மேலும் அறிய

Chennai Airport: தொடர்ந்து ரத்தாகும் விமானம்...! வாக்குவாதத்தில் ஈடுபடும் பயணிகள்..! காரணம் தான் என்ன ?

சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் சீரடி செல்லும் தனியார் பயணிகள் விமானம், இரண்டாவது நாளாக திடீரென ரத்து.

சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் சீரடி செல்லும் தனியார் பயணிகள் விமானம், இரண்டாவது நாளாக திடீரென  ரத்து. இதனால் அந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகள், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தவித்து, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து இன்று இரவு 7:30 மணிக்கு, சென்னை நாசிக் பயணிகள் விமானத்தில், ரத்து செய்யப்பட்ட சீரடி விமான பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
 
சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் சீரடி செல்லும் (ஸ்பைஜெட்) தனியார் பயணிகள் விமானம்,  பிற்பகல் 2:20 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டும். அந்த விமானம் காலதாமதமாக மாலை 4:10 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் 142 பேர் சீரடி செல்ல முன்பதிவு செய்து இருந்தனர். அவர்களில் பலர் ஏற்கனவே, ஆன்லைன் மூலமாக, ஃவெப் செக் செய்து, போர்டிங் பாஸ் எடுத்துவிட்டனர். அவர்கள் பகல் ஒரு மணி அளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்துவிட்டனர்.
 
இந்த நிலையில், திடீரென அந்த தனியார் விமான நிறுவனம், சென்னை-சீரடி பயணிகள்  விமானம், பிற்பகல் 2:20 மணிக்கு பதிலாக, மாலை 4:10 மணிக்கு தாமதமாக  புறப்பட்டு செல்லும் என்ற அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொண்டு, விமானமே ரத்து என்று அறிவித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், சென்னை விமான நிலையத்திற்குள், அந்த தனியார் விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதம் செய்தனர். அதோடு விமானம் ரத்துக்கு என்ன காரணம்? என்றும் கேட்டனர். ஆனால் தனியார் விமான நிறுவனம், நிர்வாக காரணங்களுக்காக  சீரடி விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
இரவு 7:30  மணிக்கு சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் விமான நிலையத்திற்கு எங்களுடைய பயணிகள் விமானம் ஒன்று சொல்கிறது. அந்த விமானத்தில் நாசிக் சென்று, அங்கிருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சீரடிக்கு, சாலை வழியாக வாகனத்தில் செல்லலாம் என்று கூறினார்கள். ஆனால் பெரும்பாலான பயணிகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அந்த தனியார் விமான நிறுவனம் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. விருப்பப்படுகிறவர்கள் நாசிக் விமானத்தில் சென்று, அங்கிருந்து வாகனத்தில் சீரடி செல்லலாம். இல்லையேல் சீரடி விமான டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு, ரீஃபண்ட் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்து விட்டனர்.
 
இதனால் சிறிது நேரம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள், அதன்பின்பு வேறு வழியின்றி பலர் இரவு 7:30 மணி நாசிக்  விமானத்தில் பயணிக்க, டிக்கெட்டுகளை மாற்றினார்கள். மற்றும் சிலர் பயணங்களை ரத்து செய்து விட்டு திரும்பிச் சென்றனர். இதே விமான நிறுவனம் நேற்றும், சென்னை- சீரடி விமானம் காலதாமதம் என்று முதலில் அறிவித்துவிட்டு, அதன்பின்பு விமானத்தை ரத்து செய்தது. நேற்றும் பயணிகள் இதே போல் அந்த விமான நிறுவன கவுண்டர்களை சூழ்ந்து கொண்டு, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அதன்பின்பு இரவு 7:30 மணிக்கு நாசிக் செல்லும் விமானத்தில் சீரடி விமான பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக இதை போல், சென்னை-சீரடி விமானம் தாமதம் என்று அறிவிக்கப்பட்டு விட்டு, அதன் பின்பு திடீரென விமானம் ரத்து செய்யப்பட்டதும், அதனால் பயணிகள் விமான நிலையத்துக்குள் வாக்குவாதத்தில்  ஈடுபட்டதோடு, ஆர்ப்பாட்டம் செய்ததும், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget