மேலும் அறிய

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம்: மின்சாரம் தாக்கி இருவர் பலி! பூந்தமல்லி, மாதவரத்தில் அதிர்ச்சி!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலை வைக்க பந்தல் அமைக்கும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து , வாலிபர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் 

விநாயகர் சதுர்த்தியானது கணேஷ் சதுர்த்தி அல்லது கணேஷ் உத்சவ் என்றும் அழைக்கப்படுகிறது. விநாயகப் பெருமான் அனைத்து தடைகளையும் நீக்கி , புதிய தொழில் முயற்சி , முயற்சி அல்லது அறிவுசார் முயற்சிகள் போன்ற எந்தவொரு புதிய செயலின் தொடக்கத்திலும் வணங்கப்படுகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு , பல்வேறு பகுதிகளில் பெரிய மேடைகள் அமைத்து , சிலை வைத்து பொதுமக்கள் வணங்குவர்.

இரும்பு கம்பம் அமைக்கும் பணி - மின்சார பலி

சென்னை பூந்தமல்லி பிராடிஸ் சாலையில் தூம கேது விநாயகர் கோவில் உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு , இக்கோவில் வளாகத்தின் முன் , வண்ண வண்ண கொடிகள் , மின் விளக்குகள் , ஒலி பெருக்கி அமைக்கும் பணி முடிந்து ,  கோவில் முன் பந்தல் அமைக்கும் பணி நடந்தது. இதில் பூந்தமல்லி மேல்மா நகரைச் சேர்ந்த பரத் ( வயது 28 ) மற்றும் அவரது நண்பர்கள் தென்னவன் உள்ளிட்ட நான்கு பேர் ஈடுபட்டனர். இதற்கான இரும்பு கம்பம் அமைக்கும் போது , மின் கம்பியில் உரசியுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து நான்கு பேரும் துாக்கி வீசப்பட்டனர். பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். மூன்று பேர் லேசான காயமடைந்தனர். போலீசார் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு , பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரத்தின் உடலை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பூந்தமல்லி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மாதவரத்தில் மின்சாரம் தாக்கி பலி

சென்னை செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் மண்ணடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரசாத் ( வயது 22 ) இவர் பந்தல் போடும் வேலை பார்த்து வந்தார்.  மாதவரத்தில் ராஜாஜி தெருவில் விநாயகர் சிலை வைப்பதற்காக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மின்கம்பியில் பந்தலுக்கான இரும்பு கம்பம் உரசியுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து பிரசாத் துாக்கி வீசப்பட்டார். அங்கிருந்தோர் அவரை மீட்டு , ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் போகும் வழியிலேயே பரிதாபமாக பலியானார். மாதவரம் போலீசார் உடலை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

தலைப்பு செய்திகள்

TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
" நிலப் பிரச்சனை என வாட்ஸ் அப்பில் மெசேஜ் " போலீஸ் விசாரணையில் அம்பலமான காதலி கொலை பயங்கரம்
" 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை " தட்டி கேட்ட பேரனுக்கும் நேர்ந்த சோகம்
"என்னை காதலிக்கா விட்டால் ஆசிட் ஊற்றுவேன் " 17 வயது சிறுமிக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
Embed widget