மேலும் அறிய

குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தயாரா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க தயாராக இருக்கிறீர்களா என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க தயாராக இருக்கிறீர்களா என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பாஜக தலைவர் அஸ்வினி குமார் உபாதயா உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் அவர், "அரசு பணிகளில் இருப்பவர்கள் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். வாழ்நாள் முழுவதும் அவர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்கள், தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்படுகிறது. அதன்பிறகு போட்டியிட வழிவகுக் கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு சட்டவிரோதமானது.

எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 8 மற்றும் 9-வது பிரிவுகளை நீக்கி, குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும்.தண்டனை பெற்றவர்கள் புதிய அரசியல் கட்சி தொடங்கவும், கட்சியில் முக்கிய பதவி வகிக்கவும் தடை விதிக்க வேண்டும். அத்துடன், தேர்தலில் போட்டியிட குறைந்தப்பட்ச கல்வி, அதிகப்பட்ச வயது ஆகியவற்றை நிர்ணயிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அந்த மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ஒரு முக்கியமான கேள்வியை மத்திய அரசுக்கு  முன்வைத்தார்.
குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை நிரந்தரமாக தேர்தலில் போட்டியிட தடை விதிக்கத் தயாராக இருக்கிறீர்களா? நீங்கள் இதில் ஒரு முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் முடிவு எடுக்காத வரை, தேர்தல் ஆணையத்தை நாங்கள் கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலி போட்டியிட தடை விதிக்குமாறு கூற முடியாது என்றார்.
அதற்கு, கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல், எஸ்.வி.ராஜூ இவ்விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கேட்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறினார்.

2017ல், தேர்தல் ஆணையம் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட நிரந்தரத் தடை விதித்தது. ஆனால், பின்னர் தேர்தல் ஆணையம் தனது தடை உத்தரவை திரும்பப் பெற்றது. நிரந்தரத் தடையை விரும்பவில்லை அதே வேளையில் அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் இல்லாமல் இருப்பதை ஒரு வரையறை வகுத்து தடுக்க விரும்புவதாக மட்டும் தெரிவித்தது. 

கடந்த 2000 ஆம் ஆண்டு மத்திய அரசு உப்பாதயாவின் மனுவை மத்திய அரசு எதிர்த்தது. அரசு அதிகாரிகள் பணியாளர்களுக்கான நடைமுறை விதிகளுக்கு உட்பட்டவர்கள், ஆனால், எம்.பி. எம்.எல்.ஏ.,க்கள் அப்படி எந்த ஒரு நிபந்தனைகளாலும் கட்டுப்பட்டவர்கள் இல்லை என்று தெரிவித்தது.

தலைப்பு செய்திகள்

முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget