மேலும் அறிய

chengalpattu toll gate "எங்களை வாழவிடுங்கள்" : செங்கல்பட்டு சாலையோர இளநீர் வியாபாரிகள்..!

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி சாலையோரங்களில் இளநீர் விற்க அனுமதி வழங்கவேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

தென்மாவட்டங்களில் நோக்கி  சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்யும்பொழுது , பரனூர் சுங்கச்சாவடி அருகே அமைந்திருக்கும் ஏராளமான சாலையோர இளநீர் கடைகளை  கடைகளை பார்த்திருப்பீர்கள். அங்கு இருக்கும் இளநீர் கடைகளில் அந்த வழியாக செல்லும்பொழுது,  நான் இளநீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

chengalpattu toll gate
 
கடந்த சில நாட்களுக்கு முன் மறைமலைநகரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தேன், வழக்கம்போல் அங்கிருக்கும் இளநீர் கடை நிலையில் இளநீர் குடிக்கலாம் என்று இளநீர் கடையை  தேடியபொழுது, நான் வழக்கமாக குடிக்கும் கடை உட்பட, நிறைய கடைகள் அனைத்தும் அடைத்திருந்தது. வாகனத்தில் இளநீரை வைத்து இரண்டு பேர் மட்டுமே வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.

chengalpattu toll gate
அவர்களை சந்தித்து ஏன் இன்று இவர்கள் கடை போடவில்லை என கேட்டபொழுது,  இந்த இடத்தில் கடை வைத்து வியாபாரம் நடத்துவதற்குக் காவல்துறையினர் கடந்த இரண்டு மாதமாகவே அனுமதி மறுத்துள்ளதாகவும், கடந்த சில நாட்களாக காவல்துறையினரின் தொடர் கெடுபிடியின் எதிரொலியாக கடையை அனைவரும் பூட்டிவிட்டுச் சென்று உள்ளதாக தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் விசாரித்ததில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம், இவ்விடத்தில் இளநீர் விற்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை மனு அளித்திருப்பதாக தெரிவித்தனர்.
chengalpattu toll gate
 
சுங்கச்சாவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரங்களில் இவ்வாறு இளநீர் கடை வைப்பதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுவதால், இவ்விடத்தில் சாலையோர இளநீர் கடை வைக்கக்கூடாது என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் முழுமையாக பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். 

chengalpattu toll gate
இது தொடர்பாக 15 ஆண்டுகளுக்கு மேலாக சுங்கச்சாவடி சாலை ஓரத்தில் கடை வைத்திருக்கும் தேன்மொழி கூறுகையில், ”சுங்கச்சாவடி துவங்கிய காலகட்டத்தில் இருந்து தாங்கள் கடை வைத்து வருவதாகவும், இதை நம்பிதான் தன்  குடும்பம் இருப்பதாகவும் தெரிவித்தார். போக்குவரத்துக்கு எந்தவித இடைஞ்சலும் இன்றி, காவல்துறையினர் அறிவுறுத்தியபடி மண்தரையில் தான் நீண்ட காலமாக வியாபாரம் செய்து வருகிறோம். இளநீர் குடிக்க வருபவர்கள் 5 நிமிடத்திற்கு மேல் இங்கு இருக்க மாட்டார்கள். உடனே இங்கிருந்து சென்று விடுவார்கள். எங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது, இருந்தும் காவல்துறையினர் தொடர்ந்து எங்களை கடைவைக்கக்கூடாது என அப்புறப்படுத்துவது நியாயமற்றது” என தெரிவித்தார்.

chengalpattu toll gate
இதுகுறித்து டில்லிராணி என்பவர் கூறுகையில், ”சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்கு இருக்கும் இளநீர் கடை நம்பித்தான் இருக்கிறோம். மழைநாளில் சுத்தமாக வியாபாரம் இருக்காது. திடீரென்று  முழுமையாக வெளியேற வேண்டும் என்று காவல்துறையினர் கூறுவது எந்த விதத்தில் நியாயம். ஒரு இளநீர் விற்றால் 5 ரூபாய் மட்டுமே லாபம் கிடைக்கும். நாளொன்றுக்கு நாங்கள் 50 இளநீர் விற்றால் கூட 250 ரூபாய் மட்டுமே கிடைக்கும். இதை வைத்துத்தான் எங்கள் குடும்பம் நடத்தி வருகிறோம், மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு எங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தயவுசெய்து மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு , எங்களை வாழ வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

chengalpattu toll gate
 
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ”போக்குவரத்து நெரிசல் காரணமாகத்தான் கடை வைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் . இதுகுறித்து வருவாய் துறையுடன் இணைந்து போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
 
போக்குவரத்துக்கு நெரிசல் இல்லாமல் ஏழைகள் வாழ்வாதாரமும் பாதிக்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை  அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
Embed widget