மேலும் அறிய

ஒரே நாளில் 50 டாக்டர்கள் உயிரிழப்பு; 26 வயது இளம் மருத்துவரும் தப்பவில்லை!

இந்தியாவில் நேற்று டெல்லியை சேர்ந்த 26 வயதான மருத்துவர், கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழந்துள்ளார். இதுவரை உயிரிழந்த மருத்துவர்களில் மிகவும் குறைந்த வயதில் உயிரிழந்த மருத்துவர் இந்த அனஸ் முஜாஹித் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 50 மருத்துவர்கள் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவலை இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 50 மருத்துவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பேராபத்தினை ஏற்படுத்திவருகிறது. மக்கள் உயிரை எல்லாம் தொற்று ஆள்கொண்டுவரும் நிலையில் இந்த இக்கட்டான மருத்துவ தேவைகளை  சமாளிக்க முடியாமல் சுகாதாரத்துறை அதிகாரிகள் திணறிவருகின்றனர். இதுவரை நாடு முழுவதும் தினமும் 2 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிப்படைந்து வரும் நிலையில் இதுவரை மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2 கோடியை தாண்டிவிட்டது.

 


ஒரே நாளில் 50 டாக்டர்கள் உயிரிழப்பு; 26 வயது இளம் மருத்துவரும் தப்பவில்லை!

இந்த வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள், செவிலியர்கள் தினமும் போராடிவருகின்றனர். மக்களின் சேவகர்களாக விளங்கி வரும் இவர்களையும் தற்போது கொரோனா என்ற ஆட்கொல்லி நோய் வாட்டி வதைக்கிறது என்றே சொல்லலாம். பிபிகிட் போன்ற கொரோனா கவசங்களை அணிந்து மருத்துவ உதவிகளை செய்தாலும், அவர்களால் இந்த வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க முடியவில்லை . ஆம் இந்தியாவில் நேற்று டெல்லியை சேர்ந்த 26 வயதான மருத்துவர், கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழந்துள்ளார். இதுவரை உயிரிழந்த மருத்துவர்களில் மிகவும் குறைந்த வயதில் உயிரிழந்த மருத்துவர் இந்த அனஸ் முஜாஹித் என்பது குறிப்பிடத்தக்கது. இதோடு இந்தியா முழுவதும் நேற்று ஒரே நாளில் 50 மருத்துவர்கள் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவலை இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் முதல் வாரம் வரை இதுவரை 244 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


ஒரே நாளில் 50 டாக்டர்கள் உயிரிழப்பு; 26 வயது இளம் மருத்துவரும் தப்பவில்லை!

தற்போது கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த  தடுப்பூசி ஒன்றே தீர்வாக கூறப்படும் நிலையில், இந்தியா முழுவதும் முதற்கட்டமாக  முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. கடந்த ஐந்து மாதங்களில் இந்தியாவில் 66 சதவீதம் மட்டுமே சுகாதாரப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அறிக்கைகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இதுவரை இந்த மருத்துவர்களில் 3 சதவீதம் பேருக்கு மட்டுமே முழு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில் தான், கொரோனா நோயாளிகளுக்கு முழு ஈடுபாடோடு மருத்துவர்கள் பணிபுரிந்துவருகின்றனர். ஆனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க குறைவான அளவிலேயே மருத்துவர்கள் இருப்பதால், ஓய்வின்றி தொடர்ந்து 48 மணி நேரம் வேலை பார்க்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இக்கட்டான சூழலில் மருத்துவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை இந்திய மருத்துவ சங்கத்தினர் முன்வைக்கின்றனர். கொரோனா பேரிடர் காலத்தில் முன்களப்பணியாளர்களாக பணிபுரிந்து வரும் மருத்துவர்களின் உயிரிழப்பு பேரதிர்ச்சியாக உள்ளது.

கொரோனா முதல் அலையில்  736 மருத்துவர்கள் உயிரிழந்ததாக அறிக்கைகள் வெளியான நிலையில், அது இன்னும் அதிகமாகவே இருக்கும் என மருத்துவர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Embed widget