மேலும் அறிய

விற்பனைக் கூடங்களில் விளை பொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் கடன் பெறலாம்

விவசாயிகளின் விளை பொருள் சந்தை மதிப்பில் 50 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்  அதிகபட்சமாக 180 நாட்கள் வரை விலை பொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைக்கலாம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் விளை பொருட்களை இருப்பு வைத்து கடன் பெறலாம்
 
திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களை அறுவடை செய்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூலமாக  விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை எப்பொழுது வேண்டுமானாலும் விற்பனை செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைத்து அங்கு அதிகாரிகள் வழங்கும் சான்றிதழை வைத்துக்கொண்டு விவசாயிகள் கடன் பெறலாம் என்ற அறிவிப்பை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

விற்பனைக் கூடங்களில் விளை பொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் கடன் பெறலாம்
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வடுவூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் விற்பனை குழு கட்டுப்பாட்டில் திருவாரூர், பூந்தோட்டம், வலங்கைமான், குடவாசல், மன்னார்குடி, வடுவூர், திருத்துறைப்பூண்டி, மற்றும் கொரடாச்சேரி, ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகிறது.
 
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து அறுவடை பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆகையால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இருப்பு வைக்க மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, மற்றும் வடுவூர் பகுதியில் இயங்கிவரும் விற்பனை கூடங்களில் நவீன கிடங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்ய உள்ள நெல்லினை இருப்பு வைத்து அதிகபட்சமாக மூன்று லட்சம் வரை பொருளீட்டு கடன் பெறலாம். விவசாயிகளின் விளை பொருள் சந்தை மதிப்பில் 50 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்  அதிகபட்சமாக 180 நாட்கள் வரை விலை பொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைக்கலாம் என்ற நிலையில் இதில் முதல் 15 நாட்களுக்கு விவசாயிகள் வாடகை செலுத்தத் தேவையில்லை.

விற்பனைக் கூடங்களில் விளை பொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் கடன் பெறலாம்
மேலும் பொருளீட்டு கடன் தொகைக்கு குறைந்த பட்சம் 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. மேலும் வியாபாரிகளுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் வரை கடன் வழங்கப்படும் நிலையில், இந்த தொகைக்கு 9 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. எனவே குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வடுவூர் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தங்களது விளை பொருட்களை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெற்று பயன்பெறலாம். மேலும் இது குறித்த விவரங்களுக்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளர் களான மன்னார்குடி 9943172177, திருத்துறைப்பூண்டி 9677870366, விற்பனைக் கூட மேற்பார்வையாளர் வடுவூர் 8072033110 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஜூலை 14-ல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்குப் போறீங்களா? இதோ முழு விவரம்!
ஆனி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்: ஜூலை 14-ல் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்குப் போறீங்களா? இதோ முழு விவரம்!
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Tata Tiago: பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
பட்ஜெட்டில் பாதுகாப்பான EV கார் - 285KM ரேஞ்ச், 4 ஸ்டார் ரேட்டிங் - ரூ.4500 போதும், EMI விவரங்கள்
TNEB : மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
மின் இணைப்பை துண்டித்த பிறகும் மின்சாரத்தை பயன்படுத்தினால் இனி அவ்வளவு தான்- எச்சரிக்கும் மின் வாரியம்
Embed widget