மேலும் அறிய

New Toll System: சுங்கச்சாவடிகள்ல இனி நிற்க வேண்டாம்; கட்டணம் இல்லைன்னு நினைச்சுடாதீங்க, விஷயமே வேற..

இந்தியா முழுக்க சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் புதிய முறையை கொண்டு வருகிறது மத்திய அரசு. இதில், வாகனங்கள் இனி சுங்கச்சாவடிகளில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை. அது என்ன சிஸ்டம் தெரியுமா.?

நாடு முழுவதிலும், வாகன ஓட்டிகளின் வசதியை கருத்தில் கொண்டு, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது மத்திய அரசு. அந்த வகையில், போக்குவரத்துத் துறை அமைச்சகத்தால் மீண்டும் ஒரு பெரிய மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இந்த புதிய வசூல் முறை குறித்து தற்போது பார்க்கலாம்.

சுங்கச்சாவடி கட்டண முறைகளில் தொடர் மாற்றம்

ஒரு காலகட்டத்தில், தேசிய நெடுஞ்சாலைகள், எக்ஸ்பிரஸ் சாலைகளில் பயணிக்க, அங்குள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களை கவுண்ட்டர்களில் நிறுத்தி, பணம் செலுத்தி ரசீது பெற்று செல்ல வேண்டும். அந்த முறை இருந்தபோது, சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் அதிக நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலை இருந்தது. 

இதையடுத்து, வாகன ஓட்டிகளின் சிரமத்தை குறைப்பதற்காக போக்குவரத்துத் துறை அமைச்சகம், ஃபாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியது. இந்த முறையில், சுங்கச்சாவடி கவுண்ட்டரில், வாகனத்தில் உள்ள ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்யப்பட்டு, கட்டண பிடித்தம் மேற்கொள்ளப்பட்டு வரகிறது. இதனால், சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து பாதிப்பு சற்றே குறைந்தது. ஆனாலும், வாகனங்கள் கவுண்ட்டரில் ஸ்கேனுக்காக நிற்க வேண்டும்.

தற்போது, வாகன ஓட்டிகளுக்கு அந்த சிரமத்தையும் ஏற்படுத்தக் கூடாது என்ற நோக்கில், புதிய, பெரிய மாற்றம் ஒன்றை கொண்டுவருகிறது போக்குவரத்துத் துறை அமைச்சம். அந்த புதிய முறை குறித்து பார்ப்போம்.

‘Multi Lane Free Flow‘ சிஸ்டம்

சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறையில் அடுத்த கட்டமாக, நாட்டில் உள்ள முக்கிய நெடுஞ்சாலைகளில், Multi Lane Free Flow(MLFF) எனப்படும் தடையற்ற கட்டண வசூல் முறையை அறிமுகப்படுத்துகிறது சாலை போக்குவரத்துத் துறை.

இந்த புதிய முறை, சுங்கச்சாவடிகளில் வாகனங்களை நிறுத்தாமலேயே கட்டணம் வசூலிக்கும் ஒரு நவீன முறையாகும். இதற்காக, சுங்கச்சாவடிகளில் உயர் செயல்திறன் கொண்ட RFID ரீடர்கள் மற்றும் ANPR கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

இதன் மூலம், வாகனங்கள் சுங்கச் சாவடிகளில் செல்லும்போது, ஃபாஸ்டேக் மற்றும் வாகன எண்ணை ஸ்கேன் செய்து, தானாகவே கட்டணம் பிடித்தம் செய்யப்படும். தற்போது உள்ள ஸ்கேனர்களில், வாகனங்களை நிறுத்தியே ஸ்கேன் செய்ய முடியும். ஆனால், புதிய நவீன முறையில், வாகனம் ஓரளவு மெதுவாக சென்றாலே போதும், கட்டணம் தானாக பிடித்தம் செய்யப்படும்.

எங்கெங்கு கொண்டுவரப்படும்.?

இந்த புதிய முறை, முதற்கட்டமாக குஜராத்தில் உள்ள NH 48-ல் சோரியாசி டோல் பிளாசாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஹரியானாவில உள்ள NH 44-ல் கரௌண்டா டோல் பிளாசாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதன் பிறகு, நாடு முழுவதும் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் இந்த முறையை கொண்டுவர போக்குவரத்து அமைச்சம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விரைவான, திறமையான தேசிய நெடுஞ்சாலை நெட்வொர்க்கை உருவாக்க முடியும் என்றும், சுங்க வருவாயையும் மேம்படுத்த முடியும் என்றும் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

தலைப்பு செய்திகள்

இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
இன்றைய டாப் 10 நியூஸ்: முக்கிய நிகழ்வுகள்... நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்க வேண்டிய செய்திகள்!
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
PF பணம் எடுப்பதில் புதிய மாற்றம்: 12 மாத காத்திருப்பு! அவசர தேவைக்கு என்ன வழி?
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து!விபரம் இதோ.
டெக் பிரியர்களுக்கு செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!
செம்ம செய்தி: அசத்தலான அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் OnePlus Pad 4!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget