மேலும் அறிய

Jos Alukkas Robbery: 'ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையன் பிடிபட்டது எப்படி?’ - துணை காவல் ஆணையாளர் விளக்கம்

ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 5.15 கிலோ கொள்ளை போன நிலையில், 5.12 கிலோ மீட்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட 99.5 சதவீதம் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.

கோவை காந்திபுரம் நூறடிச் சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த நவம்பர் 27 ம் தேதி கொள்ளை சம்பவம் நடந்தது. இது தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியதில், தருமபுரியை சேர்ந்த விஜய் என்பவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் கொள்ளையடிக்க திட்டமிடவும், தப்பிக்கவும் உதவிய விஜய்யின் மனைவி நர்மதா, நகைகளை மறைத்து வைத்த நர்மதாவின் தாய் யோகராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த விஜயை தனிப்படை காவல் துறையினர் சென்னையில் கைது செய்தனர்.

இது தொடர்பாக கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சந்தீஷ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “கடந்த நவம்பர் 27 ம் தேதி இரவு நூறடி சாலையில் உள்ள ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் 5.15 கிலோ நகைகள், வைரம், பிளாட்டினம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியின் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டது. கைரேகை மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தருமபுரியை சேர்ந்த விஜய் (26) இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.


Jos Alukkas Robbery: 'ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையன் பிடிபட்டது எப்படி?’ - துணை காவல் ஆணையாளர் விளக்கம்

இந்த வழக்கில் விஜய்யின் மாமியார் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக இருந்த விஜயை பிடிக்க கஷ்டமாக இருந்தது. தருமபுரி வனப்பகுதியில் விஜய் ஓடிக் கொண்டிருந்தால் பிடிக்க முடியவில்லை. 3 நாட்களுக்கு பிறகு அங்கிருந்து வெளியே வந்த அவர், சென்னை, திருப்பதி என மாறி மாறி சென்று கொண்டிருந்தார். கலஹாஸ்தி சென்ற விஜய், சபரி மலைக்கு மாலை அணிந்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் சிம் வாங்குவதற்காக ஒரு மொபைல் கடைக்கு வந்த போது விஜயை கைது செய்தோம். அவரிடம் இருந்து 700 கிராம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. விஜய் தருமபுரியில் அவரது உறவினர் வீட்டில் திருடிய 42 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 5.15 கிலோ கொள்ளை போன நிலையில், 5.12 கிலோ மீட்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட 99.5 சதவீதம் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.


Jos Alukkas Robbery: 'ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளையன் பிடிபட்டது எப்படி?’ - துணை காவல் ஆணையாளர் விளக்கம்

ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்க வேண்டுமென்ற நோக்கம் விஜய்க்கு இருக்கவில்லை. ஒரு மொபைல் கடையில் திருட முயற்சி செய்துள்ளார். அங்கு கடைக்கு சரக்கு வந்ததை இறக்க ஆட்கள் இருந்ததால், அதைவிட்டு விட்டு அந்த பகுதியில் சுற்றி திரிந்துள்ளார். அப்போது ஒரு சிறிய சந்தில் சென்ற போது ஒரு பிளைவுட் இருந்துள்ளது. அதனை தொட்டதும் சிறிய வழி இருப்பது தெரிந்ததும், உள்ளே செல்ல முயன்றுள்ளார். கொஞ்சம் மேலே ஏறியதும், வெளிச்சம் இருந்த பக்கமாக சென்று கடைக்குள் நுழைந்துள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு இருப்பதை போன்ற உடல்வலு அவருக்கு இயல்பாகவே இருந்துள்ளது. அவர் எடை குறைவாக இருந்ததால் அந்த வழியாக செல்ல முடிந்துள்ளது. கடைக்குள் நுழைந்ததும் முதலில் பணம் எடுக்க தான் முயற்சி செய்துள்ளார். பணத்தை தேடி கிடைக்காததால் ஆங்காங்கே இருந்த நகைகளை எடுத்துள்ளார். அக்கடையில் சில இடங்களில் மட்டுமே அலாரம் அடிக்கும் வகையில் இருந்துள்ளது. இவர் சென்ற வழியில் அலாரம் இருக்கவில்லை.

இப்போது வரை விசாரணை செய்ததில் கொள்ளைக்கு வெளி ஆட்கள் யாரும் உதவி இல்லை என தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. காலை நேரங்களில் ஒரு ஊரில் இருப்பது,  இரவு பேருந்தில் ஏறி பயணம் செய்வது என சுற்றி கொண்டே இருந்தார். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நகைக்கடையில் இரவு காவலில் 50 வயதிற்கு உட்பட்டவர்களை நியமிக்கவும், வைப்ரேசன் சென்சார் பொருத்த வேண்டும் எனவும், இரவு நேரங்களில் நகைகளை லாக்கரில் வைக்கவும், புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும் நகைக்கடைகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
EPS ADMK: நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
நிலத்தோடு கான்கிரீட் வீடு... பட்டு வேட்டி, பட்டு புடவை- வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி பழனிசாமி
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Embed widget