தில் இல்லாதவர்களே சாட்சியாக வந்ததாகக் கூறியதால் ஆர்யன்கான் பக்கம் சாதகமாக வழக்கு சென்றது.

மர்மம்தான்..

ஆர்யன்கான் போதைப் பொருளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தவர் என்றும், பயன்படுத்துவது மட்டுமின்றி, அதனை சப்ளை செய்வதும்கூட அவரது வேலையாக இருப்பதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சார்பில் இந்த வழக்கின் தொடக்கத்தில் தெரிவித்தனர்.

பின்னர் விசாரணையின் தொடக்கத்திலேயே முறைகேடுகள் நடப்பதாகவும், ஆர்யன்கானிடம் பேரம் பேசப்படுவதாகவும் தகவல் பரவி பரபரப்பை உண்டாக்கியது.இந்நிலையில் வழக்கு விசாரணை, ஆர்யன்கானுக்கு ஜாமின் என கடந்து தற்போது அவர் நிரபராதி என அறிவிக்கப்பட்டுள்ளார்.

காட்சி ஊடகத்துறையில் 7 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். சோஷியல் மீடியா இன்சார்ஜ், டிக்கர் இன்சார்ஜ், கன்டண்ட் ரைட்டர், கன்டண்ட் இன் சார்ஜ் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் / பணியாற்றி வருபவர். அனைத்து பிரிவு செய்திகளையும் திறம்பட கையாளக் கூடிய நபர். குறிப்பாக சினிமா ரிவியூ, டெக்னாலஜி, ஆட்டோமொபைல் பிரிவுகளை அதிகம் பின்பற்றி எழுதுபவர். தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கதை, கவிதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வருபவர்.
Read More

தலைப்பு செய்திகள்

Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Embed widget