கும்பமேளாவில் மீண்டும் பயங்கர தீ விபத்து. நாசமான முகாம்கள்! யாருக்கு என்னாச்சு? -வீடியோ
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா கும்பமேளாவில் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டது.

பாண்டூன் பாலம் அருகே மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஹரிஹரானந்த் முகாம் எரிந்து நாசமானது. இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா கும்பமேளாவில் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. இந்த முறை செக்டார் 18 இல் உள்ள பாண்டூன் பாலம் அருகே தீ விபத்து ஏற்பட்டது. சங்கராச்சாரியார் மார்க்கில் உள்ள ஹரிஹரானந்த் முகாமில் உள்ள பல கூடாரங்கள் எரிந்து நாசமாயின.
தீயை அணைக்க பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தீ விபத்தில் பல கூடாரங்கள் பாதிக்கப்பட்டிருப்பதை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. பீதி ஏற்பட்டதால் பக்தர்கள் தங்கள் பாதுகாப்புக்காக ஓடுவதையும் காண முடிந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Prayagraj | The Fire that broke out in Sector 18, Shankaracharya Marg of Maha Kumbh Mela Kshetra has been brought under control
— ANI (@ANI) February 7, 2025
There has been no loss of lives. The reason behind the fire is under investigation..." says SP city Sarvesh Kumar Mishra pic.twitter.com/SBshdMCkrT
இதுகுறித்து நகர எஸ்பி சர்வேஷ் குமார் மிஸ்ரா கூறுகையில், "தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.
கடந்த வாரம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 15 கூடாரங்கள் எரிந்து சாம்பலானதைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சட்நாக் காட் காவல் நிலையப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீயும் விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
விசாரணையின் போது இந்த கூடாரங்கள் அங்கீகரிக்கப்படாதவை என்பது பின்னர் தெரியவந்தது என்று உ.பி. தீயணைப்புத் துறை அதிகாரி பிரமோத் சர்மா தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளாவில் ஏற்பட்ட தீ விபத்துகளில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட வெடிப்பும் அடங்கும்.
முன்னதாக, ஜனவரி 29 அன்று மௌனி அமாவாசையை முன்னிட்டு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், 60 பேர் காயமடைந்தனர்.
மகா கும்பமேளா பிப்ரவரி 26 வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 12 (மாகி பூர்ணிமா) மற்றும் பிப்ரவரி 26 (மகா சிவராத்திரி) ஆகிய தேதிகளில் விசேஷ நாட்கள் மீதமுள்ளன. இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.
ஏற்கெனவே கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததற்கு அரசின் பாதுகாப்பு நடவடிக்கையில் இருந்த கவனக்குறைவே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அதுமட்டுமல்லாமல் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழதவர்களின் உண்மையான எண்ணிக்கையை அரசு மறைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால் பாஜக தரப்போ சின்ன விஷயத்தை ஊதி எதிர்க்கட்சிகள் பெரிதாக்குகிறார்கள் என விளக்கம் அளித்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

