மேலும் அறிய

பழமை வாய்ந்த பொருட்களை வைத்து அருங்காட்சியகம் - ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவிகள்

தருமபுரி அருகே அரசு பள்ளியில், தான் பணியாற்றிய காலங்களில் சேகரித்து வந்த பழமை வாய்ந்த பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைத்துள்ள தலைமை ஆசிரியர் - ஆர்வமுடன் பழங்கால பொருட்களை பார்வையிடும் மாணவிகள்.

தருமபுரி மாவட்டம் இண்டூன் அடுத்த நத்த தள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர், பத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக முசோலினி கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். அரசு பள்ளிகளில் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக் கொணர்வது, பள்ளி வளாகத்தை மரம்,செடி கொடிகள் வைத்து பசுமையாக மாற்றுவது போன்ற பணிகளை பல்வேறு ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். ஆனால் மாணவர்களின் கல்விக்கு ஏற்ற வகையில், பயன்படும் வகையில் பள்ளி தலைமை ஆசிரியர் முசோலினி, தான் பணியாற்றக்கூடிய காலங்களில் பழகால பொருட்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது இந்த பழங்கால பொருட்களை சேகரித்து மாணவர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும், அதன் மூலம் அவர்களது பாடத்திற்கும், பழங்கால வாழ்க்கை முறையை அவர்கள் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் என யோசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் பழங்கால பொருட்கள், வரலாற்று நினைவுச் சின்னங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பழமை வாய்ந்த பொருட்களை வைத்து அருங்காட்சியகம் - ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவிகள்
 
இந்த பழங்கால பொருட்களை சேகரித்து தான் பணியாற்றும் பள்ளிகளில் மாணவர்களின் பார்வைக்கு அருங்காட்சியகம் போல் அமைத்து பாதுகாத்து வந்துள்ளார். மேலும் மாணவர்கள் மூலமாக பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஏதேனும் கிடைத்தால் அதையும் சேகரித்து வந்துள்ளார். இந்நிலையில் பணியாற்றுகின்ற பள்ளியில் விட்டு வருகின்ற பொழுது, சில பொருட்கள் காணாமல் போய் வந்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது நத்தள்ளி உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றவுடன் தான் தேடித் திரிந்த சேகரித்த பண்டைய கால வரலாற்றை நினைவு கூறும் பொருட்களை, தனி அறையில் அருங்காட்சியமாக அமைக்க திட்டமிட்டுள்ளார். இதனை அடுத்து பள்ளி வராண்டாவில் சிறிய அறையாக மாற்றி அதில் தான் சேகரித்த அனைத்து பொருட்களையும் வைத்து சிறிய அருங்காட்சியகத்தை அமைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பழமை வாய்ந்த பொருட்களை வைத்து அருங்காட்சியகம் - ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவிகள்
 
இதில் நான்கு பழங்கால ஓலைச் சுவடிகள் தெலுங்கில் எழுதப்பட்ட ராமாயணம், தமிழில் எழுதப்பட்ட மருத்துவ ஓலைச்சுவடி, திசுல்தான் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி குண்டுகள், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுடு களிமண் அச்சு, கற்கால மனிதர்கள் உபயோகப்படுத்திய கல் ஆயுதங்கள், மரப்பாசி பொம்மைகள், விஜயநகர பேரரசு காலத்து சிலைகள், மான் கொம்புகள், ஆகியவற்றை அமைத்துள்ளார். மேலும் மொகாலய மன்னர் பயன்படுத்திய இரும்புவால், சித்த மருத்துவத்திற்கு பயன்படுத்திய கற்கள், கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய சினிமா எடுக்க பயன்படுத்தப்பட்ட டேப்ரெக்கார்டர், ஓவிய ரெக்கார்ட், கிராமபோன் 15 எம்எம் சினிமா ஃபிலிம் ப்ரொஜெக்டர், டஐப்பஇங்க இயந்திரம், ரேடியோ என தற்போதைய 2கே கிட்ஸ் பார்த்திராத பொருட்களும் இடம் பெற்றுள்ளன.
 

பழமை வாய்ந்த பொருட்களை வைத்து அருங்காட்சியகம் - ஆர்வத்துடன் பார்வையிட்ட மாணவிகள்
இந்த அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ மாணவிகள் அவ்வப்போது வந்து பார்வையிட்டு இந்த பொருட்களை பற்றி தெரிந்து கொள்வதும், வரலாற்று ஆசிரியர்கள் இது தொடர்பான பாடங்களை எடுக்கும் பொழுது இந்த அருங்காட்சியகத்திற்கு அழைத்து வந்து மாணவர்களுக்கு விளங்கும்படி எடுத்துக் கூறுவர் வருகின்றனர். இதனால் இந்த அருங்காட்சியகத்திற்கு வருவதற்கு மாணவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு வந்து செல்கின்றனர். இதனால் மாணவ மாணவிகளுக்கும் ஆசிரியர் பாடம் நடத்துகின்ற பொழுது பாதி புரியாமல் இருந்தாலும், இந்த அருங்காட்சியகத்தில் வந்து நம் முன்னோர்கள் பயன்படுத்திய பண்டைய கால பொருட்களை நேரில் பார்த்து, அதனை பயன்படுத்தியவர்கள் மற்றும் அதனுடைய பயன்பாடுகள் குறித்து ஆசிரியர் விளக்கும் போது முழுமையாக பாடத்தினை உள்வாங்கிக் கொள்கின்றனர். இந்த பள்ளி அருங்காட்சியகத்தில் மாணவர்கள் மட்டுமல்லாமல், பணியாற்றுகின்ற ஆசிரியர்களும் அவ்வப்போது ஓய்வு நேரங்களில் பழங்கால பொருட்களை பார்த்து அதன் பயன்பாடுகள் குறித்தும், அறிந்து கொள்கின்றனர்.
 
மேலும் தமிழகத்திலேயே அருங்காட்சியகங்கள் எந்த பள்ளியிலும் இல்லாத நிலையில் தலைமையாசிரியரின் முயற்சியால், நத்ததள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் மட்டுமே இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை வந்து பார்வையிடும் மாணவ, மாணவிகள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள இது உதவிகரமாக இருந்து வருகிறது. மேலும் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு வெறுமனே பாடப்புத்தகத்தில் இருக்கின்ற கல்வியை மட்டும் கொடுக்காமல், கூடுதலாக அவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்துவதற்கு இது போன்ற அருங்காட்சியங்கள் பேருதவியாக இருப்பதாக தலைமை ஆசிரியர் மிசாலினி தெரிவித்துள்ளார்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கே

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி,
”அவங்களுக்கு எதிரா நான் பேசுனதே கிடையாது - அடித்து சொல்லும் பிரதமர் மோடி
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Lok Sabha Election 5th Phase LIVE : 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம் - 23.66% ஆக பதிவானது
Car Health Tips: இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே உங்க காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
இந்த அறிகுறிகள் எல்லாம் தெரியுதா? உடனே காரை மெக்கானிக் ஷாப் கொண்டு போங்க..!
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
”என்னை மாதிரி யாரும் ஆகிடக்கூடாது” : முதலமைச்சர் வீட்டிற்கு குடிபோதையில் சென்றதால் பரபரப்பு
Thalapathy Vijay: ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
ஜேசன் சஞ்சயை நம்பவே முடியாது.. மகனை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் விஜய்!
Latest Gold Silver Rate:வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
வரலாற்றில் புதிய உச்சம்..ஒரு சவரன் தங்கம் விலை ரூ.55 ஆயிரத்தை கடந்தது!
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
Iran President: உயிரிழந்த சர்வதேச தலைவர்கள்.. வான்வழி விபத்துகள்.. அதிர வைக்கும் பட்டியல்
BCCI: மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..?  ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
மீண்டும் மத்திய ஒப்பந்தத்தில் இடமா..? ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனை முகாமுக்கு அழைத்துள்ள பிசிசிஐ..!
Embed widget