மேலும் அறிய

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் படிப்படியாக குறைந்த நீர்வரத்து; சுற்றுலா பயணிகளுக்கு தொடரும் தடை

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 60,000 கன அடியிலிருந்து குறைந்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. தொடர்ந்து 23 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை நீட்டிப்பு.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது. 

இதனை தொடர்ந்து இரண்டு அணைகளின் பாதுகாப்பு கருதி, இரண்டு அணையிலிருந்தும், உபரி நீர் இரண்டு லட்சம் கன அடிக்கு மேல் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. 

இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து, காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடி வரை அதிகரித்து, காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து இருகரைகளையும் தொட்டவாறு கரைபுரண்டு ஓடியது. 

இதனால்  ஒகேனக்கல் பகுதி வெள்ளக்காடாய் காட்சி அளித்து வந்தது. மேலும் காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில், ஆலம்பாடி, ஊட்டமலை, ஒகேனக்கல், நாடார் கொட்டாய், நாகமரை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள், தங்கும் விடுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் படிப்படியாக குறைந்த நீர்வரத்து; சுற்றுலா பயணிகளுக்கு தொடரும் தடை

போக்குவரத்து நிறுத்தம்

ஒகேனக்கல்-ஓசூர் சாலையில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்கவும், பரிசல் பயணத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கன அடியாக குறைத்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  

இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு, கடந்த நான்கு நாட்களாக நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 60,000 கன அடியாக இருந்த நீர்வரத்து குறைந்து, இன்று காலை வினாடிக்கு 24,000 கன அடி குறைந்துள்ளது.

சுற்றுலா பயணிகளுக்கு தடை

ஆனால் நீர்வரத்து குறைந்தாலும், ஒகேனக்கல் மெயின் அருவி, மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  இந்த நிலையில் தொடர்ந்து சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் 23 வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை நீடித்து வருகிறது. மேலும் தொடரும் நீர்வரத்து காரணமாக கடந்த 15 நாட்களுக்கு மேலாக காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், 15 நாட்களுக்கு பிறகு இன்று நீர்வரத்து கடுமையாக சரிந்து, வெள்ளம் குறைந்துள்ளது

அதிகாரிகள் கூறியதாவது:-

மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், தமிழகத்திற்கான தண்ணீர் வினாடிக்கு 8000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து மேலும் படிப்படியாக குறைய வாய்ப்புள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். 

மேலும் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை, தமிழக கர்நாடகா எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
அன்புமணி எதற்காக தைலாபுரம் வீட்டிற்கு வந்தார்? - ராமதாஸ் அளித்த பதில் இதோ
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
சென்னையிலே இப்படியா? ஆசிரியர்கள் இல்லா அரசுப்பள்ளிகள்.. அப்புறம் எப்படி பசங்க படிப்பாங்க?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
PM Modi TN Visit: 3 மாதங்களுக்குப் பிறகு - ஃபாரின் டூர் முடிந்து தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - எப்போது? ஏன்?
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய அறிய வாய்ப்பு...! பெயர் சேர்த்தல், நீக்கம் உட்பட முக்கிய சேவைகள்! தவறவிடாதீர்!
மகன்கூட மல்லுகட்டும் ராமதாஸ்.. மகனுக்காக மல்லுகட்டும் வைகோ.. அனல்பறக்கும் தமிழ்நாடு அரசியல்
மகன்கூட மல்லுகட்டும் ராமதாஸ்.. மகனுக்காக மல்லுகட்டும் வைகோ.. அனல்பறக்கும் தமிழ்நாடு அரசியல்
Mahindra Car Offer: எல்லா அம்சங்களும் கொட்டிக் கிடக்கே.! இந்த மஹிந்திரா காருக்கு ரூ.2.5 லட்சம் சலுகை, 5 ஸ்டார் ரேட்டிங்
Mahindra Car Offer: எல்லா அம்சங்களும் கொட்டிக் கிடக்கே.! இந்த மஹிந்திரா காருக்கு ரூ.2.5 லட்சம் சலுகை, 5 ஸ்டார் ரேட்டிங்
மதுரைக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... புதிய சிப்காட், வேலைவாய்ப்பு பெருகும்! தென் மாவட்டங்களில் மாபெரும் மாற்றம்?
மதுரைக்கு அடுத்தடுத்து அடிக்கும் ஜாக்பாட்... புதிய சிப்காட், வேலைவாய்ப்பு பெருகும்! தென் மாவட்டங்களில் மாபெரும் மாற்றம்?
எல்லாரிடமும் திமிராக பேசிய தனுஷ்...8 வருடம் கழித்து உண்மையை சொன்ன நயன்
எல்லாரிடமும் திமிராக பேசிய தனுஷ்...8 வருடம் கழித்து உண்மையை சொன்ன நயன்
Embed widget