மேலும் அறிய

Chennai Airport: தொடர்ந்து ரத்தாகும் விமானம்...! வாக்குவாதத்தில் ஈடுபடும் பயணிகள்..! காரணம் தான் என்ன ?

சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் சீரடி செல்லும் தனியார் பயணிகள் விமானம், இரண்டாவது நாளாக திடீரென ரத்து.

சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் சீரடி செல்லும் தனியார் பயணிகள் விமானம், இரண்டாவது நாளாக திடீரென  ரத்து. இதனால் அந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகள், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தவித்து, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து இன்று இரவு 7:30 மணிக்கு, சென்னை நாசிக் பயணிகள் விமானத்தில், ரத்து செய்யப்பட்ட சீரடி விமான பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
 
சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் சீரடி செல்லும் (ஸ்பைஜெட்) தனியார் பயணிகள் விமானம்,  பிற்பகல் 2:20 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டும். அந்த விமானம் காலதாமதமாக மாலை 4:10 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் 142 பேர் சீரடி செல்ல முன்பதிவு செய்து இருந்தனர். அவர்களில் பலர் ஏற்கனவே, ஆன்லைன் மூலமாக, ஃவெப் செக் செய்து, போர்டிங் பாஸ் எடுத்துவிட்டனர். அவர்கள் பகல் ஒரு மணி அளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்துவிட்டனர்.
 
இந்த நிலையில், திடீரென அந்த தனியார் விமான நிறுவனம், சென்னை-சீரடி பயணிகள்  விமானம், பிற்பகல் 2:20 மணிக்கு பதிலாக, மாலை 4:10 மணிக்கு தாமதமாக  புறப்பட்டு செல்லும் என்ற அறிவிப்பை திரும்ப பெற்றுக் கொண்டு, விமானமே ரத்து என்று அறிவித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், சென்னை விமான நிலையத்திற்குள், அந்த தனியார் விமான நிறுவன கவுண்டரை சூழ்ந்து கொண்டு கடும் வாக்குவாதம் செய்தனர். அதோடு விமானம் ரத்துக்கு என்ன காரணம்? என்றும் கேட்டனர். ஆனால் தனியார் விமான நிறுவனம், நிர்வாக காரணங்களுக்காக  சீரடி விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
இரவு 7:30  மணிக்கு சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் விமான நிலையத்திற்கு எங்களுடைய பயணிகள் விமானம் ஒன்று சொல்கிறது. அந்த விமானத்தில் நாசிக் சென்று, அங்கிருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சீரடிக்கு, சாலை வழியாக வாகனத்தில் செல்லலாம் என்று கூறினார்கள். ஆனால் பெரும்பாலான பயணிகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அந்த தனியார் விமான நிறுவனம் தங்கள் நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. விருப்பப்படுகிறவர்கள் நாசிக் விமானத்தில் சென்று, அங்கிருந்து வாகனத்தில் சீரடி செல்லலாம். இல்லையேல் சீரடி விமான டிக்கெட்டை கேன்சல் செய்துவிட்டு, ரீஃபண்ட் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்து விட்டனர்.
 
இதனால் சிறிது நேரம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள், அதன்பின்பு வேறு வழியின்றி பலர் இரவு 7:30 மணி நாசிக்  விமானத்தில் பயணிக்க, டிக்கெட்டுகளை மாற்றினார்கள். மற்றும் சிலர் பயணங்களை ரத்து செய்து விட்டு திரும்பிச் சென்றனர். இதே விமான நிறுவனம் நேற்றும், சென்னை- சீரடி விமானம் காலதாமதம் என்று முதலில் அறிவித்துவிட்டு, அதன்பின்பு விமானத்தை ரத்து செய்தது. நேற்றும் பயணிகள் இதே போல் அந்த விமான நிறுவன கவுண்டர்களை சூழ்ந்து கொண்டு, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அதன்பின்பு இரவு 7:30 மணிக்கு நாசிக் செல்லும் விமானத்தில் சீரடி விமான பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக இதை போல், சென்னை-சீரடி விமானம் தாமதம் என்று அறிவிக்கப்பட்டு விட்டு, அதன் பின்பு திடீரென விமானம் ரத்து செய்யப்பட்டதும், அதனால் பயணிகள் விமான நிலையத்துக்குள் வாக்குவாதத்தில்  ஈடுபட்டதோடு, ஆர்ப்பாட்டம் செய்ததும், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget