மேலும் அறிய

24 எம்பிக்கள் இடைநீக்கம்... எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறதா? நாடாளுமன்றத்தில் நடப்பது என்ன?

அமளியில் ஈடுபட்டதாகக் கூறி நாடாளுமன்றத்தில் இதுவரை 24 எம்பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்கும் இணைந்துள்ளார்.

அமளியில் ஈடுபட்டதாகக் கூறி நாடாளுமன்றத்தில் இதுவரை 24 எம்பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்கும் இணைந்துள்ளார். மாநிலங்களவை தலைவர் மீது காகிதத்தை வீசியதாக இந்த வாரம் முழுவதும் அவர் நாடாளுமன்ற செயல்பாடுகளில் கலந்து கொள்வதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினர்கள் 20 பேர் உள்பட 24 பேர் இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 3:42 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, ​​சஞ்சய் சிங்கும் இன்னும் சில உறுப்பினர்களும் குஜராத்தின் பொடாட் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 28 பேர் உயிரிழந்திருப்பது குறித்த பிரச்சினையை எழுப்பக் கோரி முழக்கங்களை எழுப்பினர். மாநிலங்களவை தலைவர் அவரைத் அவரது இடத்திற்கு செல்ல சொன்ன போது, ​​அவர் காகிதங்களைக் கிழித்து நாற்காலியின் மீது வீசியதாக மாநிலங்களவை தலைவர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து பேசியுள்ள சஞ்சய் சிங், "குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்ததற்கு பதில் கிடைக்கும் வரை கேள்வி எழுப்புவேன். நாடாளுமன்றத்தில்தான் தொடர்ந்து இருக்கிறேன்" என்றார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், "மோடி  என்னை சஸ்பெண்ட் செய்திருக்கலாம். ஆனால் குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்ததற்கு பதில் கேட்டு தொடர்ந்து போராடுவேன்" என பதிவிட்டுள்ளார்.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைத் தவிர திரிணாமூல் காங்கிரஸின் 7 பேர், திமுகவைச் சேர்ந்த 6 பேர் உள்பட எதிர்க்கட்சிகளின் 19 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சங்சய் சிங்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று, மாநிலங்களவையில் இடையூறு செய்ததாகக் கூறி 19 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வாரம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து பேசி ​​​​பாஜகவின் பியூஷ் கோயல், இந்த முடிவு கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டதாகக்” கூறினார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குணமடைந்து நாடாளுமன்றத்திற்கு திரும்பியதும் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்திற்கு அரசு தயாராக உள்ளது என மாநிலங்களவை பாஜக குழு தலைவர் கோயல் தெரிவித்தார்.
இந்த வார தொடக்கத்தில், சபாநாயகர் ஓம் பிர்லாவின் எச்சரிக்கையையும் மீறி, அவைக்குள் பதாகைகளை ஏந்தியதாக நான்கு காங்கிரஸ் எம்பிக்கள், ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் முடிவடையும் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விலைவாசி உயர்வு, சரக்கு மற்றும் சேவை வரி உயர்வு போன்ற பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என கடந்த பல நாட்களாக கோரி வருகின்றனர். ஜூலை 18ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இரு அவைகளிலும் அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
Impact Makers Conclave LIVE: தமிழர் பார்வையில் தடம் பதிக்கும் தமிழ்நாடு, வளர்ச்சிக்கான ஆலோசனைகளை விவாதிக்கும்  இம்பேக்ட் மேக்கர்ஸ் மாநாடு
Impact Makers Conclave LIVE: தமிழர் பார்வையில் தடம் பதிக்கும் தமிழ்நாடு, வளர்ச்சிக்கான ஆலோசனைகளை விவாதிக்கும் இம்பேக்ட் மேக்கர்ஸ் மாநாடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
Anbumani Ramadoss PMK: தனிமரமாகும் ராமதாஸ்? பாஜக ஆசி, பாமகவை கைப்பற்றும் அன்புமணி? வடநாட்டு ஃபார்முலா
தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
GT Vs MI: நாக்-அவுட் யாருக்கு? குஜராத்தை பழிதீர்க்குமா மும்பை? மழைக்கு வாய்ப்பா? பஞ்சாப் எதிர்கொள்வது யாரை?
Impact Makers Conclave LIVE: தமிழர் பார்வையில் தடம் பதிக்கும் தமிழ்நாடு, வளர்ச்சிக்கான ஆலோசனைகளை விவாதிக்கும்  இம்பேக்ட் மேக்கர்ஸ் மாநாடு
Impact Makers Conclave LIVE: தமிழர் பார்வையில் தடம் பதிக்கும் தமிழ்நாடு, வளர்ச்சிக்கான ஆலோசனைகளை விவாதிக்கும் இம்பேக்ட் மேக்கர்ஸ் மாநாடு
UN Job Cuts: இதென்னடா ஐ.நாவிற்கு வந்த சோதனை - கம்பி நீட்டிய ட்ரம்ப், 7000 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு
UN Job Cuts: இதென்னடா ஐ.நாவிற்கு வந்த சோதனை - கம்பி நீட்டிய ட்ரம்ப், 7000 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு
Viral Video: ”தண்ணீர் பாட்டில் தூக்குற பையன் தானே!” இளம் வீரரை அவமதித்த கோலி? பொங்கிய நெட்டிசன்ஸ்
Viral Video: ”தண்ணீர் பாட்டில் தூக்குற பையன் தானே!” இளம் வீரரை அவமதித்த கோலி? பொங்கிய நெட்டிசன்ஸ்
Trump Vs Putin: “உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு
EPS Vs Premalatha: எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்
Embed widget