மேலும் அறிய

ஈரமாக இருப்பதாக சொல்கிறார்கள்.. ஓரம் தள்ளப்படும் நெல் மூட்டைகள்... கவலையில் விவசாயிகள்!

ஈரப்பதத்தின் சதவீதத்தை 24 சதவீதமாக உயர்த்தி அனைத்து விவசாயிகளின் நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் இல்லையென்றால் விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

ஈரப்பதத்தை கணக்கு காண்பித்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்
 
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதன் காரணத்தினால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 4.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் நிகழாண்டில் 1.37 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் பயிர்கள் நன்றாக வளர்ந்து வந்து தற்போது அறுவடை பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையில் சாய்ந்து வருகின்றன இதனை கண்டு விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

ஈரமாக இருப்பதாக சொல்கிறார்கள்.. ஓரம் தள்ளப்படும் நெல் மூட்டைகள்... கவலையில் விவசாயிகள்!
இந்த நிலையில் விவசாயிகள் தங்களது வயல்களில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைத்து பின்னர் அறுவடை இயந்திரம் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் மூலம் தங்களது நெல் பயிரை அறுவடை செய்து வெயில் அடிக்கும் நேரத்தில் சாலையில் கொட்டி காயவைத்து பின்னர் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு செல்கின்றனர். ஆனால் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை ஈரப்பதத்தின் அளவை காண்பித்து கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு அரசு 17 சதவிகிதம் ஈரப்பதமுள்ள நெல்களை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் கடந்த 10 தினங்களாக பெய்துவரும் மழையின் காரணமாக அறுவடை செய்யும்பொழுது நெல் மணிகளில் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது.

ஈரமாக இருப்பதாக சொல்கிறார்கள்.. ஓரம் தள்ளப்படும் நெல் மூட்டைகள்... கவலையில் விவசாயிகள்!
இதன்காரணமாக நெல்மணிகளை காயவைத்து அதன் பின்னரே கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றாலும் 20 சதவீதத்தில் இருந்து 22 சதவீதம் வரை நெல்மணிகளில் ஈரப்பதம் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக கடந்த காலங்களில் விவசாயிகளின் நிலையை புரிந்து கொண்டு ஈரப்பதத்தின் அளவை உயர்த்தி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதே போன்று இந்த ஆண்டும் ஈரப்பதத்தின் சதவீதத்தை 24 சதவீதமாக உயர்த்தி அனைத்து விவசாயிகளின் நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் இல்லையென்றால் விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இதனால் அடுத்தகட்ட சாகுபடி பணிகளை தொடங்க முடியாத நிலை உருவாகும் ஏற்கனவே கடன் பெற்று சாகுபடி செய்த நிலையில் செய்த செலவுத் தொகையைக் கூட எடுக்க முடியாத நிலை உருவாகும். ஆகையால் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு நெல்லின் ஈரப்பதம் சதவீதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
இரண்டரை வயது சிறுமி படுகொலை... குற்றவாளிகளின் புகலிடமாக திமுக மாறிவிட்டது: அன்புமணி இராமதாஸ் கண்டனம்
Vijay Divorce: நடிகையுடன் தொடர்பு? பெண்கள் மத்தியில் சரிந்த விஜய் செல்வாக்கு - சோகத்தில் தொண்டர்கள், ரசிகர்கள்!
Vijay Divorce: நடிகையுடன் தொடர்பு? பெண்கள் மத்தியில் சரிந்த விஜய் செல்வாக்கு - சோகத்தில் தொண்டர்கள், ரசிகர்கள்!
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
ABP Premium

வீடியோ

TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விஜய்-சங்கீதா விவாகரத்து! நடிகையுடன் தொடர்பு? அதிர்ச்சி குற்றச்சாட்டு! நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
Vijay Sangeetha Divorce: விவாகரத்து கேட்ட விஜய் மனைவி.. சங்கீதாவிற்கு சதிகாரியாக மாறிய நடிகை யார்?
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
விஜய் கட்சி தொடங்கிய நிலையில் அதிர்ச்சி: மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு! பரபரப்பு தகவல்!
Vijay Sangeetha Divorce: விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
விஜயின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகையா? - விஜய் மீது சங்கீதா வைத்த குற்றச்சாட்டுகள் என்னென்ன?
Arvind Kejriwal: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தீர்ப்பு; கண்ணீர் விட்டு கதறி அழுத கெஜ்ரிவால் - என்ன ஆச்சு.?
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிரதமர் மோடி புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார் !
Stalin Kejriwal: பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
பாஜகவுக்கு விளாசல், டெல்லி முன்னாள் முதல்வருக்கு வாழ்த்து; ஸ்டாலினுக்கு நன்றி கூறிய கெஜ்ரிவால்
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Planet Parade: நாளை வானில் அதிசயம்! எந்தெந்த கிரகங்களின் அணிவகுப்பு? எப்படி, எந்த நேரத்தில் காணலாம்? அரிய வாய்ப்பு!
Embed widget