மேலும் அறிய

New Toll System: சுங்கச்சாவடிகள்ல இனி நிற்க வேண்டாம்; கட்டணம் இல்லைன்னு நினைச்சுடாதீங்க, விஷயமே வேற..

இந்தியா முழுக்க சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் புதிய முறையை கொண்டு வருகிறது மத்திய அரசு. இதில், வாகனங்கள் இனி சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அது என்ன சிஸ்டம் தெரியுமா.?

நாடு முழுவதிலும், வாகன ஓட்டிகளின் வசதியை கருத்தில் கொண்டு, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது மத்திய அரசு. அந்த வகையில், போக்குவரத்துத் துறை அமைச்சகத்தால் மீண்டும் ஒரு பெரிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இந்த புதிய வசூல் முறை குறித்து தற்போது பார்க்கலாம்.

சுங்கச்சாவடி கட்டண முறைகளில் தொடர் மாற்றம்

ஒரு காலகட்டத்தில், தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகளில் பயணிக்க, அங்குள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களை கவுண்ட்டர்களில் நிறுத்தி, பணம் செலுத்தி ரசீது பெற்று செல்ல வேண்டும். அந்த முறை இருந்தபோது, சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் அதிக நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை இருந்தது. 

இதையடுத்து, வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைப்பதற்காக போக்குவரத்துத் துறை அமைச்சகம், ஃபாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த முறையில், சுங்கச்சாவடி கவுண்ட்டரில், வாகனத்தில் உள்ள ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்டு, கட்டண பிடித்தம் மேற்கொள்ளப்பட்டு வரகிறது. இதனால், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து பாதிப்பு சற்றே குறைந்தது. ஆனாலும், வாகனங்கள் கவுண்ட்டரில் ஸ்கேனுக்காக நிற்க வேண்டும்.

தற்போது, வாகன ஓட்டிகளுக்கு அந்த சிரமத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்ற நோக்கில், புதிய, பெரிய மாற்றம் ஒன்றை கொண்டுவருகிறது போக்குவரத்துத் துறை அமைச்சம். அந்த புதிய முறை குறித்து பார்ப்போம்.

‘Multi Lane Free Flow‘ சிஸ்டம்

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையில் அடுத்த கட்டமாக, நாட்டில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில், Multi Lane Free Flow(MLFF) எனப்படும் தடையற்ற கட்டண வசூல் முறையை அறிமுகப்படுத்துகிறது சாலை போக்குவரத்துத் துறை.

இந்த புதிய முறை, சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமலேயே கட்டணம் வசூலிக்கும் ஒரு நவீன முறையாகும். இதற்காக, சுங்கச்சாவடிகளில் உயர் செயல்திறன் கொண்ட RFID ரீடர்கள் மற்றும் ANPR கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

இதன் மூலம், வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் செல்லும்போது, ஃபாஸ்டேக் மற்றும் வாகன எண்ணை ஸ்கேன் செய்து, தானாகவே கட்டணம் பிடித்தம் செய்யப்படும். தற்போது உள்ள ஸ்கேனர்களில், வாகனங்களை நிறுத்தியே ஸ்கேன் செய்ய முடியும். ஆனால், புதிய நவீன முறையில், வாகனம் ஓரளவு மெதுவாக சென்றாலே போதும், கட்டணம் தானாக பிடித்தம் செய்யப்படும்.

எங்கெங்கு கொண்டுவரப்படும்.?

இந்த புதிய முறை, முதற்கட்டமாக குஜராத்தில் உள்ள NH 48-ல் சோரியாசி டோல் பிளாசாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஹரியானாவில உள்ள NH 44-ல் கரௌண்டா டோல் பிளாசாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் இந்த முறையை கொண்டுவர போக்குவரத்து அமைச்சம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விரைவான, திறமையான தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க்கை உருவாக்க முடியும் என்றும், சுங்க வருவாயையும் மேம்படுத்த முடியும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

தலைப்பு செய்திகள்

L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
PM Modi: இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
இஸ்லாமாபாத்திற்கு செல்கிறாரா பிரதமர் மோடி? அழைப்பிதழை உறுதி செய்த பாக்., - அரசின் முடிவு என்ன?
வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..
வருமான வரி தாக்கல்: இன்றே இறுதி நாள்! தவறினால் ரூ.5000 அபராதம் உறுதி! விபரம் இதோ..
மத்திய அரசு ஊழியர்களே! 8வது ஊதியக் குழுவின் FITMENT FACOTR: உங்கள் சம்பளம் எவ்வளவு?
மத்திய அரசு ஊழியர்களே! 8வது ஊதியக் குழுவின் FITMENT FACOTR: உங்கள் சம்பளம் எவ்வளவு?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget