மேலும் அறிய

வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை பம்பிங் மூலம் தர்மபுரி ஏரிகளை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை

வீணாக கடலில் கலக்கும் காவிரி நீரை பம்பிங் மூலம் தர்மபுரி ஏரிகளை நிரப்ப விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடந்தது. இதில் அரசு துறை அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்

மழைக்காலங்களில் ஒகேனக்கல் காவிரி உபநீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த உபரி நீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு பம்பிங் செய்து நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைத்திருக்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக விவசாய சங்க மாநில தலைவர் எஸ். ஏ. சின்னசாமி பேசியபோது:-

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த நீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு பம்பிங் செய்து நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் பருவ மழை பெய்யாமல் வேலையில்லாமல் பஞ்சம் பிழைக்க பெங்களூருக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர். அங்கு காவிரி பிரச்சனைகளால் தாக்கப்பட்டு சொந்த ஊருக்கு விவசாயிகள் திரும்பும் நிலை உள்ளது.

இந்த நிலை மாற ஒகேனக்கல் காவிரி உபரி நீர் திட்டத்தை அரசு  செயல்படுத்தினால் சொந்த ஊரிலேயே விவசாயம் கவனித்துக் கொண்டு விவசாயிகள் குடும்பத்துடன் இருக்கும் நிலை ஏற்படும்.

ஈச்சம்பாடி அணைக்கட்டில் பம்பிங் மூலம் சுற்றுவட்டார ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நிரப்பும் திட்டம் செயல்படுத்த வேண்டும். தும்மலஹள்ளி என்னை கொள் புதூர் நீர் பாசன திட்டம், அழியாளம், தூள் செட்டி ஏரி நீர் பாசன திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்.

அரசு மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பிரதாபன் தர்மபுரி மாவட்ட வனம் மற்றும் மலையை சார்ந்த பகுதியில் அதிகமாக கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. மாவட்டத்தில் காவிரி வடக்கு, தெற்கு வன உயிர் இன சரணாலயங்கள் உள்ளன. இங்கு கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வனவிலங்குகளிடமிருந்து கால்நடைகளுக்கும், கால்நடை இடம் இருந்து வனவிலங்குகளுக்கும் பரவும் நோயை கட்டுப்படுத்தவும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய் பரவாமல் தடுப்பதும் அவசியமாகிறது. இதனால் சரணாலய பகுதிகளில் கால்நடைகளிடம் கால்நடைகளின் நடமாட்டம் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்திற்கு புறம்பாக உள்ளதால் அவற்றை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வரும் 1- ம் தேதி முதல் கால்நடைகளை சரணாலய பகுதிகளில் கண்டறியப்பட்டால் அவற்றை பிடித்து அரசுடைமையாக்கப்படும். பின்னர் அவற்றை பொது இடத்தில் விற்பனை செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. இந்த வார்த்தையை உடனே வனத்துறை திரும்ப பெற வேண்டும்.

 விவசாயிகள் கேள்விக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தி பதிலளித்து பேசுகையில்:-

தமிழக முதல்வர் விவசாயிகள் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வனத்தில் கால்நடைகள் மேச்சலுக்கு மற்றும் நடைபயிற்சி பறிமுதல் குறித்து விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் தனியாக விவசாயிகளை குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி கலந்து பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். ஒகேனக்கல் காவிரி உபநீர் திட்டம் அரசு பார்வையில் உள்ளது. நீர்ப்பாசன திட்டங்கள் விரைவாக  செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட  மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Embed widget