மேலும் அறிய

2001 நாடாளுமன்ற தாக்குதல் முறியடிப்பு தினம்… வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு இரங்கல்!

2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடித்து உயிர்த்தியாகம் செய்த பாதுகாப்புப் படையினருக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் நினைவஞ்சலி செலுத்தியுள்ளனர்.

2001, டிசம்பர் 13, காலை 11.30 மணியளவில் அனுமதியின்றி யாரும் எளிதில் நுழைய முடியாத இந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றார்கள். நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, சில எம்.பி.க்களை பிணைக்கைதிகளாக வைப்பது அவர்களின் திட்டம். அதை பாதுகாப்புப் படையினர் முறியடித்தார்கள். நடந்த சம்பவத்தில் எட்டு பாதுகாப்புப் படையினர், ஒரு தோட்டக்காரர் என மொத்தம் ஒன்பது பேரும், 5 ஆயுததாரிகளும் கொல்லப்பட்டார்கள். அந்த சம்பவத்தில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு, நீதிமன்றம் தண்டனை விதிக்கிறது. துயரமும், துணிச்சலும், விவேகமும் நிறைந்த இந்த சம்பவத்தின் 18-ஆவது நினைவுதினம் இன்று (13.12.2021) அனுசரிக்கப்படுகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தீவிரவாத அமைப்புகளின் ஐந்து பயங்கரவாதிகள் உள்துறை அமைச்சகம் மற்றும் பாராளுமன்றத்தின் போலி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட அம்பாசிடர் காரில் நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஊடுருவினர்.

ஏகே 47 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் கைத்துப்பாக்கிகளை ஏந்தியபடி, நாடாளுமன்ற (Parliament) வளாகத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு வளையங்களில் அத்துமீறி  நுழைந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த பயங்கரமான சம்பவத்தில் மொத்தம் 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 18 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தவந்த பயங்கரவாதிகளும் முக்கிய கட்டிடத்துக்கு செல்லும் முன்னரே பாதுகாப்பு அதிகாரிகளால் கொல்லப்பட்டனர். பயங்கரவாதம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் தேசிய தலைநகரில் உள்ள பிற கடுமையான குற்றங்களைத் தடுக்கவும், கண்டறியவும், விசாரிக்கவும் 1986 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட தில்லி காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் சிறப்புப் பிரிவு இந்த விசாரணைக்கு பொறுப்பேற்றது. 

வெறும் 72 மணி நேரத்தில், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இந்த வழக்கின் பல முக்கிய விஷயங்களை கண்டுபிடித்தது. இது தொடர்பாக முகமது அப்சல் குரு, சவுகத் ஹுசைன், அப்சல் குரு மற்றும் எஸ்ஏஆர் கிலானி ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அப்சல் குரு டெல்லியின் திகார் சிறையில் பிப்ரவரி 2013 இல் தூக்கிலிடப்பட்டார். சவுகத் ஹுசைன் சிறையில் தண்டனை அனுபவித்தார். இந்த தாக்குதலின் 20வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை டெல்லி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில், உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு நாடு என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி விடுத்துள்ள செய்தியில், நாட்டுக்காக உயிர்நீத்த வீரர்களின் தொண்டும் தியாகமும் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Embed widget