மேலும் அறிய

குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க தயாரா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க தயாராக இருக்கிறீர்களா என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க தயாராக இருக்கிறீர்களா என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பாஜக தலைவர் அஸ்வினி குமார் உபாதயா உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் அவர், "அரசு பணிகளில் இருப்பவர்கள் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். வாழ்நாள் முழுவதும் அவர்கள் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. ஆனால், நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர்கள், தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்படுகிறது. அதன்பிறகு போட்டியிட வழிவகுக் கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு சட்டவிரோதமானது.

எனவே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 8 மற்றும் 9-வது பிரிவுகளை நீக்கி, குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க உத்தரவிட வேண்டும்.தண்டனை பெற்றவர்கள் புதிய அரசியல் கட்சி தொடங்கவும், கட்சியில் முக்கிய பதவி வகிக்கவும் தடை விதிக்க வேண்டும். அத்துடன், தேர்தலில் போட்டியிட குறைந்தப்பட்ச கல்வி, அதிகப்பட்ச வயது ஆகியவற்றை நிர்ணயிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

அந்த மனு இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ஒரு முக்கியமான கேள்வியை மத்திய அரசுக்கு  முன்வைத்தார்.
குற்ற வழக்குகளில் சிக்கி தண்டனை பெற்றவர்களை நிரந்தரமாக தேர்தலில் போட்டியிட தடை விதிக்கத் தயாராக இருக்கிறீர்களா? நீங்கள் இதில் ஒரு முடிவு எடுக்க வேண்டும். நீங்கள் முடிவு எடுக்காத வரை, தேர்தல் ஆணையத்தை நாங்கள் கிரிமினல் குற்றவாளிகள் தேர்தலி போட்டியிட தடை விதிக்குமாறு கூற முடியாது என்றார்.
அதற்கு, கூடுதல் சாலிசிட்டர் ஜெனரல், எஸ்.வி.ராஜூ இவ்விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கேட்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறினார்.

2017ல், தேர்தல் ஆணையம் தண்டனை பெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட நிரந்தரத் தடை விதித்தது. ஆனால், பின்னர் தேர்தல் ஆணையம் தனது தடை உத்தரவை திரும்பப் பெற்றது. நிரந்தரத் தடையை விரும்பவில்லை அதே வேளையில் அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் இல்லாமல் இருப்பதை ஒரு வரையறை வகுத்து தடுக்க விரும்புவதாக மட்டும் தெரிவித்தது. 

கடந்த 2000 ஆம் ஆண்டு மத்திய அரசு உப்பாதயாவின் மனுவை மத்திய அரசு எதிர்த்தது. அரசு அதிகாரிகள் பணியாளர்களுக்கான நடைமுறை விதிகளுக்கு உட்பட்டவர்கள், ஆனால், எம்.பி. எம்.எல்.ஏ.,க்கள் அப்படி எந்த ஒரு நிபந்தனைகளாலும் கட்டுப்பட்டவர்கள் இல்லை என்று தெரிவித்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget