மேலும் அறிய

Marina Beach: சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு புதுவசதி.. அழகை ரசிக்க இனி தடையில்லை

மாற்றுத்திறனாளிகளும் கடலின் அழகை அருகில் சென்று ரசிக்கும் நோக்கில், சென்னை மெரினா கடற்கரையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய சிறப்பு பாதையை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

கடலின் அழகை ரசிப்பது என்றால் அனைவருக்கும் பிடித்தமானது தான். அதிகாலையிலும், மாலை வேளையிலும் கடல் அலைகள் ஓடி வந்து கால்களை தொட்டுச் செல்லும் வகையில், கடற்கரையில் பொடிநடையாய் நடந்து சென்றால் மனமடையும் பரவசத்திற்கு ஈடில்லை என்றே கூற வேண்டும். ஆனால், வாழ்வின் ஒப்பற்ற மகிழ்ச்சிகளில் ஒன்றான இந்த அனுபவம் அனைவருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் பிறரின் உதவியின்றி கடற்கரைக்கு வருவது என்பது எளிதான காரியமும் அல்ல. வாழ்நாள் முழுவதும் சக்கரநாற்காலியில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு, கடலைகளை உணர்வது என்பது கிடைப்பதற்கரிய வரமாகவே உள்ளது.

சென்னையும், மெரினாவும்:

சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரது விருப்பப் பட்டியலிலும் கட்டாயமாக இருப்பது மெரினா கடற்கரை ஆகும். உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை என்ற பெருமைக்குரிய மெரினா கடற்கரை, வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே பிடித்தமான இடமாக உள்ளது.  குறிப்பாக சென்னை மக்களின் பொழுதுபோக்கு அம்சத்தில் மெரினாவும் நீக்கமுடியா இடத்தை பிடித்துள்ளது. இந்த மகிழ்ச்சி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே, ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, அவர்களும் கடல் அழகை ரசிக்கும் வகையில் மெரினா கடற்கரையில், சக்கர நாற்காலிகளை செலுத்தும் வகையில் சிறப்பு பாதை அமைக்கப்படுகிறது. ஆனால், தங்களுக்கு என சென்னை மெரினா கடற்கரையில் நிரந்தர பாதை அமைக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சக்கர நாற்காலிகளுக்கான புதிய பாதை:

மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று, மெரினா கடற்கரையில் அவர்களுக்கு என சிறப்பு பாதை அமைத்து தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, ரூ.1.14 கோடி செலவில் பாபூல், சிவப்பு மராந்தி மற்றும் பிரேசிலிய மரங்களால் ஆன, சக்கர நாற்காலிகள் செல்லும் வகையிலான புதிய பாதை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. விவேகானந்தம் இல்லம் அருகே சாலையில் இருந்து  கடற்கரை வரையில் 263 மீ நீளம் மற்றும் 3மீ அகலத்துடன் இந்த பாதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக, நடைபாதை வழியாக செல்லும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் கடல் அழகினை ரசிப்பதற்காக சிறப்பு சக்கர நாற்காலி வண்டி வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.

மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி:

சென்னை மாநகராட்சியின் முயற்சியின் மூலம் அமைக்கப்பட்டுள்ள, புதிய பிரத்யேக பாதை மாற்றுத்திறனாளிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இனி மற்றவர்களை போல தாங்களும் கடலுக்கு அருகில் சென்று அதன் பேரழகை ரசிக்க முடியும் எனவும், கடல் அலைகள் தங்களை தீண்டும் அந்த ஆனந்த அனுபவத்தை பெற முடியும் எனவும், மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளனர்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
Parandur Airport: பரந்தூர் விமான நிலையம் வருமா? வராதா? முதல்வர் வசம் செல்லும் ரிப்போர்ட்!
பரந்தூர் விமான நிலையம் வருமா? வராதா? முதல்வர் வசம் செல்லும் ரிப்போர்ட்!
Power of Attorney மூலம் சொத்து வாங்குகிறீர்களா ? இந்த சட்ட சிக்கல்களை தெரிந்து கொள்ளுங்கள்
Power of Attorney மூலம் சொத்து வாங்குகிறீர்களா ? இந்த சட்ட சிக்கல்களை தெரிந்து கொள்ளுங்கள்
" கட்டுப்பாடு இல்லாத பாலியல் உணர்ச்சி " ஆண் உறுப்பை அறுத்த நபர்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By-Election: நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
நமக்குள்ள சண்டை வேண்டாம்..! ”உனக்கு 4, எனக்கு 1” ஆளுங்கட்சியை வீழ்த்த (அ)திமுக தொகுதி பங்கீடு
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
பள்ளிகள் திறப்பு; கல்விக் கட்டணம்- தனியார் பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவைப் பிறப்பித்த அரசு!
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
Thirumavalavan: திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. விஜயிடம் முடிவை சொன்ன திருமாவளவன்!
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
CM VIJAY CABINET LIST : விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
விஜய் அமைச்சரவையில் 5 வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.! யார் யாருக்கு எந்த இடம்.? வெளியான லிஸ்ட்
Annamalai Rajini: ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
ரஜினி ஆதரவில் அண்ணாமலையின் புதுக்கட்சி..! நேபாளம் ட்ரிப் ஓவர், “மக்கள் சக்தி இயக்கம்” போஸ்டர்
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
சென்னையில் பரபரப்பு ; 35 சவரன் நகை திருட்டு வழக்கில் விசாரிக்கப்பட்ட விஜயா கழுத்தறுத்துக் கொலை
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு.! மீறினால் அவ்வளவு தான்- எச்சரிக்கும் சுகாதாரத்துறை
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு.! மீறினால் அவ்வளவு தான்- எச்சரிக்கும் சுகாதாரத்துறை
Embed widget