மேலும் அறிய

கொளுத்தும் வெயில்; நாற்காலி உதவியோடு வெறுங்காலில் நடந்த மூதாட்டி: காரணமும் கண்கலங்க வைக்கும் சம்பவமும்!

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், உடைந்த நாற்காலியின் சப்போர்ட்டில், அதனை தூக்கி தூக்கி முன்னால் வைத்து, கடுமையான வெப்பத்தில் வெறுங்காலுடன் நடந்து செல்வதை காண முடிகிறது.

ஒடிசாவில் 70 வயது மூதாட்டி ஒருவர் வங்கியில் இருந்து ஓய்வூதியம் பெறுவதற்காக வெறுங்காலுடன், ஒரு நாற்காலியை தாங்கி தாங்கி நடந்து பல கிலோமீட்டர்கள் செல்வதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகி காண்போரை கண்கலங்கச் செய்துள்ளது.

வெறுங்காலுடன் நடந்து செல்லும் மூதாட்டி

சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், உடைந்த நாற்காலியின் சப்போர்ட்டில், அதனை தூக்கி தூக்கி முன்னால் வைத்து, கடுமையான வெப்பத்தில் வெறுங்காலுடன் நடந்து செல்வதை காண முடிகிறது. இச்சம்பவம் ஒடிசாவின் நப்ராங்பூர் மாவட்டத்தில் உள்ள ஜாரிகான் பகுதியில் ஏப்ரல் 17 அன்று நடந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. வீடியோவில் காணப்படும் மூதாட்டி, மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சூர்யா ஹரிஜன் என்ற வயதானவர் என்பது தெரியவந்துள்ளது. இவரது மூத்த மகன் வேறு மாநிலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது அந்த மூதாட்டி தனது இளைய மகனின் குடும்பத்துடன் தங்கியுள்ளார்.

கொளுத்தும் வெயில்; நாற்காலி உதவியோடு வெறுங்காலில் நடந்த மூதாட்டி: காரணமும் கண்கலங்க வைக்கும் சம்பவமும்!

ஏழ்மையான குடும்பம்

ஓய்வூதியத்தை வாங்குவதற்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற அவர் தற்போது கால்நடைகளை மேய்த்து தனது வாழ்க்கையை நடத்துவதாக கூறப்படுகிறது. அவரது குடும்பம் உழுது விவசாயம் செய்ய நிலம் இல்லாத நிலையில், குடிசையில் வசித்து வருகின்றது. இதனால் அவரை வங்கி வரை அழைத்து சென்று பணத்தை வாங்கி வர வீட்டில் ஆள் இல்லாததாலும், வாகனங்கள் இல்லாததாலும் இந்த நிலை என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்: Vegetable Price: மாங்காய் சீசன் ஸ்டார்ட் ஆயிடுச்சு மக்களே.. கிலோ ரூபாய் 15 மட்டுமே.. மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் இதோ..

கட்டைவிரல் பதிவுகளுடன் பொருந்தவில்லை

அதுமட்டுமின்றி இவ்வளவு தூரம் அதனை வாங்க சிரமப்பட்டு சென்றவர் வெறுங்கையோடு திரும்பி வந்ததுதான் சோகத்தின் உச்சகட்டம். அந்த மூதாட்டியின் ஓய்வூதியப் பணத்தைப் பெற வங்கிக்குச் சென்றபோது, அவரது கட்டைவிரல் பதிவுகளுடன் பொருந்தவில்லை என்று கூறி திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் அவர் பணத்தை பெறாமலேயே அதே போல சிரமப்பட்டு திரும்ப வீட்டிற்குத் வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ரூ.3,000 கொடுத்த வங்கி

இந்த சம்பவத்திற்கு பதிலளித்த பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மேலாளர், மூதாட்டியின் "விரல்கள் உடைந்ததால்" பணத்தை எடுப்பதில் சிக்கலை எதிர்கொள்வதாகவும், சிக்கலை தீர்க்க வங்கி செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். "அவருடைய விரல்கள் உடைந்துள்ளன, அதனால் அவர் அவரது பணத்தை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சூழ்நிலை தெரிந்தபின், அவருக்கு வங்கியில் இருந்து ரூ. 3,000 கொடுக்கப்பட்டுள்ளது. அக்கவுன்டில் உள்ள சிக்கலை விரைவில் தீர்ப்போம்" என்று எஸ்பிஐ வங்கி, ஜாரிகான் கிளையின் மேலாளர் கூறினார். கிராமத்தில் உள்ள ஆதரவற்றவர்களை பட்டியலிட்டு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஆலோசித்ததாக அவரது கிராம தலைவர் கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
TN Agri Budget 2025: யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Vs Sengottaiyan: “அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
“அவர போய் கேளுங்க சார்“.. கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையன் பதில் என்ன தெரியுமா.?
TN Agri Budget 2025: யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
யப்பா.. வேளாண் துறைக்கு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு... வேளாண் பட்ஜெட் முழு விவரங்கள் இதோ...
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகள் கொண்டாட்டம் ..! ரூ.1,477 கோடி கடன் தள்ளுபடி - தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவிப்பு
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
TN Agri Budget 2025: விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்: ரூ.6 லட்சம் மானியம், 1000 முதலமைச்சர் உழவர் நல சேவை மையங்கள்
TN Agri Budget 2025: கரும்பு விவசாயிகளுக்கு தித்திப்பான சேதி..! ஊக்கத்தொகை அறிவித்த தமிழ்நாடு அரசு
TN Agri Budget 2025: கரும்பு விவசாயிகளுக்கு தித்திப்பான சேதி..! ஊக்கத்தொகை அறிவித்த தமிழ்நாடு அரசு
Pawan Kalyan: “தமிழக அரசியல்வாதிகள் பாசாங்குத்தனமானவர்கள்“.. விளாசிய பவன் கல்யாண்.. எதற்கு தெரியுமா.?
“தமிழக அரசியல்வாதிகள் பாசாங்குத்தனமானவர்கள்“.. விளாசிய பவன் கல்யாண்.. எதற்கு தெரியுமா.?
TN Global City: 2000 ஏக்கர் புதிய நகரம்..! எங்கே அமைகிறது? எகிறும் நிலங்களின் விலை, பரந்தூருக்கு ஜாக்பாட்? உட்கட்டமைப்பு விவரங்கள்
TN Global City: 2000 ஏக்கர் புதிய நகரம்..! எங்கே அமைகிறது? எகிறும் நிலங்களின் விலை, பரந்தூருக்கு ஜாக்பாட்? உட்கட்டமைப்பு விவரங்கள்
IPL 2025 CSK: சிஎஸ்கே மேட்ச்சை பாக்க பஸ்ல ஃப்ரீயா போகனுமா? இது மட்டும் இருந்தாலே போதும்!
IPL 2025 CSK: சிஎஸ்கே மேட்ச்சை பாக்க பஸ்ல ஃப்ரீயா போகனுமா? இது மட்டும் இருந்தாலே போதும்!
Embed widget