மேலும் அறிய

காஞ்சிபுரத்தில் தலைவிரித்தாடும் போலி பட்டு சேலைகள்; உண்மையான பட்டு சேலையை வாங்குவது எப்படி..?

National handloom day: இன்று தேசிய கைத்தறி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் கைத்தறி பட்டு சேலைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து பார்க்கலாம்.

காஞ்சிபுரத்தின் அடையாளம் 
 
கோயில் நகரமான காஞ்சிபுரத்திற்கு, தனி அடையாளம் என்பது பட்டு சேலைகள் தான். காஞ்சிபுரம் பட்டு என்பது, இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் புகழ்பெற்றது. கைகளால் நேர்த்தியாக செய்யப்படும் காஞ்சிபுரம் பட்டுக்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதனால், காஞ்சிபுரம் பட்டு புடவைகளை வாங்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமனோர் படையெடுப்பது வழக்கம். ஆனால் சமீப காலமாக, 'போலி பட்டு' புடவைகளின் புழக்கம் அதிகரித்துள்ளன. காஞ்சிபுரம் பகுதியில் தனியார் கடைகளின் ஆதிக்கம் வந்த பிறகே, இந்த நிலைமை ஏற்பட்டதாக குமுறுகின்றனர் பட்டு நெசவாளர்கள். தனியார் கடை ஆதிக்கங்களால், கூட்டுறவு கடைகளால் போட்டியிட்டு விற்பனை செய்ய முடியாமல் போகிறது. நலிந்த பட்டு நெசவாளர்கள் சங்கங்களின் நிலைமையோ, இன்னும் மோசமாக இருக்கிறது. அசல் காஞ்சிபுரம் பட்டு சேலை எப்படி கண்டறிவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
 

காஞ்சிபுரத்தில் தலைவிரித்தாடும் போலி பட்டு சேலைகள்; உண்மையான பட்டு சேலையை வாங்குவது எப்படி..?
 
உண்மையான காஞ்சிபுரம் பட்டு சேலையை கண்டறிவது எப்படி ?
 
கையால் செய்யப்பட்ட பட்டு சேலைக்கு, கைத்தறி முத்திரை கொடுக்கப்பட்டிருக்கும். அசல் பட்டு இழைகளை பயன்படுத்தி செய்யப்பட்டதற்கு, ' சில்க் மார்க் ' முத்திரை கொடுக்கப்பட்டிருக்கும். அதேபோன்று மத்திய அரசின் கைத்தறி முத்திரை. காஞ்சிபுரத்தில் செய்யப்பட்ட பட்டிற்கு 'புவிசார் குறியீடு' முத்திரை. கூட்டுறவு சங்கங்களால் செய்யப்பட்டு இருந்தால் கூட்டுறவு சங்கங்களின் முத்திரை ஆகியவை இடம் பெற்றிருக்கும். இவற்றில் 5 முத்திரைகள் இருந்தால், அவை காஞ்சிபுரம் பட்டு சேலை என்பதற்கான அடையாளங்கள். 
காஞ்சிபுரத்தில் தலைவிரித்தாடும் போலி பட்டு சேலைகள்; உண்மையான பட்டு சேலையை வாங்குவது எப்படி..?

ஜரிகையில் உண்மைத்தன்மை தெரிந்து கொள்ள
 
காஞ்சிபுரம் பட்டுக்கு தனி அடையாளத்தை கொடுப்பது அதன் ஜரிகை அமைப்புதான், ஜரிகையை கண்டறிய தமிழ்நாடு ஜரிகை உற்பத்தி நிறுவனம் சார்பில் , காஞ்சிபுரம் காந்தி சாலையில் ஜரிகை பரிசோதனை நிலையம் உள்ளது. அங்கு ஒரு சேலையில் ஜரிகையில் உண்மை திறனை தெரிந்து கொள்ள, 80 ரூபாய் கொடுத்தால் போதும். பல ஆயிரக்கணக்கான, ரூபாய் செலவு செய்து வாங்கப்படும் பட்டுப் புடவைகளின் உண்மைத் தன்மையை ₹80 ரூபாயில் தெரிந்து கொள்வது அவசியமானது. பட்டு சேலைக்கு மதிப்பு என்பது இந்த ஜரிகை மூலமாகவே கிடைக்கிறது. பழைய பட்டு சேலைகளை வாங்கும் நபர்களை பார்த்திருப்போம், அவர்கள் இந்த ஜரிகைக்காகவே பழைய பட்டு சேலைகளை வாங்குகின்றனர்.
 
போலி ' சில்க் மார்க் ' லேபிள்
 
“சில்க்மார்க்” முத்திரை என்பது இயற்கையான பட்டுநூல் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பட்டு ஜவுளிகளில் அவற்றின் உண்மை தன்மையினை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வதற்கு பயன்படுத்துவதாகும். இந்நிலையில் பாலியெஸ்டர் நூல்களை கலந்து உற்பத்தி செய்யப்படும் சேலைகளில் பிரத்யேக “சில்க்மார்க்” முத்திரை லேபிள்களை இணைத்து, விற்பனை செய்வது செய்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன. சமீபத்தில் கூட சில கடைகளில், போலி பட்டுச்சேலை விற்பனை செய்ததாக பறக்கும் படையினர் சோதனையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரத்தில் தலைவிரித்தாடும் போலி பட்டு சேலைகள்; உண்மையான பட்டு சேலையை வாங்குவது எப்படி..?
 
 விழிப்புணர்வு அவசியமாகிறது
 
வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருவதால், நகரின் நுழைவு வாயில்களில் பல்வேறு மொழிகளில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது. நகரின் நுழைவு வாயில்களிலேயே, பல இடைத்தரகர்கள் நின்று கொண்டு, பட்டுச்சேலை வாங்க வரும் வெளியூர் நபர்களை தவறான கடைகளுக்கு அழைத்துச் செல்வதாக குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் உள்ளன.
 
விசைத்தறியால் தொடரும் பிரச்னைகள் 
 
கைத்தறி ரகங்களை விசைத்தறியில், உற்பத்தி செய்வதால் கைத்தறி நெசவாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெசவாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று தேசிய கைத்தறிவு தினத்தை முன்னிட்டு, காஞ்சிபுரத்தில் நெசவாளர்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
 
நீங்களும் அடுத்த முறை காஞ்சி பட்டு எடுக்க சென்றால், இவற்றை கவனத்தில் வைத்துக் கொண்டு, உண்மையான பட்டு சேலையை வாங்கி, நெசவாளர்களின் வாழ்க்கையை வளமாக்குவோம். 
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE:  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!PMK vs DMK  : திமுக நிர்வாகி வீடுபுகுந்து வேட்டி சேலைகள் பறிமுதல்! பாமகவினர் அதிரடிBhole Baba Hathras Stampede  : 132 பேர் பலியும்.. மார்டன் சாமியாரும்..யார் இந்த போலே பாபா?Pawan kalyan salary  : ”எனக்கு சம்பளம் வேணாம்” பவன் கல்யாண் ட்விஸ்ட்! காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE:  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்ற 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
Rahul Gandhi: எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
எங்கப்பா ரூ.1 கோடி? அக்னிவீர் திட்டம் பற்றி பொய் சொன்ன ராஜ்நாத் சிங்? ராகுல் காந்தி அதிரடி
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Cabinet Committees: வாவ்..! புதிய கேபினட் குழுக்களை அமைத்த மத்திய அரசு - 2014க்கு பின் பாஜகவில் இப்படி ஒரு மாற்றமா..!
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
Team India: போட்றா வெடிய..! உலகக் கோப்பையுடன் தாயகம் வந்த இந்திய கிரிக்கெட் அணி - ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
T20 World Champion Team: பிரதமருடன் காலை உணவு - மும்பையில் இன்று பிரமாண்ட பேரணிக்கு தயாராகும் இந்திய அணி..!
LK Advani: பாஜக தொண்டர்கள் ஷாக்..! மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
LK Advani: பாஜக தொண்டர்கள் ஷாக்..! மூத்த தலைவர் எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி..!
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
மீண்டும் ஜார்க்கண்ட் முதலமைச்சராகும் ஹேமந்த் சோரன்.. சம்பாய் சோரன் அப்செட்டா?
Embed widget