மேலும் அறிய

கள்ள நாட்டு துப்பாக்கிகளை உடனடியாக கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும்: வனத்துறை அதிரடி

கள்ள நாட்டு துப்பாக்கிகளை உடனடியாக கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும் வனத்துறை அதிரடி

ஓசூர் வனக்கோட்டத்தில் வன உயிரின வேட்டையாடுவதை கட்டுப்படுத்தவும் வகையில் கள்ள நாட்டு துப்பாக்கிகளை வைத்து இருப்பவர்கள் வரும் ஜூலை 17-ஆம் தேதிக்குள் தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என வனத்துறையினர் அறிகுறித்துள்ளனர். 

 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டமானது 1492 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது.  மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 29 சதவீதம் வனப்பகுதி உள்ளது.  இங்கு வாழும் அதிக அளவிலான அரிய வகை உயிரினங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 54 சதுர மீட்டர் பரப்பளவில் 2014ஆம் ஆண்டு காவேரி வடக்கு வன உயிரின சரணாலயம் 686 சதுர கிலோமீட்டர் கிருஷ்ணகிரி மாவட்டம் 477.82 சதுர கிலோமீட்டர், தர்மபுரி மாவட்டம் 28.58 சதுர கிலோமீட்டர், பரப்பளவில் 2020ஆம் ஆண்டு காவிரி தெற்கு வன உயிரின சரணாலயமும் அறிவிக்கை  செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒசூர் வனக்கோட்டமானது காவேரி, சின்னாறு, தென் பண்ணையாறு, போன்ற ஆறுகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக அமைந்துள்ளது.  இப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள், யானைகள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் மயில்கள் உட்பட இதர பறவை இனங்கள் அரிய வகை விலங்குகள் வசிக்கின்றன.  வனப் பகுதிகளில் உள்ள உயிரினங்கள் அவ்வப்போது வேட்டையாடப்படுகின்றன. 

 வன உயிரினங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மலை கிராமங்கள் மற்றும் காப்புக்காடுகளை சுற்றியுள்ள கிராமங்களில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகம், பேனர்கள் மூலம் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் வாயிலாகவும், பேரணிகள் நடத்தப்பட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

 இதனை அடுத்து 111 கள்ள நாட்டு துப்பாக்கிகளை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து ஒப்படைத்தனர்.  அவை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதனால் வனப்பகுதியில் கடந்த காலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது வன உயிரினங்கள் வேட்டையாடுதல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  இதனிடையே விவசாய நிலங்களில் பயிர்களை உண்பதற்கு வரும் யானைகள் கள்ள நாட்டு துப்பாக்கிகள் மூலம் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.  இது தொடர்பாக வன அலுவலர் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு கடந்த மூன்று ஆண்டுகளில் 14 கள்ள நாட்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு வன உயிரின குற்றங்கள் ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்கு கள் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.  

வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்கும் பொருட்டு வனங்களை சார்ந்து உள்ள கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் யாரேனும் கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்தால் அதனை வரும் 17ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 17ஆம் தேதிக்குள் வனத்துறை அலுவலர்களை தொடர்புகொண்டு அவர்களிடமோ அல்லது ஊர் முக்கியஸ்தர்களிடமோ தாமாக முன்வந்து ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு கள்ள நாட்டு துப்பாக்கிகள் ஒப்படைக்கும் நபர்கள் மீது வன குற்ற வழக்குகள் ஏதும் பதிவு செய்யப்படாது. 

 அவ்வாறு ஒப்படைக்காமல் கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்திருக்கும் பட்சத்தில் வரும் ஜூலை மாதம் 18ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு மோப்ப நாய்கள் மூலம் மலை கிராமங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ரோந்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இச்சோதனை மூலமோ அல்லது வேறு ஏதும் வகையிலோ கள்ள நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 மற்றும்  ஆயுத தடைச் சட்ட பிரிவுகளின் மூலம் காவல்துறையால் இந்திய தண்டனைச் சட்டம் மூலமும் வனத்துறையாலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN LIVE Score: அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியா - அசத்தும் வங்கதேச பந்துவீச்சாளர்கள்
IND vs BAN LIVE Score: அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியா - அசத்தும் வங்கதேச பந்துவீச்சாளர்கள்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN LIVE Score: அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியா - அசத்தும் வங்கதேச பந்துவீச்சாளர்கள்
IND vs BAN LIVE Score: அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள்! தடுமாறும் இந்தியா - அசத்தும் வங்கதேச பந்துவீச்சாளர்கள்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
GST Rate Change: பால் கேன்களுக்கு 12% ஜி.எஸ்.டி, ரயில் ப்ளாட்பார்ம், மாணவர் விடுதிகளுக்கு வரி விலக்கு- நிதியமைச்சர்
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Hinduja Family : ஊழியர்களுக்கு கொடுமை.. சிறை செல்லும் ஹிந்துஜா குடும்பத்தினர்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
கோயில் நில ஆக்கிரமிப்பு: ரூ.5, 812 கோடி சொத்துக்கள் மீட்பு; 17, 450 பேர் மீது நடவடிக்கை - அறநிலையத்துறை
Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி
Madurai: கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு  ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்; நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்; கைதான எச்.ராஜா
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விழுப்புரத்தில் பரபரப்பு... விஷச்சாராயம் குடித்த இருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
காப்பாற்ற முயற்சி செய்த கணவர்.. மாடியில் இருந்து விழுந்த பெண்.. கர்நாடகாவில் சோகம்!
Embed widget