மேலும் அறிய

Childrens Missing: சட்டவிரோதமான காப்பகம்! மாயமான 26 சிறுமிகள் - மீட்கப்பட்டார்களா? மத்திய பிரதேசத்தில் பகீர்!

மத்திய பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட காப்பகத்தில் இருந்து 26 குழந்தைகள் காணாமல் போனது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Madhya Pradesh: மத்திய பிரதேசத்தில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட காப்பகத்தில் இருந்து 26 குழந்தைகள் காணாமல் போனது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காணாமல் போன 26 சிறுமிகள்:

மத்திய பிரதேச மாநிலம் போபால் என்ற பகுதியில் சட்டவிரோதமாக குழந்கைள் காப்பகம் நடத்தப்படுவதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு (NCPCR) தகவல் கிடைத்துள்ளது.  குழந்தைகள் காணாமல் போனதாக தகவல் வந்ததை அடுத்து, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங் கனுங்கோ, பர்வாலியா பகுதியில் உள்ள காப்பகத்துக்கு சென்று சோதனையிட்டார்.

அந்த சோதனையில், சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தப்பட்டதாகவும், அங்கிருந்து 8 முதல் 18 வயதுக்குள் இருக்கும் 26 குந்தைகள் காணாமல்  போனதும் தெரியவந்தது.  மேலும், 68 சிறுமிகள் அங்கு இருந்ததாகவும், அதில் 28 சிறுமிகள் காணாமல் போயிருந்ததும் தெரியவந்துள்ளது.

காணாமல் போன சிறுமிகள் ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், சட்டவிரோதமாக நடத்தப்பட்ட காப்பகத்தில் இருக்கும் சிறுமிகளுக்கு  கிறிஸ்தவ மதத்தை கடைபிடிக்க வைத்துள்ளதாக தெரிகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். 

மீட்கப்பட்ட 26 சிறுமிகள்:

வழக்குப்பதிவு செய்யப்பட்டதையடுத்து, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் 2 பேர் சனிக்கிழமை பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததாக கூறி, பிரிஜேந்திர பிரதாப் சிங் மற்றும் கோமல் உபாத்யாய் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அதிகாரி சுனில் சோலங்கி மற்றும் அத்துறையின் உதவி இயக்குநர் ராம்கோபால் யாதவ் ஆகியோருக்கும் காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

இதுகுறித்து NCPCR தலைவர் கூறுகையில், "மத்தியப் பிரதேசத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் குழந்தைகள் காப்பகத்தை இயக்க அனுமதித்துள்ளனர்.

குழந்தைகள் காப்பகத்தில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் இல்லை. இரண்டு பெண் பாதுகாவல்களும், இரவில் இரு ஆண் காவலர்கள் தங்கி இருக்கின்றனர். காணாமல் போன அனைத்து சிறுமிகளும் குழந்தைகள் நலக் குழுவின் உத்தரவு இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.

காணாமல் போன 26 சிறுமிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அடம்பூர் சாவ்னி பகுதியில் 10 சிறுமிகளும், சேரிகளில் 13 பேரும், டாப் நகரில் இரண்டு பேரும், ரைசனில் ஒரு சிறுமியும் மீட்கப்பட்டனர்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விக்ரம்சிங் கூறுகையில், "சட்டவிரோதமாக குழந்தைகள் காப்பகம் நடத்தப்பட்டிருக்கிறது. அங்கிருந்த 41 சிறுமிகள் அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். அனைத்து சிறுமிகளும் பத்திரமாக உள்ளனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.


மேலும் படிக்க

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
கிளம்பிய சிறிது நேரம் தான்.. நடுவானில் கோளாரான விமானம்.. அப்புறம் நடந்தது என்ன?
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; தவறு செய்தது கேட்கீப்பரா? வேன் ஓட்டுனரா? உயிர் பிழைத்த மாணவன் பேட்டி
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
இதனால்தான் மேடையில் உளறுகிறேன்...சர்ச்சை பேச்சுகள் குறித்து விஜய் தேவரகொண்டா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
IPL Valuation: சிஎஸ்கே-விற்கா இந்த நிலைமை? கன்னாபின்னாவென எகிறிய ஐபிஎல் மதிப்பு, கொட்டிக் கொடுக்கும் டாடா
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
Cuddalore Train Accident: கடலூர் கோர விபத்து; ரயில் வரும்போது பள்ளி வேனை ஓட்டியது ஏன்? ஓட்டுனர் சங்கர் பரபரப்பு பேட்டி
Embed widget