மேலும் அறிய

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் படிப்படியாக குறைந்த நீர்வரத்து; சுற்றுலா பயணிகளுக்கு தொடரும் தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 60,000 கன அடியிலிருந்து குறைந்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. தொடர்ந்து 23 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிப்பு.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. 

இதனை தொடர்ந்து இரண்டு அணைகளின் பாதுகாப்பு கருதி, இரண்டு அணையிலிருந்தும், உபரி நீர் இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. 

இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி வரை அதிகரித்து, காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து இருகரைகளையும் தொட்டவாறு கரைபுரண்டு ஓடியது. 

இதனால்  ஒகேனக்கல் பகுதி வெள்ளக்காடாய் காட்சி அளித்து வந்தது. மேலும் காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில், ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல், நாடார் கொட்டாய், நாகமரை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள், தங்கும் விடுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் படிப்படியாக குறைந்த நீர்வரத்து; சுற்றுலா பயணிகளுக்கு தொடரும் தடை

போக்குவரத்து நிறுத்தம்

ஒகேனக்கல்-ஓசூர் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கன அடியாக குறைத்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  

இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு, கடந்த நான்கு நாட்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 60,000 கன அடியாக இருந்த நீர்வரத்து குறைந்து, இன்று காலை வினாடிக்கு 24,000 கன அடி குறைந்துள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஆனால் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் மெயின் அருவி, மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  இந்த நிலையில் தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் 23 வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை நீடித்து வருகிறது. மேலும் தொடரும் நீர்வரத்து காரணமாக கடந்த 15 நாட்களுக்கு மேலாக காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், 15 நாட்களுக்கு பிறகு இன்று நீர்வரத்து கடுமையாக சரிந்து, வெள்ளம் குறைந்துள்ளது

அதிகாரிகள் கூறியதாவது:-

மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், தமிழகத்திற்கான தண்ணீர் வினாடிக்கு 8000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து மேலும் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை, தமிழக கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar
சென்னை மக்களே உஷார் அடுத்த இரண்டு நாட்கள்...வானிலை மையம் ALERT | Chennai rain
சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
நெருங்கும் தேர்தல்; கொங்கு மண்டலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின்- 2 நாள் பயணத் திட்டம் என்ன?
TN Rain Alert:  கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்ணை கேள்வி கேட்பது மன நோய் - செளமியா அன்புமணி ஆவேசம்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
TET exam: டெட் தேர்வு ரத்தாகுமா?- முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில்
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
பைஜூ ரவீந்திரனுக்கு ₹9,591 கோடி அபராதம்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு: காரணம் என்ன?
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
அய்யா PMK: ராமதாஸ் ஆதரவாளர்கள் புதிய கட்சி தொடக்கம்? மாம்பழ சின்னம் யாருக்கு? பரபரப்பு தகவல்!
Kerala Pooja Bumper Lottery: முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
முதல் பரிசே ரூ.12 கோடி; அப்போ பிற பரிசுகள்? பூஜா பம்ப்பர் லாட்டரி வாங்கியாச்சா? லக் யாருக்கு?
Embed widget