மேலும் அறிய

நீர் திறப்பு அதிகரிப்பு.. காவிரியில் வெள்ளப்பெருக்கு.. ஆடிப் பண்டிகையில் மக்கள் ஏமாற்றம்

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20000 கன அடியிலிருந்து, வினாடிக்கு 21,000 கன அடியாக அதிகரிப்பு. இரண்டாவது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை

காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20000 கன அடியிலிருந்து, வினாடிக்கு 21,000 கன அடியாக அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளாக பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


நீர் திறப்பு அதிகரிப்பு.. காவிரியில் வெள்ளப்பெருக்கு.. ஆடிப் பண்டிகையில் மக்கள் ஏமாற்றம்

இன்று இரவுக்குள் வினாடிக்கு 40 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க வாய்ப்பு. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கர்நாடக அணைகளான கபினி அணையில் வினாடிக்கு 36,000 கனஅடி, கிருஷ்ணராஜசாகர் அணையில் வினாடிக்கு 550 கன அடியாகவும், கிளை நதியான நுகு அணையில் இருந்து 4000 கன அடி என மொத்தம் 40,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, நேற்று காலை முதல் நீர்வரத்து வினாடிக்கு 18000, 20,000 கனஅடி என படிப்படியாக அதிகரித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 21,000 கன அடியாக அதிகரித்ததுள்ளது.    

மேலும் இந்த நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக ஒகேனக்கல் ஐந்தருவி தண்ணீரின்றி வறண்டு கிடந்த பாறைகளாக காட்சியளித்து வந்த நிலையில், தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. மேலும் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்துள்ளார். 

அதேபோல் நீர் திறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், இரவு நேரங்களில் பொதுமக்கள் ஆற்றை கடக்க வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஆற்று பக்கம் கொண்டு செல்ல வேண்டாம் எனவும், தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.

இன்று ஆடி பண்டிகை என்பதால், வழக்கமாக காவிரி ஆற்றில் புனித நீராட ஏராளமான பொதுமக்கள், சுற்றுலா பயணிகளும் வருபவர்கள். ஆனால் நீர்வரத்து அதிகரிப்பால், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளதால், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  

மேலும் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 25,500 கனடியில் இருந்து 40,500 கன அடியாக அதிகரித்து இருப்பதால், இந்த தண்ணீர் இன்று மாலை தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும்.  காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால், காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் உள்ள ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல், பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில் வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படுகின்ற நீரின் அளவு, மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Speech: ”குறுக்க ஆம்புலன்ஸ் வந்தா.. ட்ரைவரே பேஷண்டா போக வேண்டி இருக்கும்” - எடப்பாடியார் வார்னிங்
EPS Speech: ”குறுக்க ஆம்புலன்ஸ் வந்தா.. ட்ரைவரே பேஷண்டா போக வேண்டி இருக்கும்” - எடப்பாடியார் வார்னிங்
TVK Vijay OPS Alliance: தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
TVK Vijay OPS Alliance: தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
தேனியில் சிறுவனை வன்புணர்வு செய்த இளைஞனுக்கு 31 ஆண்டு சிறை!
தேனியில் சிறுவனை வன்புணர்வு செய்த இளைஞனுக்கு 31 ஆண்டு சிறை!
Safest Cars Under 10 Lakh: பத்து லட்சத்தில் இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான் - தரமான ப்ராண்ட்னா சும்மாவா
Safest Cars Under 10 Lakh: பத்து லட்சத்தில் இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான் - தரமான ப்ராண்ட்னா சும்மாவா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”கொங்கு-னா நாங்கதான்” CPR-ஐ வைத்து மோடி ஸ்கெட்ச்! செந்தில் பாலாஜிக்கு செக்?
ம.செ குஷி மோகன் முகத்தில் சாணி அடித்த தவெக நிர்வாகிகள் விழுப்புரம் தவெகவில் அதிருப்தி | Villupuram TVK Fight
துணை ஜனாதிபதி தேர்தல்.. தமிழகத்தின் C.P.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிப்பு | CP Radhakrishnan
RSS To துணை குடியரசுத் தலைவர் யார் இந்த CP ராதாகிருஷ்ணன்? ஆதரவு தருவாரா ஸ்டாலின்? | CP Radhakrishnan Profile
Mayiladuthurai DMK | அடிதடி , களேபரம்.. திமுகவில் கோஷ்டி பூசல் மயிலாடுதுறையில் பரபரப்பு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Speech: ”குறுக்க ஆம்புலன்ஸ் வந்தா.. ட்ரைவரே பேஷண்டா போக வேண்டி இருக்கும்” - எடப்பாடியார் வார்னிங்
EPS Speech: ”குறுக்க ஆம்புலன்ஸ் வந்தா.. ட்ரைவரே பேஷண்டா போக வேண்டி இருக்கும்” - எடப்பாடியார் வார்னிங்
TVK Vijay OPS Alliance: தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
TVK Vijay OPS Alliance: தேர்தலில் விஜய்யுடன் கூட்டணியா? ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
தேனியில் சிறுவனை வன்புணர்வு செய்த இளைஞனுக்கு 31 ஆண்டு சிறை!
தேனியில் சிறுவனை வன்புணர்வு செய்த இளைஞனுக்கு 31 ஆண்டு சிறை!
Safest Cars Under 10 Lakh: பத்து லட்சத்தில் இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான் - தரமான ப்ராண்ட்னா சும்மாவா
Safest Cars Under 10 Lakh: பத்து லட்சத்தில் இந்தியாவின் பாதுகாப்பான கார்கள் இவைதான் - தரமான ப்ராண்ட்னா சும்மாவா
Top 10 News Headlines: பருத்திக்கு இறக்குமதி வரி ரத்து, யூட்யூபில் ஆஸ்கர் நிகழ்ச்சி? ராகுல் வார்னிங்  - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines: பருத்திக்கு இறக்குமதி வரி ரத்து, யூட்யூபில் ஆஸ்கர் நிகழ்ச்சி? ராகுல் வார்னிங் - 11 மணி செய்திகள்
Miss Universe India 2025: யார் இந்த மணிகா விஷ்வகர்மா? பிரபஞ்ச அழகி போட்டிக்கு தேர்வான இந்தியர் - வீடியோ வைரல்
Miss Universe India 2025: யார் இந்த மணிகா விஷ்வகர்மா? பிரபஞ்ச அழகி போட்டிக்கு தேர்வான இந்தியர் - வீடியோ வைரல்
யுபிஎஸ்சி அறிவிப்பு: EPFO-ல் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு, மிஸ் பண்ணிடாதீங்க!
யுபிஎஸ்சி அறிவிப்பு: EPFO-ல் வேலை வாய்ப்பு! விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு, மிஸ் பண்ணிடாதீங்க!
ECI Vote Theft: ”சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம்” வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR?
ECI Vote Theft: ”சிக்கி தவிக்கும் தேர்தல் ஆணையம்” வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - பாயிண்ட்ஸ் எப்ப வரும் SIR?
Embed widget