மேலும் அறிய

24 எம்பிக்கள் இடைநீக்கம்... எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறதா? நாடாளுமன்றத்தில் நடப்பது என்ன?

அமளியில் ஈடுபட்டதாகக் கூறி நாடாளுமன்றத்தில் இதுவரை 24 எம்பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்கும் இணைந்துள்ளார்.

அமளியில் ஈடுபட்டதாகக் கூறி நாடாளுமன்றத்தில் இதுவரை 24 எம்பிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில் தற்போது ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங்கும் இணைந்துள்ளார். மாநிலங்களவை தலைவர் மீது காகிதத்தை வீசியதாக இந்த வாரம் முழுவதும் அவர் நாடாளுமன்ற செயல்பாடுகளில் கலந்து கொள்வதிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை உறுப்பினர்கள் 20 பேர் உள்பட 24 பேர் இதுவரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் 3:42 மணிக்கு அவை மீண்டும் கூடியபோது, ​​சஞ்சய் சிங்கும் இன்னும் சில உறுப்பினர்களும் குஜராத்தின் பொடாட் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 28 பேர் உயிரிழந்திருப்பது குறித்த பிரச்சினையை எழுப்பக் கோரி முழக்கங்களை எழுப்பினர். மாநிலங்களவை தலைவர் அவரைத் அவரது இடத்திற்கு செல்ல சொன்ன போது, ​​அவர் காகிதங்களைக் கிழித்து நாற்காலியின் மீது வீசியதாக மாநிலங்களவை தலைவர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து பேசியுள்ள சஞ்சய் சிங், "குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்ததற்கு பதில் கிடைக்கும் வரை கேள்வி எழுப்புவேன். நாடாளுமன்றத்தில்தான் தொடர்ந்து இருக்கிறேன்" என்றார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், "மோடி  என்னை சஸ்பெண்ட் செய்திருக்கலாம். ஆனால் குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்ததற்கு பதில் கேட்டு தொடர்ந்து போராடுவேன்" என பதிவிட்டுள்ளார்.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைத் தவிர திரிணாமூல் காங்கிரஸின் 7 பேர், திமுகவைச் சேர்ந்த 6 பேர் உள்பட எதிர்க்கட்சிகளின் 19 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது சங்சய் சிங்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று, மாநிலங்களவையில் இடையூறு செய்ததாகக் கூறி 19 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து வாரம் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து பேசி ​​​​பாஜகவின் பியூஷ் கோயல், இந்த முடிவு கனத்த இதயத்துடன் எடுக்கப்பட்டதாகக்” கூறினார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குணமடைந்து நாடாளுமன்றத்திற்கு திரும்பியதும் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்திற்கு அரசு தயாராக உள்ளது என மாநிலங்களவை பாஜக குழு தலைவர் கோயல் தெரிவித்தார்.
இந்த வார தொடக்கத்தில், சபாநாயகர் ஓம் பிர்லாவின் எச்சரிக்கையையும் மீறி, அவைக்குள் பதாகைகளை ஏந்தியதாக நான்கு காங்கிரஸ் எம்பிக்கள், ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் முடிவடையும் மழைக்கால கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விலைவாசி உயர்வு, சரக்கு மற்றும் சேவை வரி உயர்வு போன்ற பிரச்னைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என கடந்த பல நாட்களாக கோரி வருகின்றனர். ஜூலை 18ஆம் தேதி மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இரு அவைகளிலும் அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Free Health Insurance: அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
அடி தூள்.! இலவசமாக ரூ.25 லட்சத்திற்கு மருத்துவ காப்பீடு- விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
பறக்கும் ரயில் மெட்ரோ ரயிலாக மாறுது.! பீச், வேளச்சேரி, பரங்கிமலையில் புதிய திட்டம்- என்ன தெரியுமா.?
Embed widget