மேலும் அறிய

விற்பனைக் கூடங்களில் விளை பொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் கடன் பெறலாம்

விவசாயிகளின் விளை பொருள் சந்தை மதிப்பில் 50 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்  அதிகபட்சமாக 180 நாட்கள் வரை விலை பொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைக்கலாம்

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் விளை பொருட்களை இருப்பு வைத்து கடன் பெறலாம்
 
திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களை அறுவடை செய்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மூலமாக  விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை எப்பொழுது வேண்டுமானாலும் விற்பனை செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைத்து அங்கு அதிகாரிகள் வழங்கும் சான்றிதழை வைத்துக்கொண்டு விவசாயிகள் கடன் பெறலாம் என்ற அறிவிப்பை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

விற்பனைக் கூடங்களில் விளை பொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் கடன் பெறலாம்
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வடுவூர், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விவசாயிகள் தங்களது விளை பொருட்களை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் விற்பனை குழு கட்டுப்பாட்டில் திருவாரூர், பூந்தோட்டம், வலங்கைமான், குடவாசல், மன்னார்குடி, வடுவூர், திருத்துறைப்பூண்டி, மற்றும் கொரடாச்சேரி, ஆகிய இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகிறது.
 
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி ஒரு லட்சத்து 37 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து அறுவடை பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆகையால் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை இருப்பு வைக்க மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, மற்றும் வடுவூர் பகுதியில் இயங்கிவரும் விற்பனை கூடங்களில் நவீன கிடங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்ய உள்ள நெல்லினை இருப்பு வைத்து அதிகபட்சமாக மூன்று லட்சம் வரை பொருளீட்டு கடன் பெறலாம். விவசாயிகளின் விளை பொருள் சந்தை மதிப்பில் 50 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்  அதிகபட்சமாக 180 நாட்கள் வரை விலை பொருட்களை பாதுகாப்பாக இருப்பு வைக்கலாம் என்ற நிலையில் இதில் முதல் 15 நாட்களுக்கு விவசாயிகள் வாடகை செலுத்தத் தேவையில்லை.

விற்பனைக் கூடங்களில் விளை பொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் கடன் பெறலாம்
மேலும் பொருளீட்டு கடன் தொகைக்கு குறைந்த பட்சம் 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. மேலும் வியாபாரிகளுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் வரை கடன் வழங்கப்படும் நிலையில், இந்த தொகைக்கு 9 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. எனவே குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, வடுவூர் பகுதி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தங்களது விளை பொருட்களை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெற்று பயன்பெறலாம். மேலும் இது குறித்த விவரங்களுக்கு விற்பனைக்கூட கண்காணிப்பாளர் களான மன்னார்குடி 9943172177, திருத்துறைப்பூண்டி 9677870366, விற்பனைக் கூட மேற்பார்வையாளர் வடுவூர் 8072033110 ஆகிய எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

3.3 லட்சம் கோடி, 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
3.3 லட்சம் கோடி, 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
karur power cut: நாளை (23-06-2026) கரூரில் கரண்ட் கட்! - உங்க ஏரியா இருக்கா? உடனே பாருங்க
நாளை (23-06-2026) கரூரில் கரண்ட் கட்! - உங்க ஏரியா இருக்கா? உடனே பாருங்க
Erode power cut: ஈரோட்டில் நாளை (23-06-2026) 8 மணி நேர மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
ஈரோட்டில் நாளை (23-06-2026) 8 மணி நேர மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?
இந்தியாவில் முதல் முறையாக சபரிமலையில் ஒருங்கிணைந்த AI கூட்ட மேலாண்மை? முழு விவரம் இங்கே..
இந்தியாவில் முதல் முறையாக சபரிமலையில் ஒருங்கிணைந்த AI கூட்ட மேலாண்மை? முழு விவரம் இங்கே..

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!
NEET: சினிமாவை விஞ்சிய சம்பவம்; நீட் தேர்வில் ஹைடெக் முறையில் காப்பி அடித்த மாணவர் கைது!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
நாளை முதல் 11, 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி? தேர்வு அட்டவணை!
ஒரே சார்ஜில் 100 கி.மீட்டர் முதல் 170 கி.மீட்டர் மைலேஜ்! Pure EV இ ஸ்கூட்டர்கள், இ பைக் லிஸ்ட் இதான்
ஒரே சார்ஜில் 100 கி.மீட்டர் முதல் 170 கி.மீட்டர் மைலேஜ்! Pure EV இ ஸ்கூட்டர்கள், இ பைக் லிஸ்ட் இதான்
Netanyahu Vs Trump: “அவர் சொன்ன பேச்ச நான் கேப்பேனா.?“ ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நெதன்யாகு.! என்ன சொன்னார்னு பாருங்க
“அவர் சொன்ன பேச்ச நான் கேப்பேனா.?“ ட்ரம்ப்புக்கு ஆப்பு வைத்த நெதன்யாகு.! என்ன சொன்னார்னு பாருங்க
நீட் பயிற்சி மையங்கள் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடி? தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் பகீர்
நீட் பயிற்சி மையங்கள் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடி? தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா தலைவர் பகீர்
Honda ZR-V Launch: டேங்க்க ஃபில் பண்ணா 1000 கிமீ-க்கு மேல போகலாம்; ஹோண்டா ZR-V லாஞ்ச் எப்போ.? விலை, அம்சங்கள் என்ன.?
டேங்க்க ஃபில் பண்ணா 1000 கிமீ-க்கு மேல போகலாம்; ஹோண்டா ZR-V லாஞ்ச் எப்போ.? விலை, அம்சங்கள் என்ன.?
US Iran Deal: அப்பாடா.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தையில் ஓகே ஆன டீல்; ட்ரம்ப் குட்டையை குழப்பியும் சக்சஸ்.!
அப்பாடா.! சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தையில் ஓகே ஆன டீல்; ட்ரம்ப் குட்டையை குழப்பியும் சக்சஸ்.!
Embed widget