மேலும் அறிய

chengalpattu toll gate "எங்களை வாழவிடுங்கள்" : செங்கல்பட்டு சாலையோர இளநீர் வியாபாரிகள்..!

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி சாலையோரங்களில் இளநீர் விற்க அனுமதி வழங்கவேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

தென்மாவட்டங்களில் நோக்கி  சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்யும்பொழுது , பரனூர் சுங்கச்சாவடி அருகே அமைந்திருக்கும் ஏராளமான சாலையோர இளநீர் கடைகளை  கடைகளை பார்த்திருப்பீர்கள். அங்கு இருக்கும் இளநீர் கடைகளில் அந்த வழியாக செல்லும்பொழுது,  நான் இளநீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

chengalpattu toll gate
 
கடந்த சில நாட்களுக்கு முன் மறைமலைநகரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தேன், வழக்கம்போல் அங்கிருக்கும் இளநீர் கடை நிலையில் இளநீர் குடிக்கலாம் என்று இளநீர் கடையை  தேடியபொழுது, நான் வழக்கமாக குடிக்கும் கடை உட்பட, நிறைய கடைகள் அனைத்தும் அடைத்திருந்தது. வாகனத்தில் இளநீரை வைத்து இரண்டு பேர் மட்டுமே வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.

chengalpattu toll gate
அவர்களை சந்தித்து ஏன் இன்று இவர்கள் கடை போடவில்லை என கேட்டபொழுது,  இந்த இடத்தில் கடை வைத்து வியாபாரம் நடத்துவதற்குக் காவல்துறையினர் கடந்த இரண்டு மாதமாகவே அனுமதி மறுத்துள்ளதாகவும், கடந்த சில நாட்களாக காவல்துறையினரின் தொடர் கெடுபிடியின் எதிரொலியாக கடையை அனைவரும் பூட்டிவிட்டுச் சென்று உள்ளதாக தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் விசாரித்ததில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம், இவ்விடத்தில் இளநீர் விற்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை மனு அளித்திருப்பதாக தெரிவித்தனர்.
chengalpattu toll gate
 
சுங்கச்சாவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரங்களில் இவ்வாறு இளநீர் கடை வைப்பதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுவதால், இவ்விடத்தில் சாலையோர இளநீர் கடை வைக்கக்கூடாது என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் முழுமையாக பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். 

chengalpattu toll gate
இது தொடர்பாக 15 ஆண்டுகளுக்கு மேலாக சுங்கச்சாவடி சாலை ஓரத்தில் கடை வைத்திருக்கும் தேன்மொழி கூறுகையில், ”சுங்கச்சாவடி துவங்கிய காலகட்டத்தில் இருந்து தாங்கள் கடை வைத்து வருவதாகவும், இதை நம்பிதான் தன்  குடும்பம் இருப்பதாகவும் தெரிவித்தார். போக்குவரத்துக்கு எந்தவித இடைஞ்சலும் இன்றி, காவல்துறையினர் அறிவுறுத்தியபடி மண்தரையில் தான் நீண்ட காலமாக வியாபாரம் செய்து வருகிறோம். இளநீர் குடிக்க வருபவர்கள் 5 நிமிடத்திற்கு மேல் இங்கு இருக்க மாட்டார்கள். உடனே இங்கிருந்து சென்று விடுவார்கள். எங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது, இருந்தும் காவல்துறையினர் தொடர்ந்து எங்களை கடைவைக்கக்கூடாது என அப்புறப்படுத்துவது நியாயமற்றது” என தெரிவித்தார்.

chengalpattu toll gate
இதுகுறித்து டில்லிராணி என்பவர் கூறுகையில், ”சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்கு இருக்கும் இளநீர் கடை நம்பித்தான் இருக்கிறோம். மழைநாளில் சுத்தமாக வியாபாரம் இருக்காது. திடீரென்று  முழுமையாக வெளியேற வேண்டும் என்று காவல்துறையினர் கூறுவது எந்த விதத்தில் நியாயம். ஒரு இளநீர் விற்றால் 5 ரூபாய் மட்டுமே லாபம் கிடைக்கும். நாளொன்றுக்கு நாங்கள் 50 இளநீர் விற்றால் கூட 250 ரூபாய் மட்டுமே கிடைக்கும். இதை வைத்துத்தான் எங்கள் குடும்பம் நடத்தி வருகிறோம், மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு எங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தயவுசெய்து மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு , எங்களை வாழ வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

chengalpattu toll gate
 
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ”போக்குவரத்து நெரிசல் காரணமாகத்தான் கடை வைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் . இதுகுறித்து வருவாய் துறையுடன் இணைந்து போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
 
போக்குவரத்துக்கு நெரிசல் இல்லாமல் ஏழைகள் வாழ்வாதாரமும் பாதிக்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
EVM எந்த சாதனத்துடனும் இணைக்கப்படவில்லை; OTP வைத்து ஹேக் செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் 
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
Breaking News LIVE: வெடிகுண்டு மிரட்டல்.. நெல்லை ரயில் நிலையத்தில் பரபரப்பு!
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Smriti Mandana: இந்திய மண்ணில் முதல் சதம்! தத்தளித்த இந்தியாவை தனி ஆளாக மீட்ட ஸ்மிரிதி மந்தனா!
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
TNPSC Group 4 Answer key: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஆன்சர் கீ எப்போது?- வெளியான தகவல்
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
ஈரோட்டில் நடந்ததுதான் விக்கரவாண்டி இடைத்தேர்தலிலும் நடக்கும் - எடப்பாடி பழனிசாமி
Embed widget