மேலும் அறிய

chengalpattu toll gate "எங்களை வாழவிடுங்கள்" : செங்கல்பட்டு சாலையோர இளநீர் வியாபாரிகள்..!

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி சாலையோரங்களில் இளநீர் விற்க அனுமதி வழங்கவேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்

தென்மாவட்டங்களில் நோக்கி  சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்யும்பொழுது , பரனூர் சுங்கச்சாவடி அருகே அமைந்திருக்கும் ஏராளமான சாலையோர இளநீர் கடைகளை  கடைகளை பார்த்திருப்பீர்கள். அங்கு இருக்கும் இளநீர் கடைகளில் அந்த வழியாக செல்லும்பொழுது,  நான் இளநீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

chengalpattu toll gate
 
கடந்த சில நாட்களுக்கு முன் மறைமலைநகரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தேன், வழக்கம்போல் அங்கிருக்கும் இளநீர் கடை நிலையில் இளநீர் குடிக்கலாம் என்று இளநீர் கடையை  தேடியபொழுது, நான் வழக்கமாக குடிக்கும் கடை உட்பட, நிறைய கடைகள் அனைத்தும் அடைத்திருந்தது. வாகனத்தில் இளநீரை வைத்து இரண்டு பேர் மட்டுமே வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.

chengalpattu toll gate
அவர்களை சந்தித்து ஏன் இன்று இவர்கள் கடை போடவில்லை என கேட்டபொழுது,  இந்த இடத்தில் கடை வைத்து வியாபாரம் நடத்துவதற்குக் காவல்துறையினர் கடந்த இரண்டு மாதமாகவே அனுமதி மறுத்துள்ளதாகவும், கடந்த சில நாட்களாக காவல்துறையினரின் தொடர் கெடுபிடியின் எதிரொலியாக கடையை அனைவரும் பூட்டிவிட்டுச் சென்று உள்ளதாக தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் விசாரித்ததில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம், இவ்விடத்தில் இளநீர் விற்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை மனு அளித்திருப்பதாக தெரிவித்தனர்.
chengalpattu toll gate
 
சுங்கச்சாவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரங்களில் இவ்வாறு இளநீர் கடை வைப்பதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுவதால், இவ்விடத்தில் சாலையோர இளநீர் கடை வைக்கக்கூடாது என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் முழுமையாக பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். 

chengalpattu toll gate
இது தொடர்பாக 15 ஆண்டுகளுக்கு மேலாக சுங்கச்சாவடி சாலை ஓரத்தில் கடை வைத்திருக்கும் தேன்மொழி கூறுகையில், ”சுங்கச்சாவடி துவங்கிய காலகட்டத்தில் இருந்து தாங்கள் கடை வைத்து வருவதாகவும், இதை நம்பிதான் தன்  குடும்பம் இருப்பதாகவும் தெரிவித்தார். போக்குவரத்துக்கு எந்தவித இடைஞ்சலும் இன்றி, காவல்துறையினர் அறிவுறுத்தியபடி மண்தரையில் தான் நீண்ட காலமாக வியாபாரம் செய்து வருகிறோம். இளநீர் குடிக்க வருபவர்கள் 5 நிமிடத்திற்கு மேல் இங்கு இருக்க மாட்டார்கள். உடனே இங்கிருந்து சென்று விடுவார்கள். எங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது, இருந்தும் காவல்துறையினர் தொடர்ந்து எங்களை கடைவைக்கக்கூடாது என அப்புறப்படுத்துவது நியாயமற்றது” என தெரிவித்தார்.

chengalpattu toll gate
இதுகுறித்து டில்லிராணி என்பவர் கூறுகையில், ”சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்கு இருக்கும் இளநீர் கடை நம்பித்தான் இருக்கிறோம். மழைநாளில் சுத்தமாக வியாபாரம் இருக்காது. திடீரென்று  முழுமையாக வெளியேற வேண்டும் என்று காவல்துறையினர் கூறுவது எந்த விதத்தில் நியாயம். ஒரு இளநீர் விற்றால் 5 ரூபாய் மட்டுமே லாபம் கிடைக்கும். நாளொன்றுக்கு நாங்கள் 50 இளநீர் விற்றால் கூட 250 ரூபாய் மட்டுமே கிடைக்கும். இதை வைத்துத்தான் எங்கள் குடும்பம் நடத்தி வருகிறோம், மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு எங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தயவுசெய்து மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு , எங்களை வாழ வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

chengalpattu toll gate
 
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ”போக்குவரத்து நெரிசல் காரணமாகத்தான் கடை வைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் . இதுகுறித்து வருவாய் துறையுடன் இணைந்து போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.
 
போக்குவரத்துக்கு நெரிசல் இல்லாமல் ஏழைகள் வாழ்வாதாரமும் பாதிக்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Watch Video: கோலியை மதிக்காத குட்டி கோலி.. தீயாய் பரவும் வீடியோ - லெஜண்டை அசிங்கப்படுத்திய ராகுல்?
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.!  56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
இளைஞர்களுக்கு ஜாக்பாட்.! 56,768 புதிய வேலைவாய்ப்பு... ரூ.36,860.36 கோடி முதலீடு- அசத்தும் தமிழக அரசு
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Gautam Gambhir: கப் வேணும்னா கோலி, ரோகித் இருக்கணும்.. பேட்டிங்கில் சொன்ன சேதி, கம்பீர் சொல்வது என்ன?
Embed widget