மேலும் அறிய

Udhayanidhi Stalin: ஒடிஷா மாநில அமைச்சர்களுடன் பேசி தமிழர்களின் நிலை குறித்து அறிந்தேன்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

“ஒடிஷா சென்று ஆய்வு செய்ததில் தமிழர்கள் எவரும் இல்லை. அரசு அதிகாரிகளிடம் கேட்டபோதும் தமிழர்கள் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறினர்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஒடிஷா ரயில் விபத்து மீட்புப் பணிகளை பார்வையிட்டுத் திரும்பிய தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

”முதலமைச்சர் என்னையும் அமைச்சர் சிவசங்கரனையும், அரசு அதிகாரிகளையும் உடனடியாக கிளம்பி செல்ல சொன்னார்கள். சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே உள்ள மருத்துவமனையில் அனைவரும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.

அங்கு சென்று நாங்கள் ஆய்வு செய்ததில் தமிழர்கள் எவரும் இல்லை. தொடர்ந்து அங்கு உடல்கள் வைக்கப்பட்டிருந்த சவக்கிடங்குக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். அங்கும் விசாரித்ததில் தமிழர்கள் எவரும் இல்லை. யாரும் கேட்டு வரவும் இல்லை. அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தபோதும் தமிழர்கள் அனுமதிக்கப்படவில்லை என முதலில் கூறினார்கள்.

அதன் பின் முதலமைச்சருடன் பேசும்போது ரயிலில் பயணித்தவர்களில் 28 பேர் தமிழர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. ஒடிசா அரசு அங்கு ஒரு சிறப்பு உதவி எண்கள் கொடுத்து சேவை மையத்தைத் தொடங்கியுள்ளனர். அங்கு சென்று விசாரித்தபோதும் தமிழர்களிடமிருந்து அழைப்பு வரவில்லை எனத் தெரிவித்தனர்.

8 நபர்களை தொடர்புகொள்ள முடியாமல் இருந்தது. ஆனால் சமீபத்தில் அரசு அதிகாரிகளிடம் பேசியதில் 2 பேரை கண்டறிந்துவிட்டோம். காலையில் பத்திரிகையில் பெயர்கள் அறிவித்திருந்தோம். எஞ்சியுள்ள நபர்களான அருண், கல்பனா, கமல், மீனா, ரகுநாதன், கார்த்திக் ஆகிய ஆறு பயணிகளும் பத்திரமாக இருப்பதாக உடன் பயணித்த பயணிகள் ரயில்வே போலீசாரிடம் தெரிவித்து, அவர்கள் நமக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அவர்களுடைய கோச் எண்கள், D3, D4, D7, D9,S1, S2. இந்த கோச்களில் பயணித்தவர்களுக்கு பாதிப்பு கிடையாது, இது உடன் பயணித்த பயணிகள் கொடுத்திருக்கும் செய்தி.

அரசு அதிகாரிகள் அங்கு தான் தங்கி இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் நல்ல செய்தி வரும்” எனப் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்,  28 நபர்களில், 21 பேரிடம் பேசி விட்டோம். 7 பேரை மட்டும் கண்டறிய முடியவில்லை என முதலமைச்சரிடம் முன்னதாகத் தெரிவித்தோம், அவர் அங்கேயே இருந்து ஆய்வு செய்து திரும்ப சொன்னார். 275 நபர்கள் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். புகைப்படங்கள் வெளியிட்டு உடல்களை கண்டறிந்து ஒப்படைத்து வருகின்றனர். 88 பேரின் உடல்கள் தான் அடையாளம் காணப்பட்டுள்ளன. அங்கும் சென்றும் நாங்கள் பார்த்தோம்.

ஆனால் தமிழ்நாட்டில் இருந்து யாரும் பாதிக்கப்படவில்லை என, விரைவில் நல்ல செய்தி வரும். இந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம், ஒன்றிய அரசு இந்தத் தவறை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த காலத்தில் இவ்வளவு பெரிய விபத்து.

நேற்றைய நிலையில், 8 பேர் உடல்களை கண்டறிய முடியாத நிலை இருந்ததால்,  இறந்தவர்களிடன் உடல்களை ஃபோட்டோ எடுத்து தருமாறு நாங்கள் ஒடிஷா அதிகாரிகளிடம் கேட்டிருந்தோம், அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஒரு மணி நேரம் அங்கு நாங்கள் மருத்துவமனையில் இருந்தோம்.

இது வேதனையான அனுபவம். ஒடிஷா அரசு விபத்து நடந்த இடத்தில் இருந்து மக்களை பேருந்துகள் வைத்து புவனேஸ்வருக்கு பத்திரமாக அனுப்பி வைத்திருக்கிறார்கள். நாங்கள் அங்கு சென்று சேர இரவு 1 மணி ஆகிவிட்டது. அதற்குள் விபத்தில் உயிர் தப்பிய தமிழர்கள் விமானத்தில் இங்கு பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டனர்” எனப் பேசியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget