மேலும் அறிய

ஈரமாக இருப்பதாக சொல்கிறார்கள்.. ஓரம் தள்ளப்படும் நெல் மூட்டைகள்... கவலையில் விவசாயிகள்!

ஈரப்பதத்தின் சதவீதத்தை 24 சதவீதமாக உயர்த்தி அனைத்து விவசாயிகளின் நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் இல்லையென்றால் விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

ஈரப்பதத்தை கணக்கு காண்பித்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்
 
திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜூன் மாதம் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. அதன் காரணத்தினால் இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 4.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத வகையில் நிகழாண்டில் 1.37 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் பயிர்கள் நன்றாக வளர்ந்து வந்து தற்போது அறுவடை பணிகள் என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் கடந்த 10 தினங்களுக்கு மேலாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையில் சாய்ந்து வருகின்றன இதனை கண்டு விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

ஈரமாக இருப்பதாக சொல்கிறார்கள்.. ஓரம் தள்ளப்படும் நெல் மூட்டைகள்... கவலையில் விவசாயிகள்!
இந்த நிலையில் விவசாயிகள் தங்களது வயல்களில் தேங்கியிருந்த மழை நீரை வடிய வைத்து பின்னர் அறுவடை இயந்திரம் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் மூலம் தங்களது நெல் பயிரை அறுவடை செய்து வெயில் அடிக்கும் நேரத்தில் சாலையில் கொட்டி காயவைத்து பின்னர் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் நெல் மூட்டைகளை கொண்டு செல்கின்றனர். ஆனால் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல் மூட்டைகளை ஈரப்பதத்தின் அளவை காண்பித்து கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு அரசு 17 சதவிகிதம் ஈரப்பதமுள்ள நெல்களை கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆனால் டெல்டா மாவட்டங்களில் கடந்த 10 தினங்களாக பெய்துவரும் மழையின் காரணமாக அறுவடை செய்யும்பொழுது நெல் மணிகளில் ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது.

ஈரமாக இருப்பதாக சொல்கிறார்கள்.. ஓரம் தள்ளப்படும் நெல் மூட்டைகள்... கவலையில் விவசாயிகள்!
இதன்காரணமாக நெல்மணிகளை காயவைத்து அதன் பின்னரே கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றாலும் 20 சதவீதத்தில் இருந்து 22 சதவீதம் வரை நெல்மணிகளில் ஈரப்பதம் இருந்து வருகிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக கடந்த காலங்களில் விவசாயிகளின் நிலையை புரிந்து கொண்டு ஈரப்பதத்தின் அளவை உயர்த்தி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதே போன்று இந்த ஆண்டும் ஈரப்பதத்தின் சதவீதத்தை 24 சதவீதமாக உயர்த்தி அனைத்து விவசாயிகளின் நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்ய வேண்டும் இல்லையென்றால் விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இதனால் அடுத்தகட்ட சாகுபடி பணிகளை தொடங்க முடியாத நிலை உருவாகும் ஏற்கனவே கடன் பெற்று சாகுபடி செய்த நிலையில் செய்த செலவுத் தொகையைக் கூட எடுக்க முடியாத நிலை உருவாகும். ஆகையால் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு நெல்லின் ஈரப்பதம் சதவீதத்தை உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan joins DMK | தவெகவா? திமுகவா? செங்கோட்டையன் U TURN!மூத்த அமைச்சர் திடீர் சந்திப்பு ஏன்?
Tirunelveli thief Letter |‘’வீட்டுல ஒரு ரூபாய் இல்லைஎதுக்கு யா இத்தனை CCTV.. ’’திருடன் எழுதிய LETTER
DMK MP helps Student |‘’சார் HELP பண்ணுங்க’’ உதவி கேட்ட சிறுவன் வியந்து பார்த்த MP
கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
Sengottaiyan Vijay Meeting: விஜய் வீட்டில் செங்கோட்டையன்.. ஆதவ் அர்ஜுனா காரில் தொடங்கிய புதிய பயணம்!
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
த.வெ.க - வில் சங்கிகள் ஊடுருவல் !! விஜய் எதிர்காலம் கேள்விக்குறி !!திருமாவளவன் பரபரப்பு
Imran Khan: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.? சமூக வலைதளங்களில் பரவும் வதந்தியால் பாக். அடியாலா சிறை வாயிலில் பதற்றம்
Zelensky Vs Trump: திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
திருத்தப்பட்ட அமைதி திட்டம் ஓகே.! சர்ச்சைக்குரியவற்றை ட்ரம்ப்புடன் விவாதிக்க தயார் - ஜெலன்ஸ்கி
Heavy Rain: இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.?
இன்னும் 2 நாள் தான்.! நெருங்கி வரும் பேராபத்து - இத்தனை மாவட்டங்களில் ரெட் அலர்டா.? வானிலை மையம் எச்சரிக்கை
Sengottaiyan: அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
அமித்ஷாவின் செல்லப்பிள்ளை செங்கோட்டையன்.! விஜய்யை காலி செய்ய பாஜக போடும் செம பிளான்.?
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
விழுப்புரம் MP ரவிக்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு! எடப்பாடி பழனிசாமி தவெக-வில் இணைந்தால் ஆச்சரியமில்லை! பாஜக திட்டம் அம்பலம் !
Dharmapuri Power Cut (27-11-2025): ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
ஒகேனக்கல்லில் நாளை 4 மணி நேரம் கரண்ட் இருக்காது - காரணம் என்ன?
Embed widget