மேலும் அறிய

MP Dog Bite: அதிகரிக்கும் நாய் கடி சம்பவங்கள்.. தெரு நாய்கள் கடித்ததில் 2 வயது சிறுவன் உயிரிழப்பு..

மத்திய பிரதேசத்தில் தெரு நாய்கள் கடித்து 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் பத்வானியில் தெருநாய்கள் தாக்கியதில் 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சமீப காலமாக தெரு நாய் மக்களை கடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகளை தெரு நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஒரு சில குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கவும் நேரிடுகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் தெரு நாய் கடித்து 2 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பத்வானி பகுதியில் வசித்து வரும் சிறுவன் வீட்டிற்கு அருகே ஆட்டிறைச்சி சந்தை உள்ளது. இதனால் அப்பகுதியில் நாய் தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் சம்வத்தன்று சிறுவன் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளான். அப்போது தெரு நாய் சுற்றி வளைத்துள்ளது. பின் தெரு நாய்கள் சேர்ந்து அந்த சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளது. சத்தம் கேட்ட சிறுவனின் பாட்டி உடனடியாக ஒரு கொம்பை எடுத்து நாய்களை விரட்டி சிறுவனை மீட்டுள்ளார். ஆனால் அதற்குள் அந்த சிறுவன் கடுமையாக தாக்கப்பட்டான்.

இந்த சம்பவத்தை அடுத்து அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து முனிசிபல் கார்ப்பரேஷன் சி.இ.ஓ. குஷால் சிங் துத்வே கூறும்போது, "நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் தெருநாய்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவற்றைப் பிடிப்பது சற்று கடினம். நாய்களை பிடிக்கும் போது, நாய் பிரியர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இருப்பினும் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க எங்கள் தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் தெருநாய்களின் தாக்குதல்கள் மற்றும் அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி 23-ம் தேதி மட்டும் குவாலியர் பகுதியில் தெருநாய்கள் ஒன்றிணைந்து 547 பேரை கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதேபோன்று சமீபத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பல பகுதியில் தெரு நாய்கள் அதிகரித்துள்ள நிலையில், ஆம்பூர் வாத்திமனை குப்பா மசூதி பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவனை அங்கு சாலையில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று மாணவனை கடித்த நிலையில், உடனடியாக மாணவனை மீட்ட அப்பகுதி மக்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி அளித்தனர். இப்படியான சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7121
Active
8573
Recovered
74
Deaths
Last Updated: Wed 11 June, 2025 at 11:36 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy”என்ன தான் இருந்தாலும் நண்பன்”மஸ்க் குறித்து ட்ரம்ப் உருக்கம் முடிவுக்கு வரும் மோதல்? Donald Trump vs Elon Muskவிஜய் பற்றவைத்த நெருப்பு! குடைச்சல் கொடுக்கும் கூட்டணியினர்! தலைவலியில் திமுக, அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
திமுக கூட்டணி கட்சிகள் இணையுமா? ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
TANCET Counselling: எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்; எப்படி? கடைசி தேதி, கலந்தாய்வு.. முழு விவரம்!
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
தீரப்போகும் டிராபிக் தலைவலி! 5000 கோடி மதிப்பீடு... 20 கி.மீ வரப்போகும் பாலம்... எங்கு தெரியுமா?
AK64 : மீண்டும் இணையும் குட் பேட் அக்லி கூட்டணி...சிரிக்கவா அழவா என்று குழப்பத்தில் ரசிகர்கள்...
AK64 : மீண்டும் இணையும் குட் பேட் அக்லி கூட்டணி...சிரிக்கவா அழவா என்று குழப்பத்தில் ரசிகர்கள்...
Suriya 46 : தொடங்கியது சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு...போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Suriya 46 : தொடங்கியது சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு...போஸ்டர் வெளியிட்ட படக்குழு
Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை
Crime: காமத்தால் குவியும் பிணங்கள், திருமணங்களை சிதைக்கும் அஃபயர் - துண்டுகளாகும் உடல்கள், தற்கொலை
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
UP Govt: ”செத்து நாலு மாசம் ஆச்சு, கண்டு கொள்ளாத யோகி” 82 பேர் பலி, 37 என பொய் சொல்லும் உ.பி., அரசு?
Embed widget