மேலும் அறிய

ராணுவத்தை சுற்றி வளைத்த பெண்கள் அடங்கிய கும்பல்.. சிக்கி கொண்ட அப்பாவி மக்கள்.. நடந்தது என்ன..?

பெண்கள் தலைமையில் 1,200 பேர் அடங்கிய கும்பல் இதம் கிராமத்திற்கு சென்று இந்திய ராணுவத்தை சுற்றிவளைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் தொடரும் கலவரம்:

மணிப்பூரில் தொடர்ந்து வரும் வன்முறை சம்பவங்கள் நாட்டையே உலுக்கி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் திணறி வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், நடந்து முடிந்து அனைத்து கட்சி கூட்டத்தில், மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக தகவல் வெளியானது. மணிப்பூர் பிரச்னை நாளுக்கு நாள் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ராணுவத்தை சுற்றி வளைத்த பெண்கள் அடங்கிய கும்பல்:

இந்த நிலையில், பெண்கள் தலைமையில் 1,200 பேர் அடங்கிய கும்பல் இதம் கிராமத்திற்கு சென்று இந்திய ராணுவத்தை சுற்றிவளைத்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கிட்டத்தட்ட ஒரு நாள் இந்த பிரச்னை நீடித்தது. இறுதியில், பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர பொதுமக்களின் உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் என்று எண்ணி பிரிவினைவாதிகளை விடுவிக்க ராணுவம் முடிவு செய்தது.

இதுகுறித்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "பெண்கள் தலைமையில் வந்த கும்பலுக்கு எதிராக படையை பயன்படுத்துவதன் உணர்திறனைக் கருத்தில் கொண்டு, அத்தகைய நடவடிக்கையால் ஏற்படக்கூடிய ஆபத்தை கருத்தில் கொண்டு, 12 பிரிவினைவாதிகளையும் உள்ளூர் தலைவரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்திய ராணுவத்தின் மனிதாபிமான முகத்தை வெளிப்படுத்தும் முதிர்ச்சியான முடிவை எடுத்ததற்காக பொறுப்பாக செயல்பட்ட தளபதியை ராணுவம் பாராட்டுகிறது" எனக் குறிப்பிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட 12 பிரிவினைவாதிகள், கங்லீ யவோல் கண்ண லுப் என்ற மெய்தி போராளி குழுவை சேர்ந்தவர்கள். இந்த குழுதான், கடந்த 2015ஆம் ஆண்டு 6 டோக்ரா பிரிவின் பதுங்கியிருந்து பல தாக்குதல்களில் ஈடுபட்டது.

வன்முறைக்கு சதிச் செயல் காரணமா?

மணிப்பூர் வன்முறை தொடர்பாக சிபிஐ ஆறு முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது. சதிச் செயல் ஏதேனும் நடந்திருக்கிறதா? என்பதை ஆராய சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் தொடர்ந்து ஒரு மாதமாக நடந்து வரும் கலவரத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தங்கள் சொந்த ஊரிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.

இதுவரை கலவரம் தொடர்பாக மொத்தம், 3,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இம்பால் மேற்கு மாவட்டத்தில் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

சமீபத்தில், குண்டு காயம் அடைந்த 8 வயது பழங்குடியின சிறுமி, அவரது தாய் மற்றும் அவரது உறவினர் ஆகிய 3 பேரும் ஃபாயெங்கில் இருந்து இம்பால் மேற்கு நோக்கி ஆம்புலன்ஸில் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, கும்பல் ஒன்று அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளது. அவர்கள் யார் என்று விசாரித்த அந்த கும்பல் ஆம்புலன்ஸ்க்கு தீ வைத்துள்ளது. இதில் ஆம்புலன்ஸில் இருந்த மூன்று பேரும் உடல்  கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

EPS Vs DMK: “திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
“திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
Tamilnadu Roundup: முதலமைச்சர் சிறப்பு அறிவிப்பு, தீபாவளிக்கு சேலை-இபிஎஸ் வாக்குறுதி, தங்கம் விலை புதிய உச்சம் - 10 மணி செய்திகள்
முதலமைச்சர் சிறப்பு அறிவிப்பு, தீபாவளிக்கு சேலை-இபிஎஸ் வாக்குறுதி, தங்கம் விலை புதிய உச்சம் - 10 மணி செய்திகள்
Gold Rate Peaks: இப்படி உச்சத்துக்கு போனா நாங்க என்ன பண்றது.?! ரூ.75,000-த்தை கடந்த தங்கம் விலை
இப்படி உச்சத்துக்கு போனா நாங்க என்ன பண்றது.?! ரூ.75,000-த்தை கடந்த தங்கம் விலை
America Threatens India: ஆள் வைத்து மிரட்டும் ட்ரம்ப்; “இந்திய பொருளாதாரத்தை அழித்துவிடுவோம்“ அமெரிக்க MP அச்சுறுத்தல்
ஆள் வைத்து மிரட்டும் ட்ரம்ப்; “இந்திய பொருளாதாரத்தை அழித்துவிடுவோம்“ அமெரிக்க MP அச்சுறுத்தல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs DMK: “திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
“திமுக கோட்டை எல்லாம் தூள் தூளாயிடுச்சு, அது இனிமே எங்க கோட்டை“ - டெல்டா குறித்து இபிஎஸ் பேச்சு
Tamilnadu Roundup: முதலமைச்சர் சிறப்பு அறிவிப்பு, தீபாவளிக்கு சேலை-இபிஎஸ் வாக்குறுதி, தங்கம் விலை புதிய உச்சம் - 10 மணி செய்திகள்
முதலமைச்சர் சிறப்பு அறிவிப்பு, தீபாவளிக்கு சேலை-இபிஎஸ் வாக்குறுதி, தங்கம் விலை புதிய உச்சம் - 10 மணி செய்திகள்
Gold Rate Peaks: இப்படி உச்சத்துக்கு போனா நாங்க என்ன பண்றது.?! ரூ.75,000-த்தை கடந்த தங்கம் விலை
இப்படி உச்சத்துக்கு போனா நாங்க என்ன பண்றது.?! ரூ.75,000-த்தை கடந்த தங்கம் விலை
America Threatens India: ஆள் வைத்து மிரட்டும் ட்ரம்ப்; “இந்திய பொருளாதாரத்தை அழித்துவிடுவோம்“ அமெரிக்க MP அச்சுறுத்தல்
ஆள் வைத்து மிரட்டும் ட்ரம்ப்; “இந்திய பொருளாதாரத்தை அழித்துவிடுவோம்“ அமெரிக்க MP அச்சுறுத்தல்
EPS - TVK Vijay: பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!
EPS - TVK Vijay: பாஜக-விற்கு குட்பை? எடப்பாடியுடன் கை கோர்க்கிறாரா விஜய்? காத்திருக்கு சம்பவம்!
ஏர் இந்தியா விமானத்தில் தீ.. டெல்லியில் பரபரப்பு.. பயணிகள் நிலை என்ன?
ஏர் இந்தியா விமானத்தில் தீ.. டெல்லியில் பரபரப்பு.. பயணிகள் நிலை என்ன?
DMK Statement: “எதிரிகளின் பயமே நமது வெற்றி“; ஓரணியில் தமிழ்நாடு - அதிமுகவை விமர்சித்து திமுக ‘நச்‘ அறிக்கை
“எதிரிகளின் பயமே நமது வெற்றி“; ஓரணியில் தமிழ்நாடு - அதிமுகவை விமர்சித்து திமுக ‘நச்‘ அறிக்கை
Aadi Amavasai 2025 Date: ஆடி அமாவாசை எப்போது? தர்ப்பணம் எப்போ கொடுக்கனும்? படையல் எந்த நேரம் போடனும்? முழு விவரம்
Aadi Amavasai 2025 Date: ஆடி அமாவாசை எப்போது? தர்ப்பணம் எப்போ கொடுக்கனும்? படையல் எந்த நேரம் போடனும்? முழு விவரம்
Embed widget