மேலும் அறிய

விற்பனைக் கூடங்களில் விளை பொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் கடன் பெறலாம்

விவசாயிகளின் விளை பொருள் சந்தை மதிப்பில் 50 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்  அதிகபட்சமாக 180 நாட்கள் வரை விலை பொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைக்கலாம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் விளை பொருட்களை இருப்பு வைத்து கடன் பெறலாம்
 
திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களை அறுவடை செய்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூலமாக  விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை எப்பொழுது வேண்டுமானாலும் விற்பனை செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைத்து அங்கு அதிகாரிகள் வழங்கும் சான்றிதழை வைத்துக்கொண்டு விவசாயிகள் கடன் பெறலாம் என்ற அறிவிப்பை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

விற்பனைக் கூடங்களில் விளை பொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் கடன் பெறலாம்
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வடுவூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் விற்பனை குழு கட்டுப்பாட்டில் திருவாரூர், பூந்தோட்டம், வலங்கைமான், குடவாசல், மன்னார்குடி, வடுவூர், திருத்துறைப்பூண்டி, மற்றும் கொரடாச்சேரி, ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகிறது.
 
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து அறுவடை பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆகையால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இருப்பு வைக்க மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, மற்றும் வடுவூர் பகுதியில் இயங்கிவரும் விற்பனை கூடங்களில் நவீன கிடங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்ய உள்ள நெல்லினை இருப்பு வைத்து அதிகபட்சமாக மூன்று லட்சம் வரை பொருளீட்டு கடன் பெறலாம். விவசாயிகளின் விளை பொருள் சந்தை மதிப்பில் 50 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்  அதிகபட்சமாக 180 நாட்கள் வரை விலை பொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைக்கலாம் என்ற நிலையில் இதில் முதல் 15 நாட்களுக்கு விவசாயிகள் வாடகை செலுத்தத் தேவையில்லை.

விற்பனைக் கூடங்களில் விளை பொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் கடன் பெறலாம்
மேலும் பொருளீட்டு கடன் தொகைக்கு குறைந்த பட்சம் 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. மேலும் வியாபாரிகளுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் வரை கடன் வழங்கப்படும் நிலையில், இந்த தொகைக்கு 9 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. எனவே குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வடுவூர் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தங்களது விளை பொருட்களை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெற்று பயன்பெறலாம். மேலும் இது குறித்த விவரங்களுக்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளர் களான மன்னார்குடி 9943172177, திருத்துறைப்பூண்டி 9677870366, விற்பனைக் கூட மேற்பார்வையாளர் வடுவூர் 8072033110 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
ABP Premium

வீடியோ

Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Alliance: பொங்கலுக்கு முன்பே தவெக கூட்டணியில் தினகரன், ஓ.பன்னீர்செல்வம்.. அடிச்சு சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
TVK Vijay: கீழே விழுந்த விஜய்.. சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன? வீடியோவை பாருங்க
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..?
Cigarette prices Hike: இனிமே ஒரு சிகரெட் ரூபாய் 72..? "தம்"க்கு குட்பை சொல்றதுதான் நல்லது!
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
TVK Vijay: செல்லும் இடமெல்லாம் அஜித் பெயர்.. நண்பரின் புகழ்பாடும் விஜய் - ஏன்?
Parasakthi: பராசக்தி பவர்ஃபுல்லான படம்.. ஹைப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயன்!
Parasakthi: பராசக்தி பவர்ஃபுல்லான படம்.. ஹைப்பை எகிற வைக்கும் சிவகார்த்திகேயன்!
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
Property Tax ; பெயர் மாற்றத்திற்கு புதிய கட்டணங்கள் அறிவித்த தமிழக அரசு !! எவ்வளவு தெரியுமா ?
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
மூளைவாதம்.. முடங்காத நம்பிக்கை: யுபிஎஸ்சி தேர்வில் ஐஐடி மாணவர் மான்வேந்திர சிங் அபார சாதனை!
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
CBSE: பூதாகரமாகும் நாய்க்கடி; பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு- சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு- புது வழிகாட்டல்கள்
Embed widget