மேலும் அறிய

கோவை : குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம்.. குப்பை கொட்டுபவர்களின் வீடியோ கொடுத்தால் ரூ.500 சன்மானம் ; ஊராட்சி நிர்வாகம் அதிரடி

காட்டம்பட்டி ஊராட்சியில் குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும் எனவும், குப்பை கொட்டுபவர்கள் வீடியோ எடுத்துக் கொடுத்தால் ரூ.500 சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் காட்டம்பட்டி பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் குப்பை கொட்டுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், குப்பை கொட்டுபவர்கள் வீடியோ எடுத்துக் கொடுத்தால் ரூ.500 சன்மானம் வழங்கப்படும் எனவும் ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் அருகே காட்டம்பட்டி என்ற ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை வீட்டிற்கே வந்து சென்று வாங்கிச் செல்ல தூய்மைப் பணியாளர்கள் உள்ளனர். அப்படியிருந்தும் பொது மக்களில் பலர் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டிச் செல்கின்றனர். 

இதனை தவிர்க்கும் வகையில் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன் வித்தியாசமான முறையில் விளம்பர போர்டுகளை பொது இடங்களில் அதாவது குப்பை கொட்டப்படும் இடங்களில் வைத்துள்ளார். இந்த போர்டில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், குப்பை கொட்டுபவர்களை வீடியோ படம் எடுத்துக் கொடுத்தால் 500 ரூபாய்  சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூதன முயற்சியால் அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதில்லை.


கோவை : குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம்.. குப்பை கொட்டுபவர்களின் வீடியோ கொடுத்தால் ரூ.500 சன்மானம் ; ஊராட்சி நிர்வாகம் அதிரடி

இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தின் கூறுகையில், “காட்டம்பட்டி ஊராட்சியில் பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் குப்பை கொட்டுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதனை மீறி சிலர் குப்பை கொட்டுவதை தவிர்க்கும் வகையில், குப்பை கொட்டுபவர்கள் வீடியோ எடுத்து தந்தால் சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது முதற்கட்டமாக 4 வார்டுகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பொது மக்கள் இன்னும் ஒத்துழைப்பு வழங்கினால் அனைத்து வார்டுகளிலும் தங்களது தூய்மைப் பணி தொடரும்” எனத் தெரிவித்தனர்.

ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்

கோவை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் பத்து வருடங்களுக்கு மேலாக ஒரே ஊராட்சி அல்லது வட்டாரத்தில் பணியாற்றி வரும் 84 ஊராட்சி செயலாளர்களை பணியிட மாற்றம் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக இந்த பணியிட மாறுதல் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிமாறுதல் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும், பணி மாறுதலை தவிர்க்கும் பொருட்டு விடுப்பில் செல்லக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை மீறி விடுப்பில் செல்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பதில் நபரை எதிர்பார்க்காமல் பணி மாறுதல் வழங்கப்பட்ட பணியிட்டத்தில் உடனடியாக பணியேற்பு செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அதிரடியாக 84 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
TVK VIJAY: முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்ட புஸ்ஸி ஆனந்த்.! புதுச்சேரியில் திடீர் டென்சன் ஆன விஜய்- நடந்தது என்ன.?
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
புதுச்சேரியிலும் தவெக கொடி பறக்கும் .! ரங்கசாமியை விட்டு விட்டு பாஜகவை விளாசிய விஜய்
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா 2026: உலக அரங்கில் தமிழ் இலக்கியம்! 100 நாடுகளின் பங்கேற்பு, வேற லெவல் அனுபவம்!
Russia Crude Oil India: “இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
“இந்தியா எங்க விரும்புதோ அங்க கச்சா எண்ணெய் வாங்க உரிமை இருக்கு“; சப்போர்ட்டுக்கு வந்த ரஷ்யா
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
TVK Vijay: ஒழுங்கா இருக்க மாட்டீங்களா?.. புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த பெண் எஸ்பி!
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
EV New Cars: 2025ல் மாஸ் எண்ட்ரி கொடுத்த மின்சார கார்கள் - விலை, ரேஞ்ச் - டாடா தொடங்கி டெஸ்லா வரை
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Embed widget